நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் புதுடெல்லி, ஆக.21- குற்றவழக்குகளில் கைதாகி 30 நாட்கள் சிறையில் இருந்தால் பிரதமர், முதலமைச்சர்கள், அமைச்சர்களின் பதவியை பறிக்க வழிவகை செய்யும் மசோதா நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். இந்திய சட்டங்களின்படி பிரதமர் முதல் முதலமைச்சர்கள் வரை யார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டாலும் அவர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. சிறையில் இருந்தாலும் […]
![]()


