சென்னை, ஜூலை 9– முதல்வரின் செயலாளர் சண்முகத்தின் தாயார் காலமானார். அவரது மறைவையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:– என்னுடைய செயலாளராக உள்ள சண்முகத்தின் தாயார் எம்.எஸ். ராஜலட்சுமி மறைவுற்ற செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். பெற்ற அன்னையின் மறைவு என்பது ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அத்தகைய பேரன்பை இழந்து தேற்ற முடியாத துயரில் வாடும் சண்முகம் ஐ.ஏ.எஸ்.க்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். […]
![]()


