செய்திகள்

“அலைகள்” திட்டம் மூலம் மீனவக் குடும்பங்களுக்கு ரூ.22.5 லட்சம் செலவில் நலத்திட்ட உதவிகள்

சென்னை, ஜூலை 12– தமிழ்நாடு அரசு சார்பில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆணையர் அலுவலகத்தில், அதன் செயலாளர் தலைமையில் தேசிய மீன்வளர்ப்போர் தினம் கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 10–-ம் நாள் தேசிய மீன்வளர்ப்போர் தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் ஆணையர் இரா. கஜலட்சுமி துவக்கவுரை வழங்கி, மீன் உற்பத்தி அதிகரித்திட அரசு செயல்படுத்தும் திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார். மேலும், மீன்வளர்ப்போரை ஊக்குவிக்க அரசு செயல்படுத்தும் திட்டங்கள் குறித்து அரசு செயலாளர் சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் […]

Loading

செய்திகள்

75 வயதானால் மற்றவர்களுக்கு வழி விடுங்கள்: ஆர். எஸ். எஸ். தலைவர் பேச்சால் பரபரப்பு

நாக்பூர், ஜூலை 11– 75 வயது ஆகிவிட்டால் மற்றவர்களுக்கு வழி விடுங்கள் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்தின் கருத்து பிரதமர் மோடிக்கு பொருந்தக்கூடியதாக இருப்பதை சுட்டிக்காட்டி காங்கிரஸ் விமர்சித்துள்ளது. மராட்டிய மாநிலம் நாக்பூரில் நடந்த ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பகவத் பேசுகையில், தலைவர்கள் 75 வயதில் ஓய்வு பெற வேண்டும். தாங்களாகவே ஒதுங்கி நின்று மற்றவர்களை உள்ளே வரவிடுங்கள் என்று கூறினார். மோகன் பகவத்தின் இந்த பேச்சு தற்போது அரசியல் களத்தில் […]

Loading

செய்திகள்

ஏ.ஐ. மூலம் பாக்டீரியாக்களை அழிக்கும் புரதம்: ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் சாதனை

மெல்போர்ன், ஜூலை 10– செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, ஆண்டிபயாடிக் எதிர்ப்பு பாக்டீரியாக்களான ஈ.கோலியை அழிக்கும் ஒரு செயற்கைப் புரதத்தை ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இது அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் ஒரு பெரிய திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது. மெல்போர்னைச் சேர்ந்த மோனாஷ் பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிக்கையில், “ஏ.ஐ.யைப் பயன்படுத்தி ஒரு பயன்படுத்தக்கூடிய உயிரியல் புரதத்தை ஆஸ்திரேலியக் குழு உருவாக்கியது இதுவே முதல் முறை. இதன் மூலம் அமெரிக்கா மற்றும் சீனா போன்ற நாடுகளுடன் இணைந்து, விரைவான, […]

Loading

செய்திகள்

நானே இப்போது பாமக தலைவர்: தேர்தல் ஆணையத்துக்கு மருத்துவர் ராமதாஸ் கடிதம்

சென்னை, ஜூலை 10– அன்புமணி பதவி காலம் மே மாதத்துடன் நிறைவடைந்து விட்டதால், நானே இப்போது பாமக தலைவராக உள்ளேன் என தேர்தல் ஆணையத்துக்கு மருத்துவர் ராமதாஸ் கடிதம் எழுதி உள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி ராமதாஸை கட்சியின் தலைவர் பதவியில் இருந்து நீக்குவது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்தக் கடிதத்தில், ராமதாஸ் தானே கட்சியின் தலைவர் என்று உறுதிப்படுத்தியதாகவும், அன்புமணியின் செயல்பாடுகளால் கட்சியில் […]

Loading

செய்திகள்

15 அடி நீளம் கொண்ட ராஜநாகத்தை பிடித்த கேரள பெண் வன ஊழியரின் துணிச்சல்

திருவனந்தபுரம், ஜூலை 8– குடியிருப்புப் பகுதியில் 15 அடி நீளமும் 20 கிலோ எடையும் கொண்ட ராஜநாகத்தை கேரள பெண் வனத்துறை அதிகாரி ரோஷ்னி லாவகமாக பிடித்தது பரபரப்பாக பேசப்படுகிறது. திருவனந்தபுரம் மாவட்டம் காட்டாக்கடை அருகே உள்ள குடியிருப்புப் பகுதியின் அருகில் உள்ள ஓடையில் பதுங்கியிருந்த 15 அடி நீளமுள்ள ராஜநாகத்தை பருத்திப்பள்ளி ரேஞ்சின் வனப் பிரிவு பெண் அதிகாரி ரோஷ்னி அசால்டாக பிடிக்கும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 15 அட ராஜநாகம் அந்த […]

Loading

செய்திகள்

அஜித்குமார் மரண வழக்கு: ஐகோர்ட் மதுரை கிளையில் விசாரணை அறிக்கை தாக்கல்

மதுரை, ஜூலை 8– கோவில் காவலாளி அஜித்குமார் மரணம் தொடர்பாக விசாரணை நடத்திய மதுரை மாவட்ட நீதிபதி, தனது அறிக்கையை ஐகோர்ட் மதுரைக் கிளையில் இன்று தாக்கல் செய்தார். சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட கோயில் காவலாளி அஜித்குமார், தனிப்படை காவலர்கள் தாக்கியதில் உயிரிழந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் விசாரிக்க ஐகோர்ட் மதுரைக் கிளை உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து 4 நாட்கள் நீதிபதி சுந்தர்லால் […]

Loading

செய்திகள்

சீன – நேபாள எல்லையில் மண்சரிவு: 17 பேர் மாயம்

சிகாசே, ஜூலை 8 – சீன – நேபாள எல்லையில் இன்று அதிகாலை ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 17 பேர் உயிரிழந்துள்ளனர். தென்மேற்கு சீனாவின் ஷிசாங் தன்னாட்சி பிராந்தியத்தில் உள்ள சிகாசே நகரில் அமைந்துள்ள ஜிராங் நகரியத்தில், சீன – நேபாள எல்லையை ஒட்டிய ஜிராங் துறைமுகப் பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 17 பேர் மாயமாகியுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். கட்டுமானத் தொழிலாளர்கள் இன்று அதிகாலை 5 மணியளவில் இந்த மண்சரிவு ஏற்பட்டதாகத் […]

Loading

செய்திகள்

ரிதன்யாவின் கணவர், மாமனாரின் ஜாமீன் மனு தள்ளுபடி

திருப்பூர்,  ஜூலை 8- திருப்பூர் மாவட்ட நீதிமன்றம் ரிதன்யாவின் கணவர் கவின் குமார் மற்றும் அவரது மாமனார் ஈஸ்வரமூர்த்தியின் ஜாமீன் மனுவை  நிராகரித்துள்ளது. திருப்பூரைச் சேர்ந்த ரிதன்யா திருமனமான 78 நாட்களில் தனது கணவர்வீட்டார் வரதட்சனை கேட்டு தன்னை கொடுமைபடுத்தியதாக கூறி தற்கொலை செய்து கொண்டார். இது ஒட்டுமொத்த மாநிலத்திலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.   இதைத் தொடர்ந்து ரிதன்யாவின் கணவர், கணவரின் தந்தை, தலைமறைவாக இருந்த கணவரின் தாய் ஆகிய மூவர் கைது செய்யப்பட்டனர். தற்பொழுது  திருப்பூர் […]

Loading

கதைகள் சிறுகதை செய்திகள் விழாக்கள்

தீபங்களின் திருவிழா..! – விழா – 14 ராஜா செல்லமுத்து

அன்று, தீபாவளி முதல் நாள் இரவு.பட்… பட்… பட படவென வெடிக்கும் வெடிச் சத்தங்கள். சர் சர்ரென வானில் பறந்து வண்ண வெளிச்சங்களை வானவில்லாய் வரையும் பூந்தொட்டிகள் என்று வெளிச்ச வெடிகளால் நிறைந்திருந்தது, இருண்ட வானம். திரும்பிய திசையெங்கும் வெடிச் சத்தம். வண்ணங்களை அப்பி வானில் வரைந்து சென்றது ஒளிக் கோடுகள். இரவு முழுவதும் தெருவுக்குத் தெரு தீபங்களின் திருவிழாவாக இருந்தது ,அந்தத் தீபாவளி முன் இரவு.லட்சம் வாலா பட்டாசுகள் முதல் பாம்பு மாத்திரைகள் வரை தீபாவளிக்கு […]

Loading

செய்திகள்

தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.400 குறைவு

சென்னை, ஜூலை 7– தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 72 ஆயிரத்து 80 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. தொடர்ந்து, படிப்படியாக உயர்ந்த தங்கம் விலை அண்மையில் ரூ.74 ஆயிரத்தை கடந்து வரலாற்றில் புதிய உச்சத்தை தொட்டது. சவரனுக்கு ரூ.400 குறைவு இதனையடுத்து, தங்கம் விலை கடந்த ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது. அந்த வகையில் நேற்று முன்தினம் […]

Loading