நேற்று வரை, கோயில்களில் அடைந்து கிடந்த யானைகளுக்கு இன்று முதல் சில நாட்களுக்கு விடுதலை. சந்தோஷத்தின் உச்சிக்குப் போன யானைகள் தன் அகலக் காதுகளை இன்னும் கொஞ்சம் அகலமாய் விரித்து சர் சர் சர்ரென வீசிக் கொண்டிருந்தன. தன் தந்தங்களைத் துதிக்கை கொண்டுத் தடவிப் பார்த்துக் கொண்டன. தூண் போன்ற தன் கால்களை அப்படியும் இப்படியுமாய் ஆட்டிக் கொண்டிருந்தன. இருப்பிடம் விட்டு வேறு இடம் போகத் தயாராக இருப்பதால், சொல்ல முடியாத மகிழ்ச்சியில் திளைத்து புத்துணர்ச்சி விழாவிற்குப் […]
![]()


