செய்திகள்

மும்பையிலிருந்து டெல்லி சென்ற இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

புதுடெல்லி, செப். 30– மும்பையிலிருந்து தலைநகர் டெல்லிக்கு இன்று காலை இண்டிகோ விமானம் புறப்பட்டது. அந்த விமானத்தில் சுமார் 200 பேர் பயணித்தனர். இந்நிலையில், விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது அந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. விமான கட்டுப்பாட்டு அறைக்கு இமெயில் மூலம் இந்த மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து, விமானம் டெல்லி விமானத்தில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் பாதுகாப்புப்படையினர் தீவிர சோதனை நடத்தினர். சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து வெடிகுண்டு […]

Loading

செய்திகள்

பா.ஜ.க. மூத்த தலைவர் விஜய்குமார் மல்ஹோத்ரா காலமானார்: பிரதமர் மோடி நேரில் அஞ்சலி

புதுடெல்லி, செப். 30– பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரான விஜய்குமார் மல்ஹோத்ரா காலமானார். அவருக்கு வயது 94. அவரது உடலுக்கு பிரதமர் மோடி நேரில் அஞ்சலி செலுத்தினார். வயது முதிர்வு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த விஜய்குமார் மல்ஹோத்ரா சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று அதிகாலை உயிரிழந்தார். டெல்லியில் உள்ள ராக்பஞ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் உடல் வைக்கப்பட்டுள்ளது. மல்ஹோத்ரா உடலுக்கு […]

Loading

செய்திகள்

நுங்கம்பாக்கத்தில் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள்: 3 பேர் கைது

சென்னை, செப். 30– நுங்கம்பாக்கத்தில் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் வைத்திருந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண் உத்தரவின்பேரில், போதை பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு, சென்னை பெருநகரில் போதைப் பொருட்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு குற்றவாளிகளையும், வலைபின்னல் தொடர்புகளில் உள்ளவர்களையும் கண்டறிந்து கைது செய்து, உரிய நடவடிக்கை எடுத்து வரப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக நுங்கம்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், காவல் குழுவினர் நுங்கம்பாக்கம், உத்தமர் […]

Loading

செய்திகள்

த.வெ.க. நிர்வாகிகள் 2 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்

கரூர், செப். 30– கரூர் துயர சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட த.வெ.க. நிர்வாகிகள் மதியழகன், பவுன்ராஜ் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27-ந் தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 41 பேர் பலியானார்கள்.இந்த சம்பவம் தொடர்பாக கரூர் டவுன் போலீஸ் நிலையத்தில் த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், மாநில இணை செயலாளர் நிர்மல்குமார், கரூர் மேற்கு மாவட்ட த.வெ.க. செயலாளர் மதியழகன் […]

Loading

செய்திகள்

போலீஸ் பாதுகாப்பு குறைபாடுகள் இருந்தது: எடப்பாடி பேட்டி

கரூர், செப்.28– விஜய் கூட்டத்தில் போலீஸ் பாதுகாப்பு குறைபாடு இருந்தது என்று எடப்பாடி கூறினார். கரூரில் த.வெ.க. விஜய் பரப்புரை நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடலுக்கு கரூர் மருத்துவமனையில் அண்ணா திமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை அஞ்சலி செலுத்தினார். இறந்தவர்களின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார். பின்னர் கரூர் அரசு மருத்துவமனைக்குள் சிகிச்சை பெற்று வருபவர்களை எடப்பாடி பழனிசாமி சந்தித்து ஆறுதல் வழங்கினார். இதையடுத்து எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது, ‘’நேற்றைய தினம் கரூரில் […]

Loading

செய்திகள்

நெரிசலில் சிக்கி உயிரிழந்த 39 பேரில் 37 பேரின் அடையாளம் தெரிந்தது

கரூர், செப்.28– கரூரில் விஜய் பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 39 பேரில் 37 பேரின் பெயர் விவரங்கள் தெரியவந்துள்ளன. கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் நேற்று இரவு பிரச்சாரம் மேற்கொண்டார். விஜய் பேசி முடித்து புறப்பட்ட பின்னர், கூட்டம் கலைந்து செல்லும்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 50-க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்தனர். அவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த கூட்ட நெரிசல் சம்பவத்தில் 39 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் […]

Loading

செய்திகள்

கரூர் உயிரிழப்பு சம்பவம்: ஜனாதிபதி, பிரதமர், தலைவர்கள் இரங்கல்

சென்னை, செப். 28– தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தேர்தல் பிரசாரத்தில் கூட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் கரூரில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 39 பேர் உயிரிழந்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் துயரச் செய்தி அறிந்து வேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது […]

Loading

செய்திகள்

நாமக்கல்லில் விஜய்க்கு வழிநெடுகிலும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு

நாமக்கல், செப். 27– நாமக்கல்லில் இன்று 3–ம் கட்ட பிரச்சாரத்தை த.வெ.க. தலைவர் விஜய் துவக்கினார். பிரச்சாரத்திற்கு வந்த விஜய்க்கு வழி நெடுகிலும் த.வெ.க. தொண்டர்கள் எழுச்சிமிகு வரவேற்பு கொடுத்தார்கள். கட்சி கொடிகளை அசைத்து வாழ்த்து கோஷம் எழுப்பியும் ஆரவாரம் செய்தார்கள். தொண்டர்கள் கூட்டத்தால், அவரது பிரச்சார வாகனம் மெல்ல ஆமை வேகத்தில் நகர்ந்து வந்ததால் குறிப்பிட்ட நேரத்திற்கு பிரச்சார இடத்திற்கு வர முடியவில்லை. பல மணி நேரம் தாமதமாகவே வந்தார். “தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் […]

Loading

செய்திகள்

பிஎஸ்என்எல் 4ஜி சேவை: பிரதமர் மோடி துவக்கினார்

புவனேஸ்வர், செப். 27– ஒடிசாவின் ஜர்சுகுடாவில் தொலைத்தொடர்பு, ரெயில்வே மற்றும் உயர்கல்வி போன்ற துறைகளில் ரூ. 60,000 கோடிக்கும் அதிகமான வளர்ச்சி திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அப்போது பிஎஸ்என்எல் 4ஜி சேவையையும் சுதேசி தொழில்நுட்பத்துடன் கட்டப்பட்ட 97,500க்கும் மேற்பட்ட 4ஜி தொலைத்தொடர்பு கோபுரங்களையும் அவர் தொடங்கி வைத்தார். ஏற்கெனவே 2.2 கோடி வாடிக்கையாளர்களுக்கு 4ஜி தொலைத்தொடர்பு சேவையை வழங்கி வருகிறது. இந்த நிலையில் நாடு முழுவதும் 100% சதவீத 4ஜி சேவையை வழங்கும்பொருட்டு துவக்கப்பட்டுள்ளது. […]

Loading

செய்திகள்

டெல்லி – குருகிராம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை

புதுடெல்லி, செப் 27– புதுடெல்லி குருகிராம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று (சனிக்கிழமை) அதிகாலை தடுப்புச் சுவரில் கார் மோதி ஏற்பட்ட விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு, போலீசார் விரைந்தனர். இந்த விபத்தில் 3 பெண்கள் மற்றும் 3 ஆண்கள் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். ஒரு ஆண் படுகாயமடைந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உத்தரபிரதேசத்திலிருந்து குருகிராமுக்கு, ஆறு பேர் காரில் ஏதோ ஒரு வேலைக்காக வந்திருந்த போது அதிகாலை […]

Loading