நெல்லை, அக். 10– நெல்லையில் தனியார் கல்லூரியில் 8 மாணவர்களுக்கு எலிக்காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து மறு உத்தரவு வரும் வரை கல்லூரி மூடப்பட்டது. நெல்லை மாவட்டம் திடியூரில் தனியார் இன்ஜினியரிங் கல்லூரி ஒன்று உள்ளது. இங்கு ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த கல்லூரி மாணவர்களில் சிலருக்கு நேற்று திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மாணவர்களுக்கு நடத்திய மருத்துவ பரிசோதனையில் 8 மாணவர்களுக்கு எலிக்காய்ச்சலுக்கான […]
![]()


