செய்திகள்

பா.ம.க. இளைஞர் சங்க தலைவராக ஜி.கே.மணி மகன் நியமனம்: ராமதாஸ் அறிவிப்பு

திண்டிவனம், அக்.3- பா.ம.க. இளைஞர் சங்க தலைவராக ஜி.கே.மணி மகன் தமிழ்குமரனை டாக்டர் ராமதாஸ் நியமனம் செய்தார். விழுப்புரம் மாவட்டம் பட்டானூரில் கடந்த 28.12.2024 அன்று நடைபெற்ற பா.ம.க. சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் பா.ம.க. இளைஞர் சங்க தலைவராக தனது பேரனான முகுந்தனை (டாக்டர் ராமதாசின் மூத்தமகள் காந்திமதியின் மகன்) நியமிப்பதாக டாக்டர் ராமதாஸ் அறிவித்தார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த டாக்டர் அன்புமணி, மைக்கை மேஜையில் வீசிவிட்டு வெளியேறினார். அதன்பிறகுதான் தந்தை, மகனான டாக்டர் ராமதாசுக்கும், […]

Loading

செய்திகள்

எல்லையில் அத்துமீறினால் தக்க பதிலடி கொடுக்கப்படும்: பாகிஸ்தானுக்கு, ராஜ்நாத் சிங் எச்சரிக்கை

பூஜ், அக்.3- குஜராத்தின் ‘சர் கிரீக்’ பகுதியில் அத்துமீறினால் தக்க பதிலடி கொடுக்கப்படும் என பாகிஸ்தானுக்கு ராஜ்நாத் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார். குஜராத்தின் ரன் ஆப் கட்ச் மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே 96 கி.மீ நீளமுள்ள முகத்துவாரப்பகுதி சர் கிரீக் என அழைக்கப்படுகிறது. இரு நாடுகளுக்கு இடையேயான கடல் எல்லை குறித்து இரு தரப்புக்கு இடையே மாறுபட்ட நிலைப்பாடுகள் உள்ளதால் இது ஒரு சர்ச்சைக்குரிய பகுதியாகக் கருதப்படுகிறது. இந்த நிலையில் குஜராத்தின் எல்லைப்பகுதியான பூஜ்ஜில் உள்ள ராணுவ […]

Loading

செய்திகள்

நாளை முதல் அமெரிக்காவில் 12-ஆம் உலகத் தமிழர் பொருளாதார மாநாடு

Box 1உலகத் தலைவர்கள், பொருளாதார வல்லுநர்கள், தொழில்துறையினர் பங்கேற்பு -: அமெரிக்காவில் இருந்துஆர் முத்துக் குமார் :- வாஷிங்டன் டிசி அருகே மேரிலாந்து மாநிலம் பெதெஸ்டா நார்த் மாரியட் ஹோட்டல் & கான்பரன்ஸ் செண்டரில், 12-ஆம் உலகத் தமிழர் பொருளாதார மாநாடு மற்றும் உலக பொருளாதார உச்சிமாநாடு அக்டோபர் 3 முதல் 5 வரை நடைபெற உள்ளது. உலகத் தமிழர் பொருளாதார அறக்கட்டளை மற்றும் அமெரிக்கா-இந்தியா SME கவுன்சில் இணைந்து நடத்தும் இம்மாநாடு, உலகத் தமிழர்களின் பொருளாதார […]

Loading

செய்திகள்

மும்பையில் அக்டோபர் 15, 16 ”சாய்  – தி மியூசிக்கல்” ஆன்மீக இசை, நாடக நிகழ்ச்சி 

மும்பை, அக். 1 –புகழ்பெற்ற தயாரிப்பாளர் அஷ்வின் கிட்வானியின் ஏஜிபி வேர்ல்ட் தயாரிப்பில், ”சாய் – தி மியூசிக்கல்” எனும் ஆன்மிக இசை நாடகம் மும்பையில் அக்டோபர் 15 மற்றும் 16 அன்று தேசிய நடனக் கலை அரங்கம் (என்.சி,பி.ஏ) , ஜம்ஷெட் பாபா தியேட்டரில் முதல் முறையாக நடைபெற உள்ளது. அமைதி மற்றும் நம்பிக்கை என்ற சாய் பாபாவின் போதனைகளின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட இந்த மியூசிக்கல், உலக நம்பிக்கைகளின் எல்லைகளைத் தாண்டி ஆன்மீகத்தை வெளிப்படுத்தும் விதமாக […]

Loading

செய்திகள்

த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தை கைது செய்ய 3 தனிப்படைகள் அமைப்பு

சென்னை, அக். 1– கரூர் கூட்டநெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தை கைது செய்ய 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை முடுக்கிவிடப்பட்டுள்ளது. கரூர் கூட்டநெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக கரூர் டவுன் போலீசார் த.வெ.க. கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் (வயது 49), பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், மாநில இணை செயலாளர் நிர்மல்குமார் மற்றும் சிலர் என குறிப்பிட்டு 5 […]

Loading

செய்திகள்

போலீசாரின் அறிவுரைகளை த.வெ.க.வினர் ஏற்கவில்லை; தமிழக அரசு அதிகாரிகள் விளக்கம்

சென்னை, அக்.1- கரூரில் கூட்ட நெரிசல் எப்படி ஏற்பட்டது என்பது குறித்தும், ஆம்புலன்ஸ்கள் வருகை குறித்து தமிழக அரசு அதிகாரிகள், டிஜிபி மற்றும் ஏடிஜிபி ஆகியோர் வீடியோ வெளியிட்டு ஆதாரத்துடன் விளக்கம் அளித்தனர். கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதன் பின்னணியில் சதி இருக்கலாம் என தவெகவினர் குற்றம் சுமத்தி வருகின்றனர். இது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. இந்நிலையில் நேற்று விஜய் வீடியோ […]

Loading

செய்திகள்

ரயில் பயணிகள் இன்று முதல் ஆதார் இருந்தால் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும்

சென்னை, அக். 1– ரெயில்களில் டிக்கெட் முன்பதிவின் போது ஆதார் எண் கட்டாயம் என்ற புதிய நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்தது. இன்று முதல் முன்பதிவுக்கான நேரம் தொடங்கிய முதல் 15 நிமிடங்களுக்கு ஆதாருடன் இணைக்கப்பட்ட ஐஆர்சிடிசி கணக்குகளை கொண்ட பயணிகள் மட்டுமே இனி டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியும். அதாவது எந்த ஒரு ரயிலுக்கும் ஆதார் பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே முதல் 15 நிமிடம் அனுமதிக்கப்படும். ஆதார் இணைப்பு இல்லாதவர்கள், இந்த நேரத்தில் டிக்கெட்டுகளை […]

Loading

செய்திகள்

ஆயுதபூஜை தொடர் விடுமுறை; அரசு பஸ்களில் 6.91 லட்சம் பேர் பயணம்

கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் அமைச்சர் சிவசங்கர் ஆய்வு சென்னை, அக். 1– ஆயுதபூஜை தொடர் விடுமுறையை முன்னிட்டு அரசு பஸ்களில் 6.91 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். தமிழக அரசு போக்குவரத்துத் துறை சார்பில் வார இறுதி நாட்கள் மற்றும் ஆயுத பூஜையை (தொடர் விடுமுறையை) முன்னிட்டு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. சென்னையிலிருந்து தினசரி இயக்கக் கூடிய 2,092 பேருந்துகளுடன், 26.09.2025 அன்று 450 சிறப்புப் பேருந்துகளும், 27.09.2025 அன்று 696 சிறப்பு பேருந்துகளும், 29.09.2025 அன்று […]

Loading

செய்திகள்

எண்ணூர் அனல் மின் நிலையத்தில் கட்டுமான சாரம் சரிந்து விழுந்து 9 வடமாநில தொழிலாளர்கள் பலி

பிரதமர் மோடி, முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்: நிவாரண நிதி அறிவிப்பு சென்னை, அக்.1-– எண்ணூர் அனல் மின் நிலையத்தில் கட்டுமான பணிக்காக அமைக்கப்பட்டு இருந்த சாரம் சரிந்து விழுந்து வடமாநில தொழிலாளர்கள் 9 பேர் பலியானார்கள். இந்த சம்பவத்துக்கு பிரதமர் மோடியும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் இரங்கல் தெரிவித்துள்ளனர். திருவள்ளுர் மாவட்டம் எண்ணூரில் அனல் மின்நிலையம் உள்ளது. இங்குள்ள 4-வது அலகில் விரிவாக்கப்பணி நடந்து வருகிறது. நுழைவு வாயிலின் முகப்பு பகுதியில் கட்டுமான பணிக்காக, இரும்பு கம்பிகளை கொண்டு […]

Loading

செய்திகள்

தி.நகர் தெற்கு உஸ்மான் சாலை – சிஐடி நகர் பிரதான சாலையை இணைக்கும் மேம்பாலம் : ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை, செப் 30– முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று, சென்னை மாநகராட்சியின் சார்பில் சென்னை, சி.ஐ.டி. நகர் தியாகராய நகரில் தெற்கு உஸ்மான் சாலை மற்றும் சி.ஐ.டி. நகர் பிரதான சாலையை இணைக்கும் வகையில் 164.92 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட மேம்பாலத்தை திறந்து வைத்தார். இதற்கு மறைந்த தியாகராய நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரின் நினைவாக “ஜெ. அன்பழகன் மேம்பாலம்” என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. சிஐடி நகர் பிரதான சாலையில் நிகழ்ச்சி நடந்தது. பெருகிவரும் போக்குவரத்தினைக் […]

Loading