செய்திகள்

ஸ்ரீ சாய்ராம் வணிக மேலாண் கல்லூரி ஏற்பாட்டில் உயர் கல்வியில் செயற்கை நுண்ணறிவு கருத்தரங்கு

சென்னை, நவ. 17– நாட்டில் உயர் கல்வியை மேம்படுத்துவதில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகிக்கிறது என மேலாண் தொழில்நுட்பக் கல்வி ஆலோசகர் பி.அன்புத் தம்பி கூறினார். மேற்கு தாம்பரம் ஸ்ரீசாய்ராம் வணிக மேலாண் கல்லூரி சார்பில் நடைபெற்ற தேசியக் கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற அவர் பேசுகையில், ‘சர்வதேச அளவில் கணினி விளையாட்டில் 70 ஆண்டுகளுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், தற்போது அனைத்துத் துறைகளின் வளர்ச்சி முன்னேற்றத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது […]

Loading