விருதுநகர், அக். 5–
சிவகாசி அருகே பட்டாசு கடையில் திடீரென ஏற்பட்ட வெடி விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் தீயில் வெடித்து சிதறியது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே கோனம்பட்டியில் உள்ள ஒரு தனியார் பட்டாசு கடை ஒன்று இயங்கி வந்தது. இந்த கடையில் இன்று காலை வழக்கம் போல் பணியாளர்கள் பட்டாசுகளை விற்பனை செய்து கொடிருந்தனர். அப்போது திடீரென பட்டாசுகளை சேகரித்து வைத்திருந்த குடோனில் இருந்து புகை வெளியேறியது. இதனைக்கண்ட பணியாளர்கள் அலறியடித்துக்கொண்டு வெளியில் சென்றனர்.
இதனையடுத்து பட்டாசுகள் அடுத்தடுத்து வெடிக்க தொடங்கின. பின்னர் இது குறித்து தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பட்டாசு கடையில் ஏற்பட்டுள்ள தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இந்த பட்டாசு கடையில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் வெடித்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று தெரியவந்துள்ளது.
![]()





