செய்திகள்

இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விரைவாக விடுவிக்க நடவடிக்கை: மத்திய அமைச்சருக்கு ஸ்டாலின் கடிதம்

ராமநாதபுரம், டிச. 29: நடுக்கடலில் மீன்பிடித்தபோது தமிழகத்தைச் சேர்ந்த 3 மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வடக்கு துறைமுக பகுதியில் இருந்து நேற்று முன்தினம் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 1,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். அதன்படி மண்டபத்தை சேர்ந்த விசைப்படகு ஒன்றில் ஆமோஸ்டின் (வயது 25), ஜோன்தாஸ் (38), பரலோக செபஸ்தியான் (26) ஆகிய 3 மீனவர்களும் மீன்பிடிக்க சென்றனர். இந்த மீனவர்கள் நடுக்கடல் […]

Loading

செய்திகள்

2 நாள் பயணமாக மு.க.ஸ்டாலின் 29–ந்தேதி ராமநாதபுரம் செல்கிறார்

ராமநாதபுரம், செப். 19– 2 நாள் பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 28–ந்தேதி ராமநாதபுரம் செல்கிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டம் தோறும் சென்று கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இந்த ஆய்வு பயணத்தின் போது முடிவுற்ற திட்ட பணிகளை தொடங்கி வைத்து, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வருகிறார். அந்த வகையில் தற்போது ராமநாதபுரம் மாவட்டத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 29, 30 ஆகிய தேதிகளில் செல்ல உள்ளார். 29ந் தேதி மாலை பரமக்குடிக்கு செல்லும் முதலமைச்சர் கட்சி […]

Loading

செய்திகள்

துபாயிலிருந்து கோவை வந்த விமானத்தில் கடத்தப்பட்ட சிகரெட் பறிமுதல்: 7 பேர் கைது

கோவை, ஆக. 23– துபாயிலிருந்து கோவை வந்த விமானத்தில் கடத்தி வரப்பட்ட சிகரெட் பண்டல்களை பறிமுதல் செய்ய சுங்கத்துறை அதிகாரிகள் 7 பேரை கைது செய்தனர். கோவை விமான நிலையத்தில் எப்போதும் போல், சுங்கத்துறை அதிகாரிகள், உளவுத்துறை போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது துபாயில் இருந்து வந்த விமானத்தில் இறங்கிய பயணிகள் சிலரின் நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்பட்டதும். உடனடியாக அவர்களை தடுத்து நிறுத்திய அதிகாரிகள் அவர்களிடம் சோதனை நடத்தினர். பல கட்ட சோதனைகளுக்கு பின்னர் அவர்கள் […]

Loading

செய்திகள்

ராமநாதபுரத்தில் ரெயில்வே கேட் மூடப்படாத விவகாரம்; கேட் கீப்பர் பணியிடை நீக்கம்

ராமநாதபுரம், ஆக. 17– வாலாந்தரவை ரெயில் நிலையம் அருகே ரெயில் வந்தபோது கேட் மூடப்படாத விவகாரத்தில் கேட் கீப்பர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சென்னையிலிருந்து ராமேஸ்வரம் நோக்கி கடந்த நேற்று முன் தினம் இரவு சேது விரைவு ரெயில் சென்றுகொண்டிருந்தது. ராமநாதபுரம் ரெயில் நிலையத்தை கடந்து ராமேஸ்வரம் நோக்கி வாலாந்தரவை ரெயில்வே கேட் அருகே ரெயில் வந்த போது அப்பகுதியில் இருந்த ரெயில்வே கேட் மூடப்படாமல் இருந்தது. இதனை கண்டு சுதாரித்துக் கொண்ட ரெயில் ஓட்டுநர், துரிதமுடன் […]

Loading

செய்திகள்

பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி 2 பெண்கள் பலி

தொண்டி, ஜூலை 24– தொண்டி அருகே இன்று அதிகாலை பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 2 பெண்கள் பலியானார்கள். ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே மிகவும் பிரசித்தி பெற்ற தலமான வல்மீக நாதர் சமேத பாகம்பிரியாள் அம்மன் கோவிலுக்கும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் கிழக்கு கடற்கரை சாலை வழியாக நடைபயணமாக வருகிறார்கள். அந்த வகையில் ராமநாதபுரம் எம்.எஸ்.கே. நகர் பகுதியைச் சேர்ந்த 18 பெண்கள் ஒரு குழுவாக வந்து […]

Loading