செய்திகள்

தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 4.42 லட்சம் பேர் விண்ணப்பம்: தேர்தல் ஆணைய அதிகாரி தகவல்

சென்னை, டிச.29- தமிழகம் முழுவதும் நடந்த சிறப்பு தீவிர முகாமில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 4.42 லட்சம் பேர் படிவங்களை வழங்கினர். சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டசபை தொகுதிகளுக்கான 4 ஆயிரத்து 79 வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்வது தொடர்பான சிறப்பு தீவிர முகாம் கடந்த 27-ந்தேதி தொடங்கி 2 நாட்கள் நடந்தது. 2-ம் நாளான நேற்று நடந்த முகாமில் வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாத […]

Loading

செய்திகள்

சென்னையில் 4 ஆயிரம் மையங்களில் 2 நாள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்

சென்னை, டிச.26-– வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நாளை (சனிக்கிழமை) மற்றும் நாைள மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் ஜனவரி 3, 4 ஆகிய தேதிகளில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. சென்னையில் 4 ஆயிரம் மையங்களில் நடக்கிறது. தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் எஸ்.ஐ.ஆர். எனப்படும் சிறப்பு தீவிர திருத்தம் கடந்த மாதம் 4-ந் தேதி தொடங்கி கடந்த 14-ந்தேதி வரை நடந்தது. இதனை தொடர்ந்து, வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 19-ந்தேதி வெளியிடப்பட்டது. அதை தொடர்ந்து […]

Loading

செய்திகள்

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் அரசியல் கட்சி பிரதிநிதகளுடன் விழுப்புரம் கலெக்டர் ஆலோசனை

விழுப்புரம், டிச. 13– விழுப்புரம் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கான ஆலோசனைக்கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட தேர்தல் அலுவலரும் கலெக்டருமான ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கினார். சிறப்பு வாக்காளர் பட்டியல் மேற்பார்வையாளர் (வடக்கு மண்டலம்) ராமன்குமார் கலந்துகொண்டு, வாக்காளர் பட்டியலில் முகவரி மாற்றம், இறப்பு போன்ற விவரங்கள் குறித்தும், புதிய வாக்காளர்களை பட்டியலில் சேர்ப்பதற்கான விவரங்கள் குறித்தும் கேட்டறிந்தார். அப்போது […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நாளையுடன் நிறைவு

சென்னை, டிச.10: தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நாளையுடன் நிறைவடைகிறது. தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (எஸ்.ஐ.ஆர்.) நடைபெற்று வருகின்றன. வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள இறந்த வாக்காளர்களின் பெயர்கள், ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள வாக்காளர்களின் பெயர்கள் ஆகியவற்றை நீக்கி, தகுதியுள்ள பட்டியலாக மாற்ற, இந்த எஸ்.ஐ.ஆர். மூலம் இந்திய தேர்தல் கமிஷன் மும்முரம் காட்டி வருகிறது. தற்போது 6.41 கோடி வாக்காளர்கள் இடம் பெற்றுள்ள பட்டியலில், […]

Loading

செய்திகள்

மக்கள் பிரச்சினைகளுக்காக ஆங்காங்கே போராட்டம் நடத்துங்கள் மாவட்ட செயலாளர்களுக்கு எடப்பாடி அறிவுறுத்தல்

சென்னை, நவ.26: உள்ளூர் மக்கள் பிரச்சினைகளுக்காக ஆங்காங்கே போராட்டம் நடத்துங்கள் என்று மாவட்ட செயலாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தினார். சென்னை அண்ணா தி.மு.க. தலைமை அலுவலகத்தில், எடப்பாடி பழனிசாமி மாவட்ட செயலாளர்களுடன் காணொலி காட்சி மூலமாக ஆலோசனை நடத்தினார். அப்போது சட்டமன்றத் தேர்தல் மற்றும் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப்பணிகள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் எடப்பாடிபழனிசாமி பேசியதாவது:-– அனைத்து மாவட்டங்களிலும், மாவட்ட செயலாளர்கள் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப்பணியை முன்னுரிமை கொடுத்து பணியாற்ற வேண்டும். தங்களது மாவட்டத்தில் […]

Loading

செய்திகள்

தி.மு.க.வினருக்கு எஸ்ஐஆர் பயிற்சி : இளங்கோ எம்.பி. தகவல்

மாநிலங்களவை உறுப்பினர் என். ஆர். இளங்கோ தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, வாக்காளர் பட்டியல் சிறப்பு சீராய்வு குறித்து திமுக சட்டத்துறை பயிற்சி முகாம் நடைபெற்றது. நூற்றுக்கணக்கான திமுக சட்டத்துறையினருக்கும், திமுக இளைஞர் அணியினருக்கும் மற்றும் தகவல் மற்றும் தொழில்நுட்ப அணியினருக்கும் எஸ்ஐஆர்-ஐ எதிர்கொள்ள பயிற்சி அளிக்கப்பட்டது. வாக்காளர் பட்டியல் சிறப்பு சீராய்வை மக்கள் பக்கம் நின்று எதிர்கொள்வோம் என்று பதிவிட்டுள்ளார்.

Loading

செய்திகள்

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணியை தொடரலாம்: சுப்ரீம் கோர்ட் உத்தரவு

புதுடெல்லி, நவ.12- தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணியை தொடரலாம் என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நடந்து வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சார்பில் வக்கீல் விவேக் சிங் ரிட் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி அரசியலமைப்புச் சாசனத்தின் 14, 19, 21, 325, 326 ஆகிய பிரிவுகளையும், மக்கள் பிரதிநிதித்துவ […]

Loading

செய்திகள்

நாடாளுமன்றத்தில் 3-வது நாளாக எதிர்க்கட்சிகள் அமளி: இரு அவைகளும் ஒத்திவைப்பு

புதுடெல்லி, ஜூலை 23– எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தொடர் அமளி காரணமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் 3-வது நாளாக இன்றும் அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டன. நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் கடந்த 21-ம் தேதி தொடங்கியது. ஆபரேஷன் சிந்தூர், பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம் உள்ளிட்ட பிரச்சினைகளை, கூட்டத் தொடர் தொடங்கியது முதல் எதிர்க்கட்சிகள் எழுப்பி வருகின்றன. அவையின் பிற அலுவல்களை ஒத்திவைத்து விட்டு இவற்றை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சிகள் இரு அவைகளிலும் வலியுறுத்தி வருகின்றன. எனினும், […]

Loading