செய்திகள்

விழுப்புரம் அருகே 1,200 ஆண்டுகள் பழமைவாய்ந்த 3 கொற்றவை சிற்பங்கள் கண்டெடுப்பு

விழுப்புரம், ஜன.14- விழுப்புரம் அருகே 1,200 ஆண்டுகள் பழமைவாய்ந்த 3 கொற்றவை சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. விழுப்புரம் அருகே உள்ள கல்பட்டு சிறுவாக்கூர் கிராமத்தில் 1,200 ஆண்டுகள் பழமைவாய்ந்த கொற்றவை சிற்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதுபற்றி விழுப்புரத்தை சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் செங்குட்டுவன் கூறியதாவது:- பழந்தமிழர்களின் தாய் தெய்வமாக விளங்கியவள் கொற்றவை தெய்வம். தொடக்கத்தில் காட்டில் உறைபவள் எனும் பொருளில் காடமர் செல்வி என வழங்கப்பட்டவள் பின்னர் போரில் வெற்றியை அளிக்கும் தெய்வமாக கொற்றவை என வணங்கப்பட்டாள். கொற்றவையின் உருவ […]

Loading

செய்திகள்

தமிழ்நாடு தீயணைப்பு துறை சார்பில் கள்ளக்குறிச்சியில் விளையாட்டு போட்டிகள்: கலெக்டர் பிரசாந்த் துவக்கி வைத்தார்

கள்ளக்குறிச்சி டிச.29– தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில், மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடத்த இந்திய காவல்பணி இயக்குனர் சீமா அகர்வால் உத்தரவின் படி கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி ஏ.கே.டி. பள்ளி மைதானத்தில் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இவ்விழாவில், விழுப்புரம் மண்டல துணை இயக்குநர் கா.தென்னரசு தலைமையில், விழுப்புரம் மாவட்ட அலுவலர் பாஸ்கரன், கள்ளக்குறிச்சி மாவட்ட அலுவலர் இருசம்மாள், நாகை மாவட்ட அலுவலர் முகுந்தன், மற்றும் விழுப்புரம் மண்டலத்தைச் சார்ந்த உதவி மாவட்ட […]

Loading

செய்திகள்

விழுப்புரம் ரெயில் நிலைய மேம்பாட்டு பணிகள்: தெற்கு ரெயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் ஆய்வு

விழுப்புரம், டிச.25- விழுப்புரம் ரெயில் நிலையத்தில் தென்னக ரெயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் ஆய்வு மேற்கொண்டார். தென்னக ரெயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் ருவண்ணாமலையில் ஆய்வுப்பணியை முடித்து விட்டு மாலையில் தனி ஆய்வு ரெயில் மூலம் விழுப்புரம் ரெயில் நிலையத்திற்கு வருகை தந்தார். அவர் ரெயில் நிலையத்தில் உள்ள நடைமேடைகளில் பயணிகளுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளனவா? என்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது பயணிகளின் அடிப்படை வசதிகளை உறுதி செய்வதுடன் […]

Loading

செய்திகள்

விழுப்புரம் பகுதியில் மண் பானைகள் தயாரிக்கும் பணி மும்முரம்

விழுப்புரம், டிச. 22: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விழுப்புரம் பகுதியில் மண் பானைகள் தயார் செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை அடுத்த மாதம் (ஜனவரி) 15-ந்தேதி (வியாழக்கிழமை) வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகை அன்று புதுப்பானையில் பொங்கலிடுவதை இன்றளவும் தமிழர்கள் மரபாக கொண்டுள்ளனர். இதனை கருத்தில் கொண்டு விழுப்புரம் அருகே சாலைஅகரம், ராகவன்பேட்டை, அய்யங்கோவில்பட்டு, அய்யூர்அகரம் உள்ளிட்ட இடங்களில் மண் பானைகள் தயாரிக்கும் பணியில் பல ஆண்டுகளாக மண்பாண்ட தொழிலாளர்கள் […]

Loading

செய்திகள்

வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணை: விழுப்புரம் கலெக்டர் வழங்கினார்

விழுப்புரம், டிச. 20– விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில், மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் மாவட்ட அளவிலான மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமினை கலெக்டர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான், விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் து.ரவிக்குமார், விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் இரா. லட்சுமணன் ஆகியோர் முன்னிலையில் துவக்கி வைத்து, தோ்வு பெற்றவர்களுக்கு […]

Loading

செய்திகள்

சோழர் கால நடராஜர் சிற்பம் கண்டெடுப்பு

விழுப்புரம், டிச.15: திருவெண்ணெய்நல்லூர் அருகே சோழர் கால நடராஜர் சிற்பம் கண்டெடுக்கப்பட்டது. திருவெண்ணெய்நல்லூர் அருகே மழையம்பட்டு கிராமத்தில் பழமைவாய்ந்த சிற்பம் இருப்பதாக அப்பகுதியை சேர்ந்த பா.சரத்குமார் அளித்த தகவலின் பேரில் விழுப்புரத்தை சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் கோ.செங்குட்டுவன் அங்கு கள ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு சுமார் 800 ஆண்டுகள் பழமைவாய்ந்த நடராஜர், நந்தி மற்றும் சப்தமாதர் குழுவை சேர்ந்த சில சிற்பங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஓய்வுபெற்ற ஆசிரியர் ராமலிங்கம் என்பவருக்கு சொந்தமான விளைநிலத்தில் உள்ள அரச […]

Loading

செய்திகள்

குடும்ப தகராறு: சென்னை ஐகோர்ட் வக்கீல் தூக்குப்போட்டு தற்கொலை

விழுப்புரம், டிச. 14– குடும்ப தகராறு காரணமாக சென்னை ஐகோர்ட் வக்கீல் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் ரோஷணை வெள்ளவாரி ரோடு பகுதியை சேர்ந்த சாமிநாதன் மகன் சாமிசந்திரன் (வயது 38), சென்னை ஐகோர்ட்டில் வக்கீலாக பணி புரிந்து வந்தார். இவருக்கும் திருக்கோவிலூர் பகுதியை சேர்ந்த காமாட்சி என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு குழந்தை இல்லை. இந்த நிலையில் கணவன்- – மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப […]

Loading

செய்திகள்

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் அரசியல் கட்சி பிரதிநிதகளுடன் விழுப்புரம் கலெக்டர் ஆலோசனை

விழுப்புரம், டிச. 13– விழுப்புரம் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கான ஆலோசனைக்கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட தேர்தல் அலுவலரும் கலெக்டருமான ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கினார். சிறப்பு வாக்காளர் பட்டியல் மேற்பார்வையாளர் (வடக்கு மண்டலம்) ராமன்குமார் கலந்துகொண்டு, வாக்காளர் பட்டியலில் முகவரி மாற்றம், இறப்பு போன்ற விவரங்கள் குறித்தும், புதிய வாக்காளர்களை பட்டியலில் சேர்ப்பதற்கான விவரங்கள் குறித்தும் கேட்டறிந்தார். அப்போது […]

Loading

செய்திகள்

செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை பணி

விழுப்புரம், டிச. 11: விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் வட்டம், பொியசெவலை செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 2025 – 2026 ஆம் ஆண்டிற்கான கரும்பு அரவை பணியினை கலெக்டர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான், க.பொன்முடி எம்.எல்.ஏ. முன்னிலையில் துவக்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவ: முதலமைச்சர், விவசாயம் மற்றும் விவசாயிகளின் நலன் கருதி வேளாண்மை துறைக்கென்று தனி நிதிநிலை அறிக்கையினை வௌியிட்டதோடு, பல்வேறு சிறப்புத் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில், விவசாயத்திற்கு இலவச மின்சாரம் […]

Loading

செய்திகள்

பாலின சமத்துவ விழிப்புணர்வு பேரணி: விழுப்புரம் கலெக்டர் துவக்கி வைத்தார்

விழுப்புரம், நவ. 26– விழுப்புரம் மாவட்டம் மணம்புண்டியில் உள்ள முகையூர் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்சார்பில் தேசிய அளவிலான பாலின சமத்துவ விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் கொடியசைத்து துவக்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் சமூக ஒருங்கிணைப்பு பிரிவின் மூலம் பாலினம் தொடர்பான விழிப்புணர்வுகள், பயிற்சிகள் 37 மாவட்டங்களில் 388 வட்டாரங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பெண்களுக்கு எதிரான […]

Loading