செய்திகள்

எஸ்ஐஆர் மூலம் தி.மு.க.வை அழிக்கும் முயற்சி நடக்காது: ஸ்டாலின் எச்சரிக்கை

ஸ்ரீரங்கம், நவ. 10– எஸ்ஐஆர் மூலம் தி.மு.க.வை அழிக்கும் முயற்சி நடக்காது என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார். திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. இளைய மகன் திருமண விழா சோமரசம்பேட்டையில் நடைபெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருமணத்தை முன் நின்று நடத்தி வைத்தார். திருமண விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:– தி.மு.க.வை அழிக்கப்போகிறோம் எனக்கூறி எதிரிகள் புதுப்புது உக்திகளை கையாளுகின்றனர். வருமான வரி, எஸ்ஐஆர் உள்ளிட்ட பல்வேறு உத்திகளோடு தமிழகத்தை நோக்கி வருகிறார்கள். எத்தனை உக்திகளை கையாண்டாலும் […]

Loading

செய்திகள்

அரசின் மறுவாழ்வுத் திட்ட நடவடிக்கைகள்: முதல்வர் ஸ்டாலினுக்கு இலங்கை தமிழர்கள் நன்றி

சென்னை, ஆக.22-– தமிழகத்தில் சில மாவட்டங்களில் இலங்கைத்தமிழர் மறுவாழ்வு முகாம்களில் பலர் வசித்து வருகின்றனர். அந்த தமிழர்களுக்கு தேவையான வசதிகளை தமிழக அரசு அளித்து வருகிறது. இந்த நிலையில் நெல்லை, கன்னியாகுமரி, விருதுநகர், தூத்துகுடி, தென்காசி, ராமநாதபுரம், மதுரை, திருவள்ளூர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் இருந்து, இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் தமிழர்கள் நேற்று சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினர். அப்போது, மறுவாழ்வு முகாம்களில் வாழும் தமிழர்களின் நலனுக்காக நிதி உதவி, குடியுரிமை முயற்சிகள், […]

Loading

செய்திகள்

‘இந்தியா’ கூட்டணி துணை ஜனாதிபதி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி மிகச்சரியான தேர்வு: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

சென்னை, ஆக.20-– ‘இந்தியா’ கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக சுதர்சன் ரெட்டியை அறிவித்திருப்பது மிகச்சரியான தேர்வு என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ‘இந்தியா’ கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளர் சுதர்சன் ரெட்டிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரி வித்துள்ளார். இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட சமூக வலைத்தள பதிவில் கூறியிருப்பதாவது:- ‘இந்தியா’ கூட்டணி சார்பில் துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சுதர்சன் ரெட்டிக்கு எனது உளப்பூர்வமான வாழ்த்துகள். நேர்மையாகவும், சுதந்திரமாகவும் செயல்பட்டு, குடிமக்களின் உரிமைகள் மற்றும் […]

Loading

செய்திகள்

‘‘முதல்வர் ஸ்டாலினை சந்தித்ததில் எந்தவித அரசியலும் இடம் பெறவில்லை’’: ஓ.பன்னீர்செல்வம்

சென்னை, ஆக 4– மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இல்லம் திரும்பிய ‘‘முதல்வர் ஸ்டாலினை சந்தித்ததில் எந்தவித அரசியலும் இடம் பெறவில்லை’’ என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். இது சம்பந்தமாக முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இன்று வெளியிட்டுள்ள தன்னிலை விளக்க அறிக்கையில் கூறியிருப்பதாவது:– ‘‘மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இல்லம் திரும்பியவர்களை அவர்களது இல்லம் தேடிச் சென்று நலம் விசாரிப்பதும், உயிரிழந்தவர்களின் உறவினர்களை சந்தித்து துக்கம் விசாரித்து அஞ்சலி செலுத்துவதும் தமிழ்ப் பண்பாடு. இந்த வகையில், முதலமைச்சர் உடல் நலக் […]

Loading

செய்திகள்

மயிலாடுதுறையில் மக்களை நேரடியாக சந்தித்தார்:

சென்னை, ஜூலை 16– “ஓரணியில் தமிழ்நாடு” என்ற மாபெரும் முன்னெடுப்பு திட்டத்தில் மயிலாடுதுறையில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மக்களை நேரடியாக சந்தித்து உறுப்பினர்களை சேர்த்தார். இந்தத் திட்டத்தில் உறுப்பினர்கள் சேர்க்கையை மு.க.ஸ்டாலின் கடந்த 3ந் தேதி அன்று சென்னை, ஆழ்வார்பேட்டையில் மக்களை நேரடியாக சந்தித்து தொடங்கி வைத்தார் என்பது நினைவிருக்கலாம். தொடர்ந்து, கடந்த 10ந் தேதி அன்று திருவாரூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சன்னதி தெருவில் முதலமைச்சர், மக்களை நேரடியாக சந்தித்து, இத்திட்டத்தில் உறுப்பினர்களை சேர்த்தார். மேலும், […]

Loading

செய்திகள்

தேசிய மருத்துவர்கள் தினம்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

சென்னை, ஜூலை 1– இன்று தேசிய மருத்துவர்கள் தினம். இதையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:– எளிய பின்புலங்களில் இருந்து வந்து, தமிழ்நாட்டின் மருத்துவக் கட்டமைப்பை வலிமைப்படுத்தி, மக்களின் நலன் காக்கும் தலைசிறந்த மருத்துவர்கள் அனைவருக்கும் தேசிய மருத்துவர்கள் தின வாழ்த்துகள்! தன்னலமற்ற சேவைக்குச் சொந்தக்காரர்களான நமது மருத்துவர்கள் அனைவருமே போற்றுதலுக்கு உரியவர்கள்! அவர்களது சேவைக்கு நமது நன்றியின் அடையாளமாகத் தலைசிறந்த 50 மருத்துவர்களுக்கு இன்று விருதுகள் வழங்கி மகிழ்கிறோம். இவ்வாறு […]

Loading