செய்திகள்

ஸ்டான்லி மருத்துவமனை அருகில் அடுக்குமாடி குடியிருப்புகள்: ஸ்டாலின் திறந்தார்

சென்னை, ஜன. 21: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் சென்னை ஏழுகிணறு, அரசு ஸ்டான்லி மருத்துவமனை அருகில், 147 கோடி ரூபாய் செலவில் நவீன உட்கட்டமைப்பு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள 776 அடுக்குமாடி குடியிருப்புகளைக் கொண்ட “முதல்வர் நகர்ப்புற குடியிருப்புகள்” திறந்து வைத்தார். மேலும் வால்டாக்ஸ் சாலை, தண்ணீர் தொட்டி தெருவில் 31 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள 144 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான கட்டுமானப் பணிகளை […]

Loading

செய்திகள் முழு தகவல்

‘100 சதவீத உழைப்பைக் கொடுத்து தேர்தல் களப்பணி ஆற்ற வேண்டும்: ஸ்டாலின் அறிவுறுத்தல்

சென்னை, ஜன. 21: 100 சதவீத உழைப்பை கொடுத்து தேர்தல் களப்பணியாற்றுங்கள் என்று தி.மு.க.வினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்கள் வழங்கி உள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் முதல் வாரம் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சட்டமன்ற தேர்தல் பணிகள் குறித்து தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆலோசனை மேற்கொண்டார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-– பொங்கல் கொண்டாட்டம் முடிந்து, […]

Loading

செய்திகள்

கார் ஓட்டினார் ஸ்டாலின்

சென்னை, ஜன. 10: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது வழக்கமான காலை நடைபயிற்சிக்கு பிறகு விண்டேஜ் காரை ஓட்டி மகிழ்ந்துள்ளார். இதனை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் அந்த பதிவில் டி.ஆர்.பி.ராஜா கூறியிருப்பதாவது; ”நமது அன்புக்குரிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மிகவும் எளிமையான, பக்கத்து வீட்டுக்காரரைப் போன்ற ஒரு மனிதர். குளிர்காலத்தின் இதமான காலைப் பொழுதில் நிதானமாக நடைப்பயிற்சி செய்வது, ஈ.சி.ஆர் சாலையில் சைக்கிள் ஓட்டுவது, அவ்வப்போது சாதாரணமாக காரில் பயணம் செய்வது போன்ற வாழ்க்கையின் […]

Loading

செய்திகள்

ஏரியில் மூழ்கி பலியானவர் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதி: ஸ்டாலின் உத்தரவு

சென்னை, ஜன. 10– ஏரியில் மூழ்கி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு 3 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:– ‘‘கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம், கிழக்கு மருதூர் கிராமத்தைச் சேர்ந்த சன்னியாசி என்பவரின் மகன் சுரேஷ் (வயது 43) என்பவர் நேற்று முன்தினம் (8–ந் தேதி) மாலை 5.30 மணியளவில் எதிர்பாராதவிதமாக மேற்படி கிராம ஏரியில் உள்ள நீரில் மூழ்கி உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த […]

Loading

செய்திகள்

“உங்க கனவ சொல்லுங்க” திட்டத்தின் தன்னார்வலர்களுக்கு தொப்பி, கைபேசி இணைப்பு: உதயநிதி வழங்கினார்

சென்னை, ஜன. 10: துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சென்னை மாவட்டத்தில் “உங்க கனவ சொல்லுங்க” திட்டப் பணிகளை மேற்கொள்ளும் தன்னார்வலர்களுக்கு தொப்பி மற்றும் கைபேசி இணைப்புகளை வழங்கினார். திராவிட மாடல் அரசு பொறுப்பேற்று கடந்த 5 ஆண்டுகளில் அமல்படுத்தப்பட்ட பல்வேறு அரசு திட்டங்களில் பயனடைந்துள்ள பயனாளிகளின் தரவுகள் மற்றும் விவரங்களை உறுதிப்படுத்தவும், திட்டங்களின் தற்போதைய செயல்பாட்டு நிலை குறித்து பொதுமக்களின் கருத்தினை அறியவும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (9–ந் தேதி) திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி, பாடியநல்லூரில் […]

Loading

செய்திகள்

பட்டு – பருத்தியில் 13 பேருக்கு சிறந்த நெசவாளர் விருது : ஸ்டாலின் வழங்கினார்

சென்னை, ஜன. 3: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த் துறை சார்பில் 2024-–2025–ம் ஆண்டில் மாநில அளவில் பட்டு மற்றும் பருத்தி இரகங்களில் சிறந்த நெசவாளர் விருதிற்கு தெரிவு செய்யப்பட்ட 8 விருதாளர்களுக்கு 20 லட்சம் ரூபாயும், சிறந்த வடிவமைப்பாளர்களுக்கான விருதிற்கு தெரிவு செய்யப்பட்ட 2 விருதாளர்களுக்கு 1.50 இலட்சம் ரூபாயும், சிறந்த இளம் வடிவமைப்பாளர்கள் விருதிற்கு தெரிவு செய்யப்பட்ட 3 விருதாளர்களுக்கு 2.25 லட்சம் ரூபாயும், என […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம்

சென்னை, நவ. 29: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம் தொடங்கியது. தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகள், கட்சியின் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் இதில் கலந்துகொண்டனர். வருகிற டிசம்பர் 1ம் தேதி நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கவுள்ள நிலையில் நாடாளுமன்றத்தில் எழுப்ப வேண்டிய பிரச்சினைகள் குறித்தும், 2 மாதங்களுக்கு ஒருமுறை நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் பெறப்படும் பணி அறிக்கை குறித்தும் தமிழ்நாட்டில் அவரவர் தொகுதியில் எஸ்ஐஆர் மற்றும் இதர பணிகள் குறித்தும் […]

Loading

செய்திகள் முழு தகவல்

கோவை, மதுரை மெட்ரோ திட்டத்தை மீண்டும் பரிசீலனை செய்ய பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்

சென்னை, நவ.22: தென்னிந்தியாவின் மான்செஸ்டர் நகரமான கோயம்புத்தூருக்கும், கோயில் நகரமான மதுரைக்கும் மெட்ரோ ரெயில் சேவைக்கான திட்ட அறிக்கைகளை மீண்டும் பரிசீலனை செய்து, ஒப்புதல் அளிப்பதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஒன்றிய நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகத்திற்கு தகுந்த அறிவுரைகள் வழங்கிட வலியுறுத்தி, பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (22–ந் தேதி) கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், கோயம்புத்தூர் மற்றும் மதுரை மாநகரங்களுக்கு மெட்ரோ ரெயில் அமைப்புகளுக்கான திட்டங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதற்கு தங்களது ஏமாற்றத்தையும், வேதனையையும் தெரிவித்துக் கொள்வதாகவும், […]

Loading

செய்திகள்

தி.மு.க. 75 அறிவுத் திருவிழா புத்தகக் காட்சி : முதலமைச்சர் ஸ்டாலின் பார்வையிட்டார்

சென்னை, நவ.17 தி.மு.க. 75 அறிவுத்திருவிழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு, 63 புத்தகங்களை வாங்கினார். வரும் ஆண்டுகளிலும் இது தொடரட்டும் என சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். தி.மு.க. இளைஞர் அணி சார்பில் சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் ‘தி.மு.க. 75 அறிவுத்திருவிழா’ கடந்த 8-ந்தேதி தொடங்கியது. இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நேற்று வரை இந்த திருவிழா நடந்தது. நேற்று நடந்த திருவிழாவிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அங்கு அமைக்கப்பட்டு இருந்த முற்போக்கு புத்தகக் காட்சியை […]

Loading

செய்திகள்

இணையதளம், சமூக ஊடகங்களை அளவோடு பயன்படுத்த வேண்டும் மாணவர்களுக்கு ஸ்டாலின் அறிவுரை

சென்னை, நவ.15- இணையதளம், சமூக ஊடகங்களை அளவோடு பயன்படுத்த வேண்டும் என மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை கூறியுள்ளார். சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா மாதிரி மேல்நிலைப்பள்ளியில் அரசு விழா மற்றும் குழந்தைகள் தின விழா நடந்தது. விழாவுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கினார். விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் குழந்தைகள் தின வாழ்த்துச் செய்தியை வாசித்தார். அதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதாவது:- பாவேந்தர் பாரதிதாசனார் அறிவுறுத்தியபடி, இனிமையான […]

Loading