செய்திகள்

எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தி.மு.க. உட்பட பல்வேறு கட்சியினர் அண்ணா தி.மு.க.வில் இணைந்தனர்

சேலம், ஜன. 5: எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தி.மு.க., அ.ம.மு.க., கம்யூனிஸ்ட் உட்பட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், தொண்டர்களும் அண்ணா தி.மு.க.வில் இணைந்தனர். அண்ணா தி.மு.க. பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமியை, சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று (4–ந் தேதி), ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டம், தி.மு.க-வைச் சேர்ந்த, வி.சி. வரதராஜ் தலைமையில், அக்கட்சியைச் சேர்ந்த சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியக் குழு முன்னாள் வார்டு உறுப்பினர் வி.பி. முத்துசாமி, […]

Loading

செய்திகள்

சென்னை, சேலம் உள்பட 4 மாவட்டங்களில் ரூ.49 கோடியில் செயற்கை இழை ஓடுதள பாதை: உதயநிதி ஸ்டாலின் அடிக்கல்

சென்னை, ஜன. 1– துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், 48.76 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சென்னை, செங்கல்பட்டு, சேலம் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் செயற்கை இழை ஓடுதளப் பாதை மறுசீரமைக்கும் பணி, சர்வதேச தரத்திலான டிராப் மற்றும் ஸ்கீட் துப்பாக்கிச் சுடுதல் பயிற்சி அகாடமி, புதிய செயற்கை இழை ஓடுதள பாதை உள்ளிட்ட விளையாட்டு உட்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். குறிஞ்சி முகாம் அலுவலத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறையின் […]

Loading

செய்திகள்

நிலத்தகராறு: சேலத்தில் தி.மு.க. நிர்வாகி சுட்டுக்கொலை

சேலம், நவ. 22: சேலத்தில் நிலத்தகராறில் திமுக நிர்வாகி சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சேலம் மாவட்டம் கருமந்துறை அருகே உள்ளது கரிய கோவில். இங்குள்ள கிரான்காடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 45) விவசாயி. கிரான் காடு திமுக கிளை செயலாளராக உள்ளார். இவருக்கும் உறவினர்கள் ராஜமாணிக்கம் மற்றும் பழனிச்சாமி ஆகியோருக்கும் நிலத்தகராறு இருந்து வந்தது. இவர்களது சண்டையை அவ்வப்போது அக்கம் பக்கத்தினர் சமாதானம் செய்து வந்தனர். நேற்று நள்ளிரவு ராஜேந்திரன் வீட்டு […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

சேலத்தில் ஏழை மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி : எடப்பாடி வழங்கினார்

சேலம், நவ.17: சேலம் மாநகர் மாவட்டம் கொண்டலாம்பட்டி பகுதி 50-வது வார்டு வட்ட அண்ணா தி.மு.க. செயலாளராக இருப்பவர் பிரேம்குமார். இவர் நடத்தி வரும் கல்வி அறக்கட்டளை சார்பில் ஏழை, எளிய மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி மற்றும் கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி சேலம் நெடுஞ்சாலை நகரில் நேற்று நடந்தது. இதில், அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு முதல் கட்டமாக 12 மாணவர்களுக்கு இலவசமாக மடிக்கணினியை வழங்கி தொடங்கி வைத்தார். அப்போது அவர், […]

Loading

செய்திகள்

சேலம் அருகே நகைக்காக 2 மூதாட்டிகள் கொலை: கொலையாளியை சுட்டுப்பிடித்த போலீசார்

சேலம், நவ. 7– சேலம் அருகே நகைக்காக 2 மூதாட்டிகள் கொலை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த கொலையாளியை போலீசார் சுட்டுப்பிடித்தனர். சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே உள்ள இடங்கணசாலையை அடுத்த தூதனூர் காட்டுவளவு பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து மனைவி பாவாயி (வயது 70). இவருக்கு 2 மகன்களும், 1 மகளும் உள்ளனர். கணவர் மாரிமுத்து இறந்துவிட்டதால் மகன் கந்தசாமியுடன் பாவாயி வசித்து வந்தார். மேலும் பாவாயி அவ்வப்போது கூலி வேலைக்கு செல்வாராம். இந்த நிலையில் சில […]

Loading

செய்திகள்

சேலத்தில் வீட்டிற்குள் புகுந்த பாம்பை பிடிக்க முயன்ற இளைஞர்: கட்டை விரலில் விஷம் ஏறி பலி

சேலம், ஆக. 28– வீட்டிற்குள் புகுந்த நல்ல பாம்பை விளையாட்டாக பிடிக்க முயன்ற இளைஞர், பாம்பு கடித்ததில் உயிரிழந்திருக்கிறார். இந்த சம்பவம் சேலத்தில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சேலம் மாவட்டம் நிலவரப்படி பகுதியை சேர்ந்த ராஜமுருகன்(21) என்ற இளைஞர் வெல்டிங் வேலை செய்து வருகிறார். தந்தையை இழந்த இளைஞர் ராஜமுருகன் உடல்நலம் பாதிக்கப்பட்ட தாயுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்றிரவு தனது வீட்டிற்குள் நுழைந்த பாம்பை பிடிக்க ராஜமுருகன் முயன்றிருக்கிறார். ஆனால் இதற்கு முன்னர் பாம்புகளை பிடித்து […]

Loading

செய்திகள்

தூத்துக்குடி நகைக் கடையில் தங்கக் கட்டிகள் திருட்டு: மும்பை தப்ப முயன்ற இளைஞர் சேலத்தில் கைது

சேலம், ஆக. 26– தூத்துக்குடி நகைக் கடையில் தங்கக் கட்டிகளை திருடிவிட்டு ரெயிலில் மும்பை தப்ப முயன்ற இளைஞர் சேலம் ரெயில் நிலையத்தில் கைது செய்யப்பட்டார். தூத்துக்குடி நகைக்கடையில் தங்கக் கட்டிகளை திருடிய இளைஞர் மும்பை தப்பிச் செல்ல முயற்சித்த நிலையில், சேலம் ரயில்வே காவல்துறையினர் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர்.தூத்துக்குடி, டபிள்யூசிசி சாலையைச் சேர்ந்தவர் விகாஸ் சண்டி. இவர் அதே பகுதியில் தங்க நகைகள் பழுது பார்க்கும் கடை நடத்தி வருகிறார். இந்தக் கடையில் பணியாற்றி […]

Loading