சிறுகதை விழாக்கள்

சிறுகதை … சுதந்திர தின விழா..!விழா 33 … ராஜா செல்லமுத்து

பரபரப்பாக இருந்தது புழுதி பறக்கும் அந்தத் தெரு. ஓட்டமும் நடையுமாக இருந்தார்கள் அந்தத் தெருமக்கள். ‘ஊ’ என்று நாய் ஊளையிடும் சத்தம் அந்தத் தெருவில் ஏதோ ஒரு அசம்பாவிதம் நடக்கப்போகிறது என்பதைக் கட்டியம் கூறியது. அந்த ஊர் மக்கள் எல்லாம் கன்னியப்பன் வீட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்தார்கள் . ஏற்கனவே வீட்டின் முன்னே நிறைய ஆட்கள் கூடியிருந்தார்கள். வந்திருந்தவர்களுக்கெல்லாம் காபி கொடுத்துக் கொண்டிருந்தாள் ஒரு பெண். ” அம்மா இங்க ரெண்டு காப்பிய குடும்மா. அங்க ரெண்டு […]

Loading

சிறுகதை விழாக்கள்

சிறுகதை … தேர்த் திருவிழா ….!விழா 32 …. ராஜா செல்லமுத்து

அந்த மருத்துவமனை முழுவதும் அழுகைச் சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது.யாருக்கும் யாரும் ஆறுதல் சொல்ல முடியாத அவல நிலையில் இருந்தனர், மக்கள். ” இப்படி நடந்திருக்கக் கூடாது. “ “நடந்திருச்சு” “என்ன செய்ய?” ” இது சாமி குத்தமா ? இல்ல மனுச குத்தமான்னு எதுவும் தெரியலையே? “ “ஏதோ தவறு நடந்து இருக்கிறதுனால தான் இந்த மாதிரி எல்லாம் நடந்திருக்கு. இல்லன்னா இப்படி நடந்திருக்காது” என்று மருத்துவமனையில் முழுவதும் பேசிக் கொண்டிருந்தார்கள். ” ஊர் மக்கள் […]

Loading

சிறுகதை விழாக்கள்

சிறுகதை … உணவுத் திருவிழா..! விழா 31 … ராஜா செல்லமுத்து

காற்றின் திசையெங்கும் நறுமணம் பரப்பும் அறுசுவை உணவுகளின் வாசம். திரும்பிய பக்கமெல்லாம் உணவுத் திருவிழாவைப் பற்றிய விளம்பரங்கள். அந்த உணவுத் திருவிழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டிருந்தாள்,கோமதி. அவள் வருகைக்காக உணவுத் துறை அமைச்சரும் அத்தனை முக்கியப் புள்ளிகளும் காத்துக் கிடந்தார்கள். ” கோமதி என்ன அவ்வளவு பெரிய ஆளா ? அவளுக்காக நாம ஏன் காத்துக் கிடக்கணும்? விழாவ ஆரம்பிக்கலாமே? அமைச்சர் வேற காத்திட்டு இருக்காரு “ ” இல்ல சார், இந்த உணவுத் திருவிழாவை ஏற்பாடு […]

Loading

சிறுகதை விழாக்கள்

சிறுகதை … ஆடிப் பெருக்கு விழா..!விழா 30 … ராஜா செல்லமுத்து

” பூஜைக்கு எல்லாம் தயாரா இருக்கா ? “ என்று கேட்டுக் கொண்டே அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்தார், காவிரி மைந்தன். ” ஏன் இவ்வளவு அவசரப்படுறீங்க? அதான் டைம் இருக்குல்ல “ என்று மனைவி கோசலை சொன்னாலும் அதை ஒரு காதில் வாங்கி, மறு காதில் விட்டபடியே அங்குமிங்கும் அலைந்து கொண்டே இருந்தார், காவிரி மைந்தன். ” உனக்கென்ன நீ சொல்லுவ? ஆடிப்பெருக்கு எவ்வளவு பெரிய விழா தெரியுமா? இந்த நாள்ல நாம சாமி கும்பிட்டா தானே, […]

Loading

சிறுகதை விழாக்கள்

சிறுகதை … சிலை திறப்பு விழா ….! விழா 29 … ராஜா செல்லமுத்து

பதினைந்து அடி உயரம்.. மூன்று அடி அகலத்தில் சிலை செய்தாயிற்று. மேல்பூச்சு, கீழ் பூச்சு வேலைகள் முடிந்து சிலையை நிறுவுவதற்கு இன்னும் ஐந்து நாட்களே இருந்தன. ‘சிலையை எப்படிக் கொண்டு வரலாம்?’ என்று தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தார், கிருஷ்ணன். ” பெரிய லாரி வச்சுக் கொண்டு வந்திரலாமா? ” என்று கிருஷ்ணனின் நண்பன் குணா கேட்க “லாரியில வச்சுக் கொண்டு வந்தா ஏதாவது டேமேஜ் ஆயிருமே? அப்புறம் இவ்வளவு செலவு பண்ணுனது வேஸ்ட் ஆயிரும். கொஞ்சங்கூட கீறல் […]

Loading

சிறுகதை விழாக்கள்

சிறுகதை …..கூழ் ஊற்றும் விழா..! விழா 28 – ராஜா செல்லமுத்து

ஊ… ஊ…. என்ற பெண்களின் குலவைச் சத்தம். டூ… டூ … என்ற பம்பை, உடுக்கைகளின் சத்தம் கங்கை அம்மன் கோயில் முழுவதும் கேட்டுக் கொண்டிருந்தது. அந்தப் பகுதியில் கூழ் ஊற்றும் விழா அமர்க்களமாக நடந்து கொண்டிருந்தது. மக்களெல்லாம் கோயில் முன்கூடியிருந்தார்கள். அண்டா அண்டாவாக கூழ் நிரம்பியிருந்தது. கற்பூரம், தேங்காய், தீபம் காட்டி அதனுடன் கூழையும் வைத்து அபிஷேகம் செய்து கொண்டிருந்தார், கோயில் பூசாரி. ” இந்தக் கூழ் ஊத்துறதுனால என்ன பலன்? எதுக்காக இந்தக் கூழ் […]

Loading

சிறுகதை விழாக்கள்

சிறுகதை … பொங்கல் விழா…! …. ராஜா செல்லமுத்து

ஐந்து நாட்கள் நடக்கும் பொங்கல் திருவிழாவிற்காக வெளியூரிலிருந்த ஆட்கள் எல்லாம் கிராமத்தில் வந்து குவிந்தார்கள். தொடர் விடுமுறை என்பதால் எல்லோருக்கும் கொண்டாட்டம். உற்சாகம். காப்புக்கட்டில் ஆரம்பிக்கும் பொங்கல், காணும் பொங்கல் முடிவடையும் வரை அந்த ஊரே சந்தோசமாக இருக்கும். கட்டுக்கட்டாகக் கரும்புகள், வீட்டுக்கு வீடு பொங்கல் என்று யார் எந்த வீட்டிற்குள் நுழைந்தாலும் விருந்து போல சாப்பிட்டு விட்டு வரலாம் என்ற விருந்தோம்பலில் பொங்கல் விழா வெகு சிறப்பாகக் கொண்டாட ஏற்பாடானது. ஐந்து நாட்களுக்கும் ஐந்து புது […]

Loading

கதைகள் சிறுகதை விழாக்கள்

பொங்கல் விழா… ராஜா செல்லமுத்து

ஐந்து நாட்கள் நடக்கும் பொங்கல் திருவிழாவிற்காக வெளியூரிலிருந்த ஆட்கள் எல்லாம் கிராமத்தில் வந்து குவிந்தார்கள். தொடர் விடுமுறை என்பதால் எல்லோருக்கும் கொண்டாட்டம். உற்சாகம். காப்புக்கட்டில் ஆரம்பிக்கும் பொங்கல், காணும் பொங்கல் முடிவடையும் வரை அந்த ஊரே சந்தோசமாக இருக்கும். கட்டுக்கட்டாகக் கரும்புகள், வீட்டுக்கு வீடு பொங்கல் என்று யார் எந்த வீட்டிற்குள் நுழைந்தாலும் விருந்து போல சாப்பிட்டு விட்டு வரலாம் என்ற விருந்தோம்பலில் பொங்கல் விழா வெகு சிறப்பாகக் கொண்டாட ஏற்பாடானது. ஐந்து நாட்களுக்கும் ஐந்து புது […]

Loading

சிறுகதை விழாக்கள்

சிறுகதை … ஆண்டு விழா..!விழா 26 …. ராஜா செல்லமுத்து

ஆண்டு விழா கொண்டாட்டத்திற்காக அந்தத் தனியார் பள்ளி வெகு விமர்சையாக அலங்கரிக்கப்பட்டிருந்தது . பல்வேறு போட்டிகளை நடத்தி அதற்கான பரிசளிப்பு விழாவும் வழங்குவதற்குத் தயாராக இருந்தார்கள், பள்ளி நிர்வாகிகள். அந்தப் பகுதியில் இருக்கும் மிகப் பிரபலமான பள்ளி என்பதால் பெற்றோர்கள் எல்லாம் அந்தப் பள்ளியிலே குழந்தைகளைச் சேர்த்திருந்தார்கள். மாநிலத்திலேயே முதல் இடத்திற்கு வர வேண்டும். எந்த ஒரு மாணவரும் தேர்ச்சியடையாமல் போகக் கூடாது என்பதில் அந்தப் பள்ளி நிர்வாகம் ரொம்பவே கண்டிப்பாக இருந்தார்கள். அது போல தான் […]

Loading

சிறுகதை விழாக்கள்

சிறுகதை…….மாங்கனித் திருவிழா..!- விழா 25….. ! ராஜா செல்லமுத்து

திரும்பிய பக்கமெல்லாம் திருவிழாவாகக் கட்சி தந்த மாங்கனித் திருவிழாவில், ராதாகிருஷ்ணனை தேடிக் கொண்டிருந்தார்கள். ” சீக்கிரம் அந்தக் காெலைக் குற்றவாளியக் கண்டுபிடிக்கல. நமக்கு கெட்ட பெயர் வந்திரும். எப்பாடுபட்டாவது ,அந்தக் கொலைகாரப் பயல புடிச்சா தான், நமக்கு போலீஸ்ங்கிற பேரு. இல்ல வேற மாதிரி ஆயிரும் “ என்று கங்கணம் கட்டித் தேடிக் கொண்டிருந்தார்கள் காவல் துறையினர். அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான காரைக்கால் அம்மையாருக்கு காரைக்காலில் நடக்கும் மாங்கனித் திருவிழா ரொம்ப விசேஷமாக நடந்து கொண்டிருக்கும் […]

Loading