சென்னை, ஜூலை 10– காவலாளி அஜித்குமார் மரணத்திற்கு நீதிக்கேட்டு வருகிற 13ம் தேதி தவெக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதற்கு முன்னதாக காவல் நிலையங்களில் மரணமடைந்தவர்களின் குடும்பங்களை நடிகர் விஜய் சந்திக்கிறார். சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்த மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் காவலாளியாக பணியாற்றியவர் அஜித்குமார். தனது காரில் இருந்த நகைகள் மாயம் என மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள ஆலம்பட்டியை சேர்ந்த பேராசிரியை நிகிதா என்பவர் அளித்த புகாரின் பேரில் தனிப்படை போலீசார் விசாரிக்க […]
![]()


