விழுப்புரம், நவ. 24: யுனெஸ்கோ நிறுவனத்தால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்ட விழுப்பும் மாவட்டம் செஞ்சிக் கோட்டையை வெளிநாட்டு தூதரக அதிகாரிகள் பார்வையிட்டனர். மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் சென்னை கிளைச் செயலகம் சார்பில், தூதரகங்களுடனான தொடர்பை வலுப்படுத்தும் விதமாக, மத்திய கலாசார அமைச்சகம், தொல்லியல் துறை ஆகியவற்றுடன் இணைந்து பாரம்பரிய வரலாற்று நினைவுச் சின்னங்களைப் பாா்வையிட வெளிநாட்டு தூதரக அதிகாரிகள் அழைத்துச் செல்லப்படுகின்றனர். அதன்படி, யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க செஞ்சிக் கோட்டையை […]
![]()


