செய்திகள்

வாக்குச்சாவடி முகவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

சென்னை, நவ.15- சிறப்பு தீவிர திருத்த பணிக்கான கணக்கீட்டுப் படிவங்களை நிரப்ப மக்களுக்கு உதவியாக இருக்க வேண்டும் என வாக்குச்சாவடி முகவர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார். சென்னை, கொளத்தூர் தொகுதியில் நடைபெற்ற ‘‘என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி’’ என்ற தலைப்பில் நடைபெற்ற வாக்குச்சாவடி பாக முகவர்கள் மற்றும் நிர்வாகி கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசியதாவது:- எங்கு சென்றாலும் எஸ்.ஐ.ஆர். பற்றித்தான் பேசிக்கொண்டிருக்கிறார்கள். மக்கள் ஒவ்வொருவரும், ‘‘நாங்கள் இந்திய குடிமக்கள் தான்’’ என்று நிரூபிக்க […]

Loading

செய்திகள்

காஞ்சிபுரம் அண்ணா பட்டு விற்பனை வளாகம் : ஸ்டாலின் திறந்தார்

சென்னை, நவ. 13– முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று தலைமைச் செயலகத்தில், கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறை சார்பில் காஞ்சிபுரம், வள்ளல் பச்சையப்பன் சாலையில் அமைந்துள்ள காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் அண்ணா பட்டு விற்பனை வளாகத்தை 3 கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டு காணெலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார். காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் 1971-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, தொடர்ச்சியாக லாபகரமாக செயல்பட்டு […]

Loading

செய்திகள்

எஸ்ஐஆர்–ஐ கண்டித்து தமிழகம் முழுவதும் தி.மு.க. கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம்.

சென்னை, நவ. 11– தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை (எஸ்ஐஆர்) கண்டித்து தமிழ்நாடு முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் இன்று தி.மு.க. கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வாக்குரிமை பறிப்பு, தேர்தல் ஆணையம், மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து கோஷம் எழுப்பி தி.மு.க. கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தி.மு.க.வின் மக்கள் பிரதிநிதிகளும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கோஷமிட்டனர். சென்னை மிண்ட் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், ம.தி.மு.க. […]

Loading

செய்திகள்

ரூ.223 கோடியில் 577 திட்டங்கள்: ஸ்டாலின் திறந்து வைத்தார்

புதுக்கோட்டை, நவ. 10– புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் ரூ.223 கோடி மதிப்பில் முடிவுற்ற 577 திட்டப்பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ரூ.202 கோடியில் 103 புதிய திட்டப் பணிகளுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். 43 ஆயிரத்து 993 பயனாளிகளுக்கு ரூ.341 கோடியே 77 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் வழங்கினார். நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:– புதுக்கோட்டை மாவட்டத்தில் சுமார் 37 ஆயிரம் பேருக்கு பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. தகுதியுள்ள மகளிர் அனைவருக்கும் மாதந்தோறும் ரூ.1000 […]

Loading