செய்திகள்

எண்ணூர் அனல் மின் நிலையத்தில் கட்டுமான சாரம் சரிந்து விழுந்து 9 வடமாநில தொழிலாளர்கள் பலி

பிரதமர் மோடி, முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்: நிவாரண நிதி அறிவிப்பு சென்னை, அக்.1-– எண்ணூர் அனல் மின் நிலையத்தில் கட்டுமான பணிக்காக அமைக்கப்பட்டு இருந்த சாரம் சரிந்து விழுந்து வடமாநில தொழிலாளர்கள் 9 பேர் பலியானார்கள். இந்த சம்பவத்துக்கு பிரதமர் மோடியும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் இரங்கல் தெரிவித்துள்ளனர். திருவள்ளுர் மாவட்டம் எண்ணூரில் அனல் மின்நிலையம் உள்ளது. இங்குள்ள 4-வது அலகில் விரிவாக்கப்பணி நடந்து வருகிறது. நுழைவு வாயிலின் முகப்பு பகுதியில் கட்டுமான பணிக்காக, இரும்பு கம்பிகளை கொண்டு […]

Loading

செய்திகள்

கரூர் த.வெ.க. கூட்டத்தில் பெரும் சோகம்: நெரிசலில் சிக்கி 39 பேர் பலி; பலர் படுகாயம்

கரூர், செப். 28 – கரூர் மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) தலைவர் விஜய் கலந்துகொண்ட தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளும் அடங்குவர். 80-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. உயிரிழப்பு விவரம்: தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அளித்த தகவலின்படி, […]

Loading

செய்திகள்

193 போலீசாருக்கு அண்ணா பதக்கம்: முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை, செப்.15- அண்ணா பிறந்தநாளையொட்டி 193 போலீசாருக்கு பதக்கம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார். தமிழ்நாட்டில் காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை, சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறை, ஊர்க்காவல் படை, விரல்ரேகைப் பிரிவு மற்றும் தடய அறிவியல் துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களை அங்கீகரிக்கும் வகையிலும், பணியில் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்ததை பாராட்டும் வகையிலும், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15-ந் தேதியான அண்ணா பிறந்த நாளன்று முதலமைச்சரின் […]

Loading

செய்திகள்

பீகாரில் நடந்தது ஜனநாயக படுகொலை: மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு

பாட்னா, ஆக.27– பீகாரில் இன்று நடந்த வாக்குரிமை பேரணியில் ராகுல்காந்தியுடன் தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார். பீகாரில் நடந்தது ஜனநாயக படுகொலை, சாவி கொடுத்தால் ஆடும் பொம்மைப்போல் தேர்தல் ஆணையம் ஆடுகிறது என்று மு.க.ஸ்டாலின் கூறினார். பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தின் மூலம் 65 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு இறுதியில் பீகாரில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்திய தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை பெரிதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் ஆணையம் […]

Loading

செய்திகள்

ஈரோட்டில் திருப்பூர் குமரன், ஈ.வெ.கி.சம்பத் சிலை : ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை, ஆக 25– விடுதலைப் போராட்ட வீரர் கொடி காத்த திருப்பூர் குமரன் மற்றும் சொல்லின் செல்வர் ஈ.வெ.கி.சம்பத் ஆகியோரது திருவுருவச் சிலைகளை ஸ்டாலின் திறந்து வைத்தார். இதையொட்டி, அவர் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது– ‘‘தியாகத் தலைவர்களைத் தந்த ஈரோட்டு மண்ணின் பெருமையை எடுத்துக்காட்டும் வகையில், ஈரோட்டில், விடுதலைப் போராட்ட வீரர் கொடி காத்த திருப்பூர் குமரன் மற்றும் சொல்லின் செல்வர் ஈ.வெ.கி.சம்பத் ஆகியோரது திருவுருவச் சிலைகளைத் திறந்து வைத்தேன். ஈரோடு மாவட்ட மக்களின் […]

Loading

செய்திகள்

அரசியல் சாசனத்தை பாதுகாக்க சுதர்சன் ரெட்டி தேவைப்படுகிறார்: ஸ்டாலின் பேச்சு

சென்னை, ஆக.25-– துணை ஜனாதிபதி தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் சுதர்சன் ரெட்டி, சென்னையில் நேற்று கூட்டணி கட்சி எம்.பி.க்களிடம் ஆதரவு திரட்டினார். இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் கூட்டணி தலைவர்கள் கலந்து கொண்டனர். அரசியல் சாசனத்தை பாதுகாக்க சுதர்சன் ரெட்டி தேவைப்படுகிறார் என மு.க.ஸ்டாலின் கூறினார். துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அந்த பதவிக்கான தேர்தல் அடுத்த மாதம் (செப்டம்பர்) 9-ந்தேதி நடைபெறுகிறது. இதற்காக பா.ஜ.க. கூட்டணி […]

Loading

செய்திகள்

சென்னை வெறும் ஊரல்ல; தமிழ்நாட்டின் இதயத்துடிப்பு : ஸ்டாலின்

சென்னை, ஆக. 22– இன்று சென்னை தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, சென்னை வெறும் ஊரல்ல, தமிழ்நாட்டின் இதயத்துடிப்பு என்று சென்னை போற்றும் வகையில் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை நாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில் கூறியிருப்பதாவது:– எந்தெந்த மூலைகளில் இருந்தோ நண்பர்களை அளித்து, வாழ வழிதேடுவோருக்கு நம்பிக்கையை அளித்து, பல பெண்களுக்குப் பறக்கச் சிறகுகளை அளித்து, எத்தனையோ பேருக்கு முதல் சம்பளத்தை அளித்து, சொந்த ஊரில் அடையாளத்தை அளித்து, மொத்தத்தில் நமக்கெல்லாம் வாழ்வளித்த […]

Loading

செய்திகள்

ஊரக, மீன்வள உள்கட்டமைப்புக்கு ரூ.4850 கோடி நிதி கேட்டு ஸ்டாலின் கடிதம்

நிர்மலா சீதாராமனிடம் வழங்கப்பட்டது புதுடெல்லி, ஆக.20- டெல்லியில் நேற்று மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை, நாடாளுமன்ற தி.மு.க. குழுத் தலைவர் கனிமொழி மற்றும் தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் சந்தித்து, முதலமைச்சர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தை வழங்கினார்கள். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்ட பதிவில் கூறப்பட்டு இருப்பதாவது:- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 2025–26ம் நிதியாண்டில், நபார்டு வங்கியின் ஊரக உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.4,500 கோடிக்கான நிதியையும், மீன்வள […]

Loading

செய்திகள்

தேர்தல் ஆணையத்துக்கு ஸ்டாலின் 7 கேள்விகள்

சென்னை, ஆக. 18– இந்திய தேர்தல் ஆணையத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 7 கேள்விகளை எழுப்பி உள்ளார். நேற்றைய தேர்தல் ஆணையத்தின் செய்தியாளர் சந்திப்பு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டு பதிவில் கூறியிருப்பதாவது:– இந்தியா கூட்டணியினர் எழுப்பிய கேள்விகளுக்கு விடையளிப்பதற்குப் பதிலாக, கூடுதலான கேள்விகளை எழுப்பியிருக்கிறது தலைமைத் தேர்தல் ஆணையரது ஊடகச் சந்திப்பு. பின்வரும் கேள்விகள் எழுகின்றன: 1. வீடுதோறும் கணக்கெடுப்பு நடத்தியும், எப்படி இத்தனை தகுதியான வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்? 2. புதிய […]

Loading

செய்திகள்

துணை ஜனாதிபதி தேர்தல்: ஸ்டாலினிடம் ஆதரவு கோரினார் ராஜ்நாத் சிங்

புதுடெல்லி, ஆக. 18– துணை ஜனாதிபதி தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளரும் தமிழகத்தைச் சேர்ந்தவருமான சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு கோரி தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சுவார்த்தை நடத்தினார். நாட்டின் 16-வது துணை ஜனாதிபதியாக கடந்த 2022-ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெகதீப் தன்கர், கடந்த மாதம் 21-ந் தேதி திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். தனது உடல் நிலையை கருத்தில் கொண்டு பதவி விலகுவதாக ஜனாதிபதிக்கு அவர் […]

Loading