சென்னை, ஜன. 3: அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்ட பயன்கள் கிடைக்கும் வகையில், ‘தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம்’ என்னும் புதிய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த இன்று முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்த திட்டத்தின் படி அரசு அலுவலர்கள் பெற்ற கடைசி மாத ஊதியத்தில் 50 சதவிகிதம் ஓய்வூதியமாக வழங்கப்படும். ஓய்வூதியதாரர் இறந்து விட்டால் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு அவர் பெற்று வந்த ஓய்வூதியத்தில் 60 சதவிகிதம் குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும் என்பது உட்பட […]
![]()


