செய்திகள்

போலீசாரின் அறிவுரைகளை த.வெ.க.வினர் ஏற்கவில்லை; தமிழக அரசு அதிகாரிகள் விளக்கம்

சென்னை, அக்.1- கரூரில் கூட்ட நெரிசல் எப்படி ஏற்பட்டது என்பது குறித்தும், ஆம்புலன்ஸ்கள் வருகை குறித்து தமிழக அரசு அதிகாரிகள், டிஜிபி மற்றும் ஏடிஜிபி ஆகியோர் வீடியோ வெளியிட்டு ஆதாரத்துடன் விளக்கம் அளித்தனர். கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதன் பின்னணியில் சதி இருக்கலாம் என தவெகவினர் குற்றம் சுமத்தி வருகின்றனர். இது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. இந்நிலையில் நேற்று விஜய் வீடியோ […]

Loading

செய்திகள்

கரூர் பலிக்கு நான்கு பக்கமும் தவறுகள் நடந்திருக்கின்றன: ப.சிதம்பரம்

சென்னை, செப். 29– கரூரில் நிகழ்ந்த துயரச் சம்பவத்தில் நான்கு பக்கமும் தவறுகள் நடந்திருக்கின்றன என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில் மத்திய முன்னாள் அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப. சிதம்பரம் இதுதொடர்பாக தனது […]

Loading

செய்திகள்

கரூரில் விஜய் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி சிகிச்சையில் இருந்த பெண் இன்று உயிரிழப்பு

பலியானோர் எண்ணிக்கை 41 ஆக உயர்வு கரூர், செப்.29–- வேலுசாமிபுரத்தை சேர்ந்த சுகுணா என்ற 65 வயது பெண் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். இதனையடுத்து கரூரில் விஜய் பிரச்சார கூட்டத்தில் நெரிசலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது. கரூர் வேலாயுதம்பாளையத்தில் நேற்று முன்தினம் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்து கொண்டு பேசினார். இந்த கூட்டத்தில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் […]

Loading

செய்திகள்

விஜய்யை கைது செய்ய வலியுறுத்தி கரூரில் தமிழ்நாடு மாணவர் சங்கம் போஸ்டர்

கரூர், செப். 29– கரூரில் தவெக தலைவர் விஜய்யை கைது செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு மாணவர் சங்கம் சார்பில சுவரொட்டிகள் ஒட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் வேலுசாமிபுரத்தில் நேற்று முன்தினம் நடந்த தவெக பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 41ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் கரூர் கோவை சாலை, ஈரோடு சாலை, வேலுசாமிபுரம், காந்திகிராமம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தமிழ்நாடு மாணவர் சங்கம் சார்பில் விஜய்யை கைது செய்ய வலியுறுத்தி சுவரொட்டிகள் ஒட்டியிருப்பது […]

Loading

கரூரில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு முதல்வர் ஆறுதல்
செய்திகள்

கரூர் சோகம்: உயிரிழந்தவர்களின் குடும்பங்களைச் சந்தித்து ஆறுதல் கூறிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

கரூர், செப். 28 – கரூர் மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலையில் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நேரில் சென்று, பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார். இரவோடு இரவாகக் கரூர் பயணம்: நேற்று (சனிக்கிழமை) இரவு சென்னை தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய முதலமைச்சர், பின்னர் திருச்சியில் விமானம் மூலம் வந்து […]

Loading

செய்திகள்

கரூர் த.வெ.க. கூட்டத்தில் பெரும் சோகம்: நெரிசலில் சிக்கி 39 பேர் பலி; பலர் படுகாயம்

கரூர், செப். 28 – கரூர் மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) தலைவர் விஜய் கலந்துகொண்ட தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளும் அடங்குவர். 80-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. உயிரிழப்பு விவரம்: தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அளித்த தகவலின்படி, […]

Loading

செய்திகள்

நாமக்கல்லில் விஜய்க்கு வழிநெடுகிலும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு

நாமக்கல், செப். 27– நாமக்கல்லில் இன்று 3–ம் கட்ட பிரச்சாரத்தை த.வெ.க. தலைவர் விஜய் துவக்கினார். பிரச்சாரத்திற்கு வந்த விஜய்க்கு வழி நெடுகிலும் த.வெ.க. தொண்டர்கள் எழுச்சிமிகு வரவேற்பு கொடுத்தார்கள். கட்சி கொடிகளை அசைத்து வாழ்த்து கோஷம் எழுப்பியும் ஆரவாரம் செய்தார்கள். தொண்டர்கள் கூட்டத்தால், அவரது பிரச்சார வாகனம் மெல்ல ஆமை வேகத்தில் நகர்ந்து வந்ததால் குறிப்பிட்ட நேரத்திற்கு பிரச்சார இடத்திற்கு வர முடியவில்லை. பல மணி நேரம் தாமதமாகவே வந்தார். “தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் […]

Loading

செய்திகள்

நாகப்பட்டினம், திருவாரூரில் பிரச்சாரம்: விஜய் தவறான தகவல்களை பரப்பி உள்ளார்: தமிழக அரசு விளக்கம்

சென்னை, செப்.21–- த.வெ.க. தலைவர் விஜய், நாகப்பட்டினம், திருவாரூர் தொகுதியில் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். இதில், தவறான தகவல்களை பரப்பி உள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:-– நாகையில் அலையாத்திக் காடுகள், கடல்சார் கல்லூரி, காவல்துறை நிபந்தனைகள் குறித்து விஜய் கூறிய தகவல்கள் தவறானவை. அவர், மண் அரிப்பை தடுக்க உருவாக்கப்பட்ட அலையாத்திக் காடுகளைக் காக்க அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறியுள்ளார். ஆனால் […]

Loading

செய்திகள்

மீனவர்கள் பிரச்சினையில் ஸ்டாலின் கபட நாடகம்: விஜய் கடும் தாக்கு

நாகப்பட்டினம், செப். 20- த.வெ.சு. தலைவர் விஜய் 2ம் கட்டமாக இன்று நாகப்பட்டினத்தில் பிரச்சாரம் செய்தார். திருச்சியிலிருந்து சாலை மார்க்கமாக வந்த விஜய்க்கு வழிநெடுகிலும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மீனவர்கள் பிரச்சினையில் ஸ்டாலின் கபட நாடகம் ஆகிறார் என்று விஜய் கூறினார். சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள தமிழக வெற்றிக்கழகம் தீவிரமாக தயாராகி வருகிறது. அந்த கட்சியின் தலைவர் விஜய், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். தனது முதல்கட்ட அரசியல் சுற்றுப்பயண பிரசாரத்தை திருச்சியில் தொடங்கினார். அப்போது […]

Loading

செய்திகள்

விஜய் வீட்டின் மொட்டை மாடியில் பதுங்கியிருந்த ‘மனநலம்’ பாதித்த இளைஞர் மீட்பு; வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு

சென்னை, செப். 19– தமிழக வெற்றி கழகத்தின் (த.வெ.க.) தலைவர் விஜய் வீட்டில் பலத்த பாதுகாப்பையும் மீறி மொட்டை மாடியில் பதுங்கியிருந்த மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞரை போலீசார் மீட்டனர். இந்நிலையில் அடுத்து விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் சென்னை நீலாங்கரையில் உள்ள வீட்டில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இன்று காலை அவரது வீட்டின் மொட்டை மாடியில் மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் பதுங்கி இருந்துள்ளார். […]

Loading