சென்னை, ஜன.23- வேளச்சேரி-பரங்கிமலை இடையே பறக்கும் ரெயில் சேவை விரைவில் தொடங்கும் என ரெயில்வே அதிகாரிகள் தொிவித்துள்ளனர். சென்னையில் கடற்கரை–வேளச்சேரி இடையே பறக்கும் ரெயில் சேவை பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்த சேவையை பரங்கிமலை வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டது. 5 கிலோ மீட்டர் நீளமுள்ள இந்த திட்டம் 2008-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ரூ.495 கோடி ஒதுக்கப்பட்டு திட்டப்பணிகள் நடைபெற்று வந்தன. இதில் 4.5 கிலோ மீட்டர் தூரத்துக்கு 167 தூண்களுடன் ரெயில் பாதை அமைக்கப்பட்டது. […]
![]()


