செய்திகள்

இருமல் மருந்து விவகாரம்; 2 அதிகாரிகள் சஸ்பெண்ட்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை, அக். 9– இருமல் மருந்து குடித்து 21 குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து அந்த மருந்தின் தரத்தை 2 ஆண்டுகளாக ஆய்வு செய்யாத 2 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை எழும்பூரில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ‘கோல்ட்ரிப்’ இருமல் மருந்தில் நச்சுத்தன்மை அதிகமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. 1-ந்தேதி மத்திய பிரதேசத்தில் இந்த மருந்தை சாப்பிட்ட 20 குழந்தைகள் உயிரிழந்த நிலையில் அம்மாநில அரசு […]

Loading

செய்திகள்

காஞ்சிபுரம் இருமல் மருந்து தயாரிப்பு நிறுவன உரிமையாளர் கைது

சென்னை, அக். 9– மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கோல்ட்ரிப் இருமல் மருந்து சாப்பிட்டதால் 20 குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில், அந்த இரு​மல் மருந்தை தயாரித்த தனியார் மருந்து ஆலையின் உரிமையாளரான ரங்கநாதன் கைது செய்யப்பட்டார். மத்​திய பிரதேசம் சிந்த்​வாரா மாவட்​டத்​தில் கடந்த ஆகஸ்ட் மாதத்​தில் கோல்ட்​ரிப் இரு​மல் மருந்து காரண​மாக முதல் குழந்தை உயி​ரிழந்​தது. ஆனால், அடுத்தடுத்த நாட்​களில் மேலும் சில குழந்​தைகள் சிறுநீரக செயலிழப்​பால் அடுத்​தடுத்து உயி​ரிழந்தன. மொத்தம் 20 குழந்தைகள் அங்கு உயி​ரிழந்தன. […]

Loading

செய்திகள்

மதுரை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

மதுரை, அக். 9– மதுரை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, திருச்சி, கோவைக்கு அடுத்தபடியாக மதுரை விமான நிலையம் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. இங்கிருந்து இலங்கை, சிங்கப்பூர், மலேசியா மற்றும் அரபு நாடுகளும், உள்நாட்டில் சென்னை, பெங்களூரு, ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களுக்கும் விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மதுரை விமான நிலைய இயக்குனருக்கு வந்திருந்த இ-மெயிலில் மதுரை விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக தகவல் வந்தது.இதனையடுத்து […]

Loading

செய்திகள்

மஹாராஷ்டிரா நவிமும்பையில் ரூ.19,000 கோடியில் சர்வதேச விமான நிலையம்: பிரதமர் மோடி திறந்து வைத்தார்

மும்பை, அக்.9- மஹாராஷ்டிராவின் நவிமும்பை யில் ரூ.19 ஆயிரத்து 650 கோடியில் கட்டப்பட்ட சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். நாட்டின் நிதி தலைநகரமான மும்பையில் சத்ரபதி சிவாஜி மகராஜ் விமான நிலையம் உள்ளது. இங்கு விமான போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மும்பையை அடுத்த நவிமும்பையில் மற்றொரு சர்வதேச விமான நிலையம் கட்ட முடிவு செய்யப்பட்டது. அதன்படி சுமார் ரூ.1 லட்சம் கோடி மதிப்பில் 4 கட்டங்களாக மிக பிரமாண்டமாக விமான நிலையம் […]

Loading

செய்திகள்

ஈரோடு நாகமலை குன்று உயிரியல் பாரம்பரியத் தளமாக அறிவிப்பு

சென்னை, அக்.9- ஈரோடு மாவட்டத்தில் உள்ள நாகமலை குன்றினை உயிரியல் பாரம்பரியத் தளமாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசின் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் சுப்ரியா சாகு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:- தமிழ்நாடு அரசு, உயிரியல் பன்மை சட்டம் 2002 பிரிவு 37 (1)-ன் கீழ் அரிட்டாபட்டியை 2022-ம் ஆண்டு நவம்பர் மாதமும், கடந்த மார்ச் மாதம் காசம்பட்டியையும், கடந்த மாதம் எலத்தூர் ஏரியையும் பல்லுயிர் பாரம்பரிய தளமாக அறிவித்தது. […]

Loading

செய்திகள்

ரெயில் டிக்கெட்டை ரத்து செய்யாமல் வேறு தேதிக்கு மாற்றலாம்: ஜனவரி மாதம் நடைமுறைக்கு வருகிறது

சென்னை, அக்.9- ரெயில்களில் ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகள், சில நேரம் தங்கள் பயண திட்டத்தை மாற்றினால் அந்த டிக்கெட்டை ரத்து செய்துவிட்டு மீண்டும் புதிதாக முன்பதிவு செய்ய வேண்டிய நடைமுறையே தற்போது உள்ளது. பயணத்திற்கு 12 முதல் 48 மணி நேரத்திற்கு முன்பு ரத்து செய்தால், கட்டணத்தில் 25 சதவீதம் பிடித்தம் செய்யப்படுகிறது. நேரம் குறைய குறைய இந்த கட்டணம் அதிகரிக்கிறது. பயணிகளின் சிரமத்தைப் போக்கும் வகையில் உறுதி செய்யப்பட்ட ரெயில் டிக்கெட்டை […]

Loading

செய்திகள்

சென்னையில் ‘ஏரோ டெஃப்கான்’ 3 நாள் சர்வதேச மாநாடு; 19 நாடுகள் பங்கேற்பு

சென்னை, அக்.7– உற்பத்தி துறையில் தமிழ்நாடு லீடராக மாறி வருகிறது என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெருமிதத்துடன் கூறினார். தமிழகம் இன்று இந்தியாவை ஈர்க்கும் நிலையில் இருந்து உலகை ஈர்க்கும் மாநிலமாக உயர்ந்திருக்கிறது என்றும் அவர் கூறினார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சென்னை நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்ற டிட்கோ, பி.சி.ஐ. ஏரோஸ்பேஸ் (பிரான்ஸ்), மற்றும் தமிழ்நாடு ஏரோஸ்பேஸ் தொழில் வளர்ச்சி கூட்டமைப்பு இணைந்து வான்வெளி மற்றும் பாதுகாப்பு துறைக்கான “ஏரோ டெஃப்கான் 2025” […]

Loading

செய்திகள்

எடப்பாடி பழனிசாமியுடன் பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளர்கள் சந்திப்பு

சென்னை, அக். 7– அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சென்னையில் இன்று பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர்கள் சந்தித்து பேசினர். தமிழக சட்டசபைத் தேர்தல் அடுத்தாண்டு நடைபெறவுள்ள நிலையில், அண்ணா தி.மு.க.வும் பா.ஜ.க.வும் இணைந்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளன. இதனிடையே பா.ஜ.க. சார்பில் தேர்தல் பொறுப்பாளராக தேசிய துணை தலைவர் பைஜெயந்த் பாண்டா எம்.பி., இணை பொறுப்பாளர் மத்திய இணை அமைச்சர் முரளிதர் மொஹோல் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். தேர்தல் பிரச்சாரம், கூட்டணி விவகாரம் தொடர்பாக ஆலோசனை செய்வதற்காக அவர்கள் […]

Loading

செய்திகள்

கரூர் துயர சம்பவம்: உயிரிழந்தோர் குடும்பங்களுடன் வீடியோ காலில் பேசி ஆறுதல் கூறிய விஜய்

கரூர், அக். 7– கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் நேற்று மாலை தவெக தலைவர் விஜய் உயிரிழந்தோரின் குடும்பங்களுடன் வீடியோ காலில் பேசி ஆறுதல் கூறியுள்ளார். தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கடந்த 27-ந்தேதி கரூரில் பிரசாரம் செய்த போது திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக போலீசார் பொதுச்செயலாளர் என்.ஆனந்த், இணைப் பொதுச்செயலாளர் சி.டி.நிர்மல்குமார் […]

Loading

செய்திகள்

சென்னையில் சிறப்பான செயல்பாடு: 29 காவலர்களுக்கு கமிஷனர் அருண் பாராட்டு

சென்னை, அக். 7– சென்னை பெருநகர காவல் துறையில் சிறப்பாக பணிபுரிந்த 29 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை கமிஷனர் அருண் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார். போதைப்பொருள்தடுப்பு நுண்ணறிவுப் பிரிவின் தொடர் ஒருங்கிணைந்த நடவடிக்கை மேற்கொண்டு குற்றவாளிகளை கைது செய்த ஆய்வாளர் என்.ராஜாசிங், உதவி ஆய்வாளர்கள் ஜெயராஜ், வெங்கடேஷ், தலைமைக்காவலர் ராம்திலக், காவலர்கள் அஸ்வின்குமார், சுதாகர், நவீன்குமார், வேல்முருகன் மற்றும் அடையார் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல்குழுவினர் ஆய்வாளர் மீனாட்சி சுந்தரம், உதவி ஆய்வாளர்கள் ஜெய்கணேஷ், […]

Loading