சென்னை, ஜன. 5– மாவட்டச் செயலாளர்களின் கருத்துகளுக்கு ஏற்ப கூட்டணி குறித்து முடிவெடுக்கப்படும் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். கடலூரில் 9–ந்தேதி நடக்கும் மாநாட்டில் கூட்டணி முடிவை அறிவிப்போம் என்றும் அவர் தெரிவித்தார். கடந்த தேர்தலில் அண்ணா தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணியில் இடம்பெற்றிருந்த தே.மு.தி.க., ராஜ்யசபா சீட் ஒதுக்காததால் கூட்டணியை விட்டு வெளியே வந்தது. நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை தேமுதிக இன்னும் அறிவிக்கவில்லை. வரும் 9-ந் […]
![]()



