அன்று சுந்தரியின் வீட்டில் நவராத்திரி விழா வெகு சிறப்பாகக் கொண்டாட ஏற்பாடானது.அதுவரையில் இல்லாத அளவிற்கு வீட்டைச் சுத்தம் செய்தாள் சுந்தரி. கொலுப்படிகளில் விதவிதமான கொலுப்பொம்மைகளை அடுக்கி வைத்தாள். ஒரே இடத்தில் அத்தனை பொம்மைகளையும் பார்ப்பதற்கு கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. ஒன்பது நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் துர்க்கையின் ஒன்பது அவதாரங்களைப் பொம்மையின் காட்சிகளாக வைக்க வேண்டும். ஊர் , உறவுகள் நண்பர்களிடம் சொல்லி, இந்த நவராத்திரி விழாவைச் சிறப்பாக கொண்டாட வேண்டும், விழா தொடங்கும் ஒன்பது நாட்களுக்கும் […]
![]()


