செய்திகள் நாடும் நடப்பும்

சேலத்தில் ஏழை மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி : எடப்பாடி வழங்கினார்

Makkal Kural Official

சேலம், நவ.17:

சேலம் மாநகர் மாவட்டம் கொண்டலாம்பட்டி பகுதி 50-வது வார்டு வட்ட அண்ணா தி.மு.க. செயலாளராக இருப்பவர் பிரேம்குமார். இவர் நடத்தி வரும் கல்வி அறக்கட்டளை சார்பில் ஏழை, எளிய மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி மற்றும் கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி சேலம் நெடுஞ்சாலை நகரில் நேற்று நடந்தது.

இதில், அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு முதல் கட்டமாக 12 மாணவர்களுக்கு இலவசமாக மடிக்கணினியை வழங்கி தொடங்கி வைத்தார். அப்போது அவர், மாணவர்கள் அனைவரும் நன்றாக உயர்கல்வி படித்து வாழ்வில் முன்னேற்றம் அடைய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *