செய்திகள்

அதிபர் டிரம்ப் தலைமையில் எகிப்தில் நாளை காசா அமைதி ஆலோசனை கூட்டம்

கெய்ரோ, அக். 12– அமெரிக்க அதிபர் டிரம்ப் தலைமையில் எகிப்தில் நாளை காசா அமைதி ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும் இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இதையடுத்து ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் […]

Loading

செய்திகள்

மேற்கு வங்காளத்தில் மருத்துவ மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம்: 3 பேர் கைது

கொல்கத்தா, அக்.12– மேற்கு வங்காளத்தில் மருத்துவ மாணவி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். கடந்த ஆண்டு மேற்குவங்க மாநிலம் ஆர்.ஜி.கர் பகுதியில் உள்ள ஆஸ்பத்திரியில் பெண் டாக்டர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை தொடர்ந்து தற்போது மேற்குவங்க மாநிலத்தில் மற்றொரு பாலியல் வன்கொடுமை சம்பவம் அரங்கேறியுள்ளது. துர்காபூரில் உள்ள ஷோபாபூர் அருகே தனியார் மருத்துவ […]

Loading

செய்திகள்

பெங்களூரு -– சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து வாகனங்கள் மோதல்: 4 பேர் பலி

ஒசூர், அக். 12– ஒசூர் அருகே பெங்களூரு -– சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து வாகனங்கள் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். பெங்களூர் –- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஒசூர் அருகே இன்று அதிகாலை 4 மணிக்கு மினி லாரி, கார் மற்றொரு லாரி ஒன்றன்பின் ஒன்றாக பின் தொடர்ந்து சென்றது. அப்போது திடீரென முன்னாள் சென்ற மினி லாரி மீது கார் மோதியது. இதைத் தொடர்ந்து பின்னால் வந்த 4 வாகனங்களும் அடுத்தடுத்து மோதி […]

Loading

செய்திகள்

கிண்டி பகுதியில் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள்: 3 பேர் கைது

சென்னை, அக். 12– கிண்டி பகுதியில் மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் கடத்தி வந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண் உத்தரவின்பேரில், கிண்டி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் கிண்டி, எம்ஆரு்சி உட்புற சாலை அருகே கண்காணித்து, அங்கு சந்தேகப்படும்படி இருசக்கர வாகனத்தில் வந்த 3 நபர்களை மடக்கி விசாரித்து, சோதனை செய்தபோது, அவர்கள் மெத்தம்பெட்டமைன் என்ற அதன்பேரில் உத்திரமூர்த்தி (எ) நந்தா, யோசப், ஆகாஷ் ஆகிய […]

Loading

செய்திகள்

பணமோசடி வழக்கில் அனில் அம்பானி உதவியாளர் கைது: அமலாக்கத்துறை அதிரடி

புதுடெல்லி, அக். 11– பணமோசடி வழக்கில் தொழிலதிபர் அனில் அம்பானியின் உதவியாளரும், ரிலையன்ஸ் குழுமத்தின் நிர்வாக இயக்குநருமான அசோக் குமாரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். இந்தியாவில் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் சகோதரர் அனில் அம்பானி, 66. இவருக்கு சொந்தமான, ‘ராகாஸ்’ நிறுவனங்களுக்கு, ‘யெஸ்’ வங்கி 3,000 கோடி ரூபாய் கடன் வழங்கியது. ஒரு நிறுவனத்தின் பெயரில் பெற்ற கடன், சட்டவிரோதமாக மற்ற நிறுவனங்களுக்கு மாற்றம் செய்துள்ளதாக அனில் அம்பானி மீது குற்றச்சாட்டு எழுந்தது. […]

Loading

செய்திகள்

புஸ்சி ஆனந்த் முன்ஜாமீன் கேட்டு 2-வது முறையாக மனு

மதுரை, அக். 11– கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக முன்ஜாமீன் கேட்டு த.வெ.க. பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் 2வது முறையாக மனு தாக்கல் செய்துள்ளார். கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த மாதம் 27-ந் தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக பிரசார கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், துணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார், கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் […]

Loading

செய்திகள்

மீண்டும் தங்கம், வெள்ளி விலை புதிய உச்சம்: ஒரு சவரன் ரூ.91,400-க்கு விற்பனை

சென்னை, அக்.11– ஆபரணத் தங்கத்தின் விலை இன்று புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இதேபோல வெள்ளி விலையும் வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இந்தியாவின் மீது தொடுத்துள்ள வர்த்தக போரால் அந்நாட்டு டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்து வருகிறது. இதனால் பங்குச்சந்தைகளில் முதலீடு செய்வதை தவிர்த்துவிட்டு, தங்கத்தின் மீது ஏராளமானோர் முதலீடு செய்து வருகின்றனர். இது தங்கத்துக்கான தேவையை அதிகரிக்க செய்துள்ளது. இதன் காரணமாக தங்கத்தின் விலை தாறுமாறாக உயர்ந்து […]

Loading

செய்திகள்

பீகாரில் பா.ஜ.க. கூட்டணிக்கு மீண்டும் வெற்றி வாய்ப்பு: கருத்துக்கணிப்பில் தகவல்

புதுடெல்லி, அக்.11- பீகாரில் பா.ஜ.க. கூட்டணி மீண்டும் ஆட்சியமைக்கும் என கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது. பா.ஜ.க. மற்றும் ஐக்கிய ஜனதாதளம் இணைந்த தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் இருக்கும் பீகாரில் அடுத்த மாதம் 2 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதற்கான பணிகளில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் காங்கிரஸ்-–ராஷ்டிரீய ஜனதாதளம் இணைந்த இந்தியா கூட்டணி உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளன. குறிப்பாக கூட்டணிகளுக்கு இடையேயான தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட வேலைகள் […]

Loading

செய்திகள்

வெனிசுலாவை சேர்ந்த மரியா கொரினா மச்சாடோவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு

ஆஸ்லோ, அக்.11- வெனிசுலாவை சேர்ந்த மரியா கொரினா மச்சாடோவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது. ஐரோப்பிய நாடான ஸ்வீடனைச் சேர்ந்த வேதியியலாளரும், தொழிலதிபருமான ஆல்பிரட் நோபல் பெயரில் ஆண்டுதோறும் நோபல் பரிசுகள் வழங்கப்படுகின்றன. மனித குலத்துக்குப் பலனளிக்கும் வகையில் செயல்படுவோருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. இது, உலகின் மிகவும் உயரிய விருதாகக் கருதப்படுகிறது. இந்தாண்டுக்கான விருது அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியத்துவக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. அந்த வகையில், இந்தாண்டு அமைதிக்கான […]

Loading

செய்திகள்

அம்பத்தூரில் கஞ்சா கடத்தல்: பெண் கைது

ஆவடி, அக். 11– அம்பத்தூர் பகுதியில் கஞ்சா கடத்தி வந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். ஆவடி காவல் ஆணையரகத்தில் போதைப்பொருள் இல்லா தமிழகம் என்ற கோட்பாட்டை வலியுறுத்தி ஆவடி காவல் ஆணையாளர் சங்கர் உத்தரவுபடியும், கூடுதல் ஆணையாளர் பவானீஸ்வரி, அம்பத்தூர் மதுவிலக்கு அமல் பிரிவு உதவி ஆணையாளர் வழிகாட்டுதலின் படியும் செங்குன்றம் மதுவிலக்கு அமல்பிரிவு காவல் ஆய்வாளர் சசிகுமார் தலைமையில் தனிப்படை போலீசார் மீஞ்சூர், செங்குன்றம், மணலி, அத்திப்பட்டு, எண்ணூர் ஆகிய பகுதிகளில் கஞ்சா எனும் […]

Loading