செய்திகள்

பி.எஸ்.எல்.வி. சி-62 ராக்கெட் நாளை விண்ணில் சீறிப்பாய்கிறது

சென்னை, ஜன. 11: பி.எஸ்.எல்.வி. சி-62 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நாளை விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான 24 மணி நேர கவுண்ட்டவுன் இன்று காலை 10.17 மணிக்கு தொடங்கியது. மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டி.ஆர்.டி.ஓ.) சேவைக்காக இ.ஓ.எஸ். என்-1 என்ற செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டுள்ளது. முதன்மை செயற்கைக்கோளான இதனுடன் ஸ்பானிஷ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ‘கெஸ்ட்ரல் இனிஷியல் டெமான்ஸ்ட்ரேட்டர்’ என்ற ஒரு சிறிய சோதனை கருவியும் பொருத்தப்பட்டுள்ளது. இதனுடன், இந்தியா, மொரீஷியஸ், லக்சம்பர்க், ஐக்கிய […]

Loading

செய்திகள்

நாளை விண்ணில் பாய்கிறது அமெரிக்க செயற்கைக்கோள் ஸ்ரீஹரிகோட்டாவில் கவுன்டவுன் துவங்கியது

ஸ்ரீஹரிகோட்டா, டிச. 23– ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நாளை காலை ‘புளூபேர்ட்’ என்னும் அமெரிக்க செயற்கைக்கோள் எல்.வி.எம்.3–எம்.6 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான 24 மணி நேர கவுன்டவுன் இன்று காலை 8.54 மணிக்கு தொடங்கியது. அமெரிக்காவைச் சேர்ந்த ஏஎஸ்டி நிறுவனம், தகவல் தொடர்பு சேவைக்காக 6500 கிலோ எடையில் ‘புளூபேர்ட்–6’ என்ற செயற்கைக்கோளை உருவாக்கி உள்ளது. இது தொலைதூர கிராமங்களுக்கு மொபைல் போன் அதிவேக இணையதள சேவைகளை வழங்க உதவும். இந்த செயற்கைக்கோளை இஸ்ரோ விண்ணில் […]

Loading

செய்திகள்

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து அமெரிக்க செயற்கைக்கோள் நாளை மறுநாள் விண்ணில் ஏவப்படுகிறது இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்

சென்னை, டிச.13- அமெரிக்காவின் 6.5 டன் எடை கொண்ட தகவல் தொடர்பு செயற்கைக்கோளை ஸ்ரீஹரி கோட்டாவில் இருந்து நாளை மறுநாள் விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. அமெரிக்காவிலுள்ள டெக்சாஸை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஏ.எஸ்.டி. நிறுவனம் செல்போன் சேவைக்கான 6.5 டன் எடை கொண்ட ‘புளூபேர்ட்- 6′ என்ற தகவல் தொடர்பு செயற்கைக்கோளை உருவாக்கி உள்ளது. இந்த செயற்கைக்கோளை, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) கீழ் செயல்படும், ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா, […]

Loading

செய்திகள்

விண்ணில் பாய்ந்த ‘பாகுபலி’ ராக்கெட்: இஸ்ரோ விஞ்ஞானிகள் சாதனை

ஸ்ரீஹரிகோட்டா, நவ.3- 4,400 கிலோ எடையுள்ள செயற்கைக்கோளுடன் ‘பாகுபலி’ ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இந்த செயற்கைக்கோள் தகவல் தொடர்பு உள்கட்டமைப்பை வலுப்படுத்த உதவும். தகவல்தொடர்பு துறையில் இந்தியாவை தன்னிறைவு பெறச் செய்வதற்காக ரூ.1,600 கோடி மதிப்பில் அதிக எடை கொண்ட சி.எம்.எஸ்-03 என்ற முதல் செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்தது. 4 ஆயிரத்து 410 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோள், விண்ணில் செலுத்துவதற்காக தயாரிக்கப்பட்ட ‘பாகுபலி’ ராக்கெட் என்று கூறப்படும் ‘எல்.வி.எம்.3-எம்5’ ராக்கெட்டில் பொருத்தப்பட்டது. இதனையடுத்து […]

Loading