செய்திகள்

கழிப்பறையில் பெண் போலீசாரை வீடியோ எடுத்த எஸ்.எஸ்.ஐ. கைது

ராமநாதபுரம், ஜன. 19: முதல்வரின் பாதுகாப்புக்கு வந்த பெண் போலீசாரை, கழிப்பறைக்குள் மொபைல் போன் மூலம் வீடியோ எடுத்த எஸ்.எஸ்.ஐ, கைது செய்யப்பட்டார். ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் இமானுவேல் சேகரன் மணிமண்டபத்தை, நேற்று முன்தினம், முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். பாதுகாப்பு பணிக்காக வெளிமாவட்டங்களில் இருந்து போலீசார் வரவழைக்கப்பட்டனர். பரமக்குடி நகர் காவல் நிலையத்தில் பணிபுரியும் எஸ்.எஸ்.ஐ, முத்துப்பாண்டி (59), மணிநகர் சோதனை சாவடியில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார். அங்கு, தஞ்சாவூரில் இருந்து வந்த பெண் போலீசாரும் […]

Loading

செய்திகள்

அதிக காளைகளை அடக்கி சிறந்து விளங்கக்கூடிய ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு அரசு வேலை: ஸ்டாலின் அறிவிப்பு

அலங்காநல்லூர், ஜன. 17– ஜல்லிக்கட்டில் அதிகக் காளைகளை அடக்கும் சிறந்த வீரருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்தார். பொங்கல் பண்டிகையொட்டி ஆண்டுதோறும் தமிழரின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்கநல்லூர் ஆகிய இடங்களில் நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் அவனியாபுரத்திலும், நேற்று பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் வெகு விமரிசையாக நடைபெற்றன. இந்த நிலையில் இன்று உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுப் போட்டி கோலாகலமாய் துவங்கியது. […]

Loading

செய்திகள்

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 19 புதிய திட்டப் பணிகள்: முதல்வர் ஸ்டாலின் 17 முடிவுற்ற பணிகளைத் துவக்கினார்

சென்னை, ஜன. 3: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 108 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 11 திருக்கோயில்களில் 18 புதிய திட்டப் பணிகள் மற்றும் ஒரு பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டடம் ஆகியவற்றிற்கு அடிக்கல் நாட்டினார். 15 கோடியே 30 லட்சம் ரூபாய் செலவில் 7 திருக்கோயில்களில் 10 முடிவுற்ற திருப்பணிகள் மற்றும் 6 சரக ஆய்வாளர் அலுவலகங்களை திறந்து வைத்து, சிற்றுந்துகளின் பயன்பாட்டினை காணொலிக் […]

Loading

செய்திகள்

இடைநிலை ஆசிரியர்களை கைவிடமாட்டோம், நல்ல முடிவு எடுப்போம்: அமைச்சர் அன்பில் மகேஸ்

சென்னை, ஜன. 3: இடைநிலை ஆசிரியர்களை கைவிடமாட்டோம், அவர்கள் பொறுமையாக இருந்தால் நல்ல முடிவு எடுப்போம் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறினார். சென்னை நந்தனத்தில் நடந்த நிகழ்ச்சியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று கலந்து கொண்டார். அப்போது அவரிடம் நிருபர்கள் ஆசிரியர்கள் போராட்டம் குறித்த கேள்விகளை சரமாரி கேட்டனர். அதற்கு அவர் பதில் அளித்து கூறியதாவது:- போராட்டம் நடத்தி வரும் இடைநிலை ஆசிரியர்களிடம் நானும், அதிகாரிகளும் கடந்த 7 நாட்களாக […]

Loading

செய்திகள்

கருப்பைவாய் புற்றுநோய் இலவச தடுப்பூசி திட்டம் இம்மாத இறுதியில் முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்கிறார் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை, டிச.13– இந்தியாவிலேயே முதல்முறையாக முதலமைச்சரால் இம்மாத இறுதிக்குள் தொடங்கப்படவுள்ள எச்.பி.வி. (HPV) – கருப்பைவாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டத்தின்மூலம் தமிழ்நாட்டில் 3.38 லட்சம் பெண் குழந்தைகள் பயன்பெறுவார்கள் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை கூட்டரங்கில், உலக எய்ட்ஸ் தினம் 2025 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்று, எச்ஐவி, எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு பதாகைகள் வெளியிட்டார். […]

Loading

செய்திகள்

42 பத்திரிகையாளர்களுக்கு மாதம் ரூ.12,000 ஓய்வூதிய ஆணை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

சென்னை, டிச. 10– முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (10–ந்தேதி) தலைமைச் செயலகத்தில், செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் பத்திரிகைத் துறையிலிருந்து ஓய்வு பெற்று நலிந்த நிலையில் உள்ள 42 பத்திரிகையாளர்களுக்கு தலா 12 ஆயிரம் ரூபாய் மாதாந்திர ஓய்வூதியத்திற்கான ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 10 ஓய்வு பெற்ற பத்திரிகையாளர்களுக்கு ஆணைகளை வழங்கினார். தமிழ்நாட்டில் முதன்முறையாக உழைக்கும் பத்திரிகையாளர்களை முன்களப் பணியாளர்களாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார் என்பது நினைவிருக்கலாம். திராவிட மாடல் அரசு பொறுப்பேற்றப்பின், செய்தி மக்கள் […]

Loading

செய்திகள்

கள்ளக்குறிச்சியில் பெற்றோரை இழந்து தவிக்கும் 4 குழந்தைகளுக்கு வீடு, பணி நியமன ஆணை, நிதியுதவி முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

சென்னை, டிச.8– கள்ளக்குறிச்சி மாவட்டம், பூட்டை கிராமத்தைச் சேர்ந்த பெற்றோர்களை இழந்த 4 குழந்தைகளின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு வீட்டுமனைப் பட்டா, கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்கீடு. பணிநியமன ஆணை, அன்புக்கரங்கள் திட்டத்தின் கீழ் நிதியுதவி, திறன் பயிற்சிக்கான உதவித்தொகை ஆகியவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் வழங்கினார். கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டம், பூட்டை கிராமத்தைச் சேர்ந்த கமலக்கண்ணன் என்பவர் 14.11.2025 அன்று உடல்நலக் குறைவால் காலமானார். அவரது […]

Loading

செய்திகள்

நெல் கொள்முதல் ஈரப்பத விவகாரத்தில் தமிழக அரசின் கோரிக்கை நிராகரிப்பு

சென்னை, நவ. 20: நெல் கொள்முதலில் ஈரப்பதம் தளர்வு தொடர்பான தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஒன்றிய அரசு நிராகரித்துள்ளது. இது உழவர்களிடையே பிரதமர் உரையாற்றிய ஈரம் காய்வதற்குள் அடுத்த துரோகம் என்று முதல்வர் ஸ்டாலின் காட்டமாக கூறியுள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:– ‘‘கோவைக்கான மெட்ரோ ரெயில் திட்டத்தை நிராகரித்துவிட்டு, அதே கோவைக்கு எந்தவிதமான உறுத்தலும் இன்றி பிரதமர் வந்து சென்ற ஈரம்கூட இன்னும் காயவில்லை; அதற்குள் நெல் கொள்முதலில் […]

Loading

செய்திகள்

கோவை, மதுரை மெட்ரோ நிராகரிப்பு; பழிவாங்குவது கீழ்மையான போக்கு: முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

சென்னை, நவ. 19– பா.ஜ.க.வைத் தமிழ்நாட்டு மக்கள் நிராகரிப்பதற்காக இப்படி பழிவாங்குவது கீழ்மையான போக்கு என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வருங்கால வளர்ச்சிக்கு இன்றியமையாத தேவையான மதுரை மற்றும் கோவையிலும் மெட்ரோ ரயிலைக் கொண்டு வருவோம் என்றும் அவர் கூறினார். கோவை மற்றும் மதுரை மாநகரில் போதிய எண்ணிக்கையில் மக்கள் தொகை இல்லாததால் மெட்ரோ ரெயில் திட்டத்திற்கான அனுமதியை மத்திய அரசு தர மறுத்துவிட்டது இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:– […]

Loading

செய்திகள்

சென்னையில் பெண்களின் பாதுகாப்புக்காக 80 இளஞ்சிவப்பு ரோந்து வாகனங்கள் : முதல்வர் ஸ்டாலின் கொடி அசைத்து துவக்கினார்

சென்னை, நவ. 11– முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று தலைமைச் செயலகத்தில், காவல்துறை சார்பில் பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்காக, மாநகரங்களின் பயன்பாட்டிற்காக 12 கோடி ரூபாய் செலவில் 80 இளஞ்சிவப்பு ரோந்து வாகனங்களின் சேவைகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த இளஞ்சிவப்பு ரோந்து வாகனங்கள், தாம்பரம், ஆவடி, சேலம், கோயம்புத்தூர், திருப்பூர், திருச்சி, திருநெல்வேலி, மதுரை மாநகரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ரோந்து பணி மேற்கொண்டு பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் தனிக்கவனம் செலுத்த ஈடுபடுத்தப்படும். 2025-–2026–ம் ஆண்டு […]

Loading