சென்னை, நவ.17– குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, ரெயின் டிராப்ஸ் அறக்கட்டளை அதன் வருடாந்திர சிறப்பு திட்டமான “வானமே எல்லை” எனும் அருமையான ஊக்கமளிக்கும் முயற்சியை வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் பொருளாதார ரீதியாக பின்தங்கிய 30 குழந்தைகள் தங்களது வாழ்நாளில் முதன் முறையாக சென்னை நகரிலிருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் பயணம் மேற்கொண்டுள்ளனர். அனைவரையும் உள்ளடக்கிய சமூகத்தை உருவாக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட இந்த வருடாந்திர முன்முயற்சியில், ஒரு திருநங்கை மாணவர் மற்றும் பார்வை குறைபாடுள்ள ஒரு மாணவர் […]
![]()


