செய்திகள்

2026ல் விஜய் ஆட்சி பீடத்தில் அமர்வதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது கோவையில் செங்கோட்டையன் பேட்டி

கோவை, டிச. 25– 2026 சட்டமன்றத் தேர்தலில் விஜய் ஆட்சி பீடத்தில் அமர்வதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. அவர் தமிழகத்தை ஆள வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர் என அக்கட்சியின் நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார். கோவை விமான நிலையத்தில் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். தமிழக வெற்றிக் கழகத்துடன் ஓ.பன்னீர்செல்வம் அணி இணைய வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நடத்திய அனைத்து மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பெரும்பாலானோர் […]

Loading

செய்திகள்

த.வெ.க.வில் இணைந்த நாஞ்சில் சம்பத்

சென்னை, டிச.6- த.வெ.க. தலைவர் விஜய்யை, நாஞ்சில் சம்பத் நேற்று சந்தித்து தன்னை த.வெ.க.வில் முறைப்படி இணைத்துக்கொண்டார். இதுகுறித்து நாஞ்சில் சம்பத் கூறியதாவது:- தமிழக அரசியலில் அதிக அளவு இளைஞர்களை விஜய் ஈர்த்து வைத்து இருக்கிறார். விஜய் என்னிடம் நான் உங்கள் ரசிகன் என்றார். இது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. தி.மு.க. ஆதரவாளராக இருந்த என்னை தி.மு.க.வினர் அநாகரீகமாக நடத்தினர். தி.மு.க.வில் நான் சைக்கிள் கூட கேட்டதில்லை, கேட்டாலும் கிடைக்காது, அது வேறு. விஜய்க்கு ஆதரவாக நான் […]

Loading

செய்திகள்

விஜய் முன்னிலையில் த.வெ.க.வில் இணைந்தார் கே.ஏ. செங்கோட்டையன்

சென்னை, நவ. 27– அண்ணா தி.மு.க. விலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் இன்று விஜய் முன்னிலையில் த.வெ.க.வில் இணைந்தார். அவருக்கு தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டது.அண்ணா தி.மு.க. மூத்த நிர்வாகிகளில் ஒருவராக இருந்த கே.ஏ.செங்கோட்டையன், 1977 ஆம் ஆண்டு தமிழக முதல்வராக எம்ஜிஆர் பதவியேற்ற போது, முதல்முறையாக கோபிசெட்டிபாளையம் தொகுதியில் போட்டியிட்டு, சட்டப்பேரவை உறுப்பினர் ஆனார் செங்கோட்டையன். எம்ஜிஆரின் விசுவாசியாகவும், தொடர்ந்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் விசுவாசியாகவும் அறியப்பட்ட செங்கோட்டையன், கோபிசெட்டிபாளையம் தொகுதியிலிருந்து மட்டும் […]

Loading

செய்திகள் முழு தகவல்

எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்: நாளை த.வெ.க.வில் இணைகிறார்

சென்னை, நவ. 26: முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தனது எம்.எல்.ஏ. பதவியை இன்று ராஜினாமா செய்தார். விஜய் முன்னிலையில் நாளை த.வெ.க.வில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அண்ணா தி.மு.க. மூத்த நிர்வாகிகளில் ஒருவரான கே.ஏ.செங்கோட்டையன், 1977-ம் ஆண்டு முதல் 9 முறை எம்.எல்.ஏ.வாக இருந்துள்ளார். முதல்முறை சத்தியமங்கலம் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், அதன் பிறகு 8 முறை கோபிச்செட்டிபாளையம் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அண்ணா தி.மு.க. ஆட்சி காலத்தில் வனத்துறை, […]

Loading

செய்திகள்

சிபிஐ அலுவலகத்தில் தவெக நிர்வாகிகள் ஆஜர்

சென்னை, நவ. 24: கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக இன்று த.வெ.க. நிர்வாகிகள் சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். கரூர் வேலுச்சாமிபுரத்தில் செப்டம்பர் 27–ந் தேதி விஜய் பங்கேற்ற தவெக பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். 110 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை நெரிசல் சம்பவம் நடைபெற்றபோது அங்கு ஆம்புலன்ஸுடன் வந்திருந்த வாகன ஓட்டுநர்கள், உரிமையாளர்கள், […]

Loading

செய்திகள்

2026 சட்டமன்ற தேர்தலில் த.வெ.க. முதல்வர் வேட்பாளர் விஜய்

* கூட்ட நெரிசலில் பலியான 41 பேருக்கு இரங்கல் * மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் தலைவருக்கும், பொதுமக்களுக்கு பாதுகாப்பு * விவசாயிகள் விரோத ஆட்சியாளர்களுக்குக் கண்டனம் சென்னை, நவ. 5– கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் பங்கேற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து அவர் மீது அரசியல் கட்சிகள் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தன. தொடர்ந்து மவுனம் சாதித்து வந்த விஜய், கரூர் சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்து […]

Loading

செய்திகள்

‘‘காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார் விஜய்’’: கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தகவல்

கரூர், அக். 28– கரூர் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டோரின் காலில் விழுந்து விஜய் மன்னிப்பு கேட்டதாக விஜய்யை சந்தித்தவர்கள் கூறினர். கரூரில் செப்டம்ர் 27–ந் தேதியில், விஜய் தலைமையில் நடைபெற்ற தவெக பிரசாரக் கூட்டத்தில் சிக்கி 41 பேர் பலியான நிலையில், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நடந்த 3 நாள்கள் பிறகு, பாதிக்கப்பட்டோரை விடியோ அழைப்பில் தொடர்புகொண்ட விஜய், அவர்களை விரைவில் சந்திப்பதாக உறுதியளித்தார். இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டோரை சென்னைக்கு வரவழைத்து, நேற்று மாமல்லாபுரத்தில் […]

Loading

செய்திகள்

விஜய் கரூர் செல்ல ஏற்பாடு: புஸ்ஸி ஆனந்த் தலைமையில் 10 பேர் கொண்ட குழு

கரூர், அக். 14– விஜய் கரூர் செல்வதற்கான ஏற்பாட்டு பணிகளை கவனிக்க புஸ்ஸி ஆனந்த் தலைமையில் 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. கரூரில் நடந்த த.வெ.க. பிரசாரத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக கரூர் மாவட்ட த.வெ.க. செயலாளர் மதியழகன் கைது செய்யப்பட்டார்.மேலும் த.வெ.க. பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணைப் பொதுச்செயலாளர் சி.டி. நிர்மல் குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது. இதைத் தொடர்ந்து இருவரும் […]

Loading

செய்திகள்

கூட்ட நெரிசலில் இறந்த 41 பேரின் குடும்பத்தையும் தத்தெடுப்போம்: டெல்லியில் ஆதவ் அர்ஜுனா பேட்டி

புதுடெல்லி, அக். 13– த.வெ.க. மாவட்டச் செயலாளர்களை கைது செய்து கட்சியை முடக்க தி.மு.க. முயற்சிக்கிறது என்று ஆதவ் அர்ஜுனா கூறினார். கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் கடந்த மாதம் 7-–ந் தேதி பிரசாரம் செய்தபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் பெண்கள், குழந்தைகள் உள்பட 41 பேர் பலியான சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த சம்பவம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், டெல்லியில் தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா […]

Loading

செய்திகள்

விஜய் வீட்டுக்கு 2வது முறையாக வெடிகுண்டு மிரட்டல்

சென்னை, அக். 9– சென்னை நீலாங்கரையில் உள்ள தவெக தலைவர் விஜய் வீட்டுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை நீலாங்கரை, கபாலீஸ்வரர் நகரில் தவெக தலைவர் விஜய் வீடு அமைந்துள்ளது. அவருக்கு மத்திய அரசு, ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டு வரும் நிலையில், சமீபத்தில் விஜய் வீட்டிற்குள், மன நலம் பாதித்த நபர் ஒருவர் நுழைந்தார். இதனால், ஒய் பிரிவு பாதுகாப்பில் குளறுபடி இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக […]

Loading