விழுப்புரம், ஜன.14- விழுப்புரம் அருகே 1,200 ஆண்டுகள் பழமைவாய்ந்த 3 கொற்றவை சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. விழுப்புரம் அருகே உள்ள கல்பட்டு சிறுவாக்கூர் கிராமத்தில் 1,200 ஆண்டுகள் பழமைவாய்ந்த கொற்றவை சிற்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதுபற்றி விழுப்புரத்தை சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் செங்குட்டுவன் கூறியதாவது:- பழந்தமிழர்களின் தாய் தெய்வமாக விளங்கியவள் கொற்றவை தெய்வம். தொடக்கத்தில் காட்டில் உறைபவள் எனும் பொருளில் காடமர் செல்வி என வழங்கப்பட்டவள் பின்னர் போரில் வெற்றியை அளிக்கும் தெய்வமாக கொற்றவை என வணங்கப்பட்டாள். கொற்றவையின் உருவ […]
![]()











