செய்திகள்

ஆம்னி பஸ்கள் மோதி விபத்து: 2 பெண்கள் உள்பட 3 பேர் பலி

மதுரை அருகே தேசிய நெடுஞ்சாலையில் மதுரை, ஜன. 25– மதுரை அருகே கொட்டாம்பட்டி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரம் நின்றுகொண்டிருந்த ஆம்னி பஸ் மீது மற்றொரு ஆம்னி பஸ் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இரண்டு பெண்கள் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 15க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சென்னையில் இருந்து நேற்றிரவு நெல்லைக்கு ஆம்னி பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. இன்று அதிகாலை மதுரை கொட்டாம்பட்டி அருகே பள்ளப்பட்டி பகுதியில் […]

Loading

செய்திகள்

தொண்டர்களுக்கு ஆர்.பி. உதயகுமார் வேண்டுகோள்

மதுரை, டிச. 11: அண்ணா தி.மு.க. பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 16 தீர்மானங்களையும் அம்மா பேரவையின் சார்பில் நடைபெறும் 44 வார திண்ணைப் பிரச்சாரத்தில் மக்களிடத்தில் எடுத்துச் செல்ல வேண்டும் என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அண்ணா தி.மு.க. அம்மா பேரவை போர்ப்படை வீரர்கள் இன்றைக்கு எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் அமைத்திட கடுமையாக உழைத்து வருகிறீர்கள். தற்போது எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா […]

Loading

செய்திகள் முழு தகவல்

கோவை, மதுரை மெட்ரோ திட்டத்தை மீண்டும் பரிசீலனை செய்ய பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்

சென்னை, நவ.22: தென்னிந்தியாவின் மான்செஸ்டர் நகரமான கோயம்புத்தூருக்கும், கோயில் நகரமான மதுரைக்கும் மெட்ரோ ரெயில் சேவைக்கான திட்ட அறிக்கைகளை மீண்டும் பரிசீலனை செய்து, ஒப்புதல் அளிப்பதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஒன்றிய நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகத்திற்கு தகுந்த அறிவுரைகள் வழங்கிட வலியுறுத்தி, பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (22–ந் தேதி) கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், கோயம்புத்தூர் மற்றும் மதுரை மாநகரங்களுக்கு மெட்ரோ ரெயில் அமைப்புகளுக்கான திட்டங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதற்கு தங்களது ஏமாற்றத்தையும், வேதனையையும் தெரிவித்துக் கொள்வதாகவும், […]

Loading

செய்திகள்

கோவை, மதுரை மெட்ரோ நிராகரிப்பு; பழிவாங்குவது கீழ்மையான போக்கு: முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

சென்னை, நவ. 19– பா.ஜ.க.வைத் தமிழ்நாட்டு மக்கள் நிராகரிப்பதற்காக இப்படி பழிவாங்குவது கீழ்மையான போக்கு என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வருங்கால வளர்ச்சிக்கு இன்றியமையாத தேவையான மதுரை மற்றும் கோவையிலும் மெட்ரோ ரயிலைக் கொண்டு வருவோம் என்றும் அவர் கூறினார். கோவை மற்றும் மதுரை மாநகரில் போதிய எண்ணிக்கையில் மக்கள் தொகை இல்லாததால் மெட்ரோ ரெயில் திட்டத்திற்கான அனுமதியை மத்திய அரசு தர மறுத்துவிட்டது இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:– […]

Loading

செய்திகள்

தீபாவளி பண்டிகை: பூக்களின் விலை கிடுகிடுவென உயர்வு

மதுரை, அக். 19– தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மதுரையில் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பூக்கள், தேங்காய் உள்ளிட்ட பொருட்களின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அந்த வகையில், மதுரை மலர் சந்தையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டும், வரத்து குறைவு காரணமாகவும் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. மதுரையில் ஒரு கிலோ மல்லிகைப் பூ ரூ.2000க்கு விற்பனை; பிச்சி ரூ.1800, முல்லை ரூ.1700க்கு விற்பனை. கனகாம்பரம் ரூ.1500, ரோஸ் ரூ.300, பட்டன் ரோஸ் ரூ.250,காத்திருக்கும் […]

Loading

செய்திகள்

நீதி விசாரணை நடத்த கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் மனு

மதுரை, அக். 10– மதுரையில் போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக நீதி விசாரணை நடத்த கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்படுகிறது. மதுரையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருட்டுகளை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சந்தேகத்திற்குரிய நபர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர். மதுரை அண்ணாநகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட யாகப்பாநகர் பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன். இவருடைய மகன் தினேஷ்குமார் (வயது 31). இவர், ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை […]

Loading

செய்திகள்

மதுரை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

மதுரை, அக். 9– மதுரை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, திருச்சி, கோவைக்கு அடுத்தபடியாக மதுரை விமான நிலையம் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. இங்கிருந்து இலங்கை, சிங்கப்பூர், மலேசியா மற்றும் அரபு நாடுகளும், உள்நாட்டில் சென்னை, பெங்களூரு, ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களுக்கும் விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மதுரை விமான நிலைய இயக்குனருக்கு வந்திருந்த இ-மெயிலில் மதுரை விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக தகவல் வந்தது.இதனையடுத்து […]

Loading

செய்திகள்

மதுரையில் வீடு இடிந்து மூதாட்டி பலி

மதுரை, அக். 5– மதுரையில் 3 மாடி வீடு இடிந்து விழுந்ததில் மூதாட்டி உயிரிழந்தார். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்த ஜெமீலா (வயது 60). இரு பேரக்குழந்தைகளுடன் மதுரை வந்தார். கண் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்டு, அண்ணாநகர் யாகப்பா நகர் சக்திமாரியம்மன் கோயில் அருகே உள்ள சகோதரர் வீட்டிற்கு நேற்று மாலை ஆட்டோவில் வந்தார். அப்போது சகோதரர் வீட்டின் எதிரே பழமையான 3 மாடி கட்டடம் திடீரென இடிந்து ஆட்டோவில் இருந்து இறங்கிய ஜெமீலா மீது […]

Loading

செய்திகள்

ஆயுதபூஜை: மதுரை, செங்கோட்டை, திருவனந்தபுரத்திற்கு கூடுதல் சிறப்பு ரெயில்கள்

தெற்கு ரெயில்வே அறிவிப்பு சென்னை, செப். 29– ஆயுத பூஜை பண்டிகை விடுமுறையையொட்டி, பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்க ஏற்கனவே தெற்கு ரெயில்வே சிறப்பு ரெயில்களை அறிவித்துள்ளது. இந்த நிலையில், கூடுதலா சில சிறப்பு ரெயில்களை இன்று அறிவித்துள்ளது. இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- ஆயுதபூஜை விடுமுறையையொட்டி, சென்னை எழும்பூர் – திருவனந்தபுரம் வடக்கு இடையே நாளை (30-ந் தேதி) சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. நாளை இரவு 10.15 மணிக்கு சென்னை […]

Loading

செய்திகள்

மதுரையில் அலைஅலையென திரண்ட தொண்டர்கள் ‘ஜனநாயகன்’ விஜய்: இளைஞர்கள் குதூகலம்

மதுரை, ஆக. 21– த.வெ.க. மாநாட்டிற்காக லட்சக்கணக்கான தொண்டர்கள் குவிந்ததால் மதுரை மாநகரமே தொண்டர்கள் வெள்ளத்தில் சூழ்ந்துள்ளது. தமிழக வெற்றிக் கழகம் கட்சியை விஜய், 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கினார். கடந்த அக்டோபர் 27-ந்தேதி கட்சியின் முதல் மாநில மாநாட்டை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடத்தினார். அந்த மாநாட்டில் விஜய்யின் பேச்சும், அணுகுமுறையும் அரசியல் வல்லுநர்களை உற்று கவனிக்க வைத்தது. இதனைத் தொடர்ந்து, தற்போது த.வெ.க.வின் பார்வை தென் மாவட்டங்கள் பக்கம் திரும்பியிருக்கிறது. 2026 சட்டமன்ற […]

Loading