செய்திகள்

தலைமறைவாக இருந்த புஸ்ஸி ஆனந்த் 16 நாட்களுக்கு பின் விஜய்யுடன் சந்திப்பு

சென்னை, அக். 14– கரூர் கூட்ட நெரிசலில் 41 உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து தலைமறைவாக இருந்த புஸ்ஸி ஆனந்த் 16 நாட்களுக்கு பின் த.வெ.க. தலைவர் விஜய்யை சந்தித்து பேசினார். கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த மாதம் 27-ந் தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக பிரசார கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், துணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார், கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் உள்பட சிலர் […]

Loading

செய்திகள்

சட்டசபை வளாகத்தில் அன்புமணி ராமதாஸ் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தர்ணா போராட்டம்

சென்னை, அக்.14– சட்டசபை வளாகத்தில் பா.ம.க.வின் அன்புமணி ராமதாஸ் எம்.எல்.ஏ.க்கள் இன்று காலை தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி ராமதாஸ் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த நிலையில் சட்டசபையில் பா.ம.க. குழுத் தலைவர் ஜி.கே.மணி, பாமக கொறடாவாக அருள் ஆகியோரை நீக்கக் கோரி கடந்த மாதம் அன்புமணி ராமதாஸ் தரப்பு எம்.எல்.ஏ.க்கள் சட்டசபைச் செயலர் சீனிவாசனை சந்தித்து கடிதம் கொடுத்தனர். ஆனால் இதுவரை பா.ம.க. குழுத் தலைவர் […]

Loading

செய்திகள்

தங்கம் சவரன் ரூ.95 ஆயிரத்தை நெருங்கியது: வெள்ளி விலை ரூ.206 ஆனது

சென்னை, அக்.14– தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,960 உயர்ந்துள்ளது. வெள்ளியும் ஒரு கிராம் ரூ.206க்கு விற்பனையாகிறது. தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில் தங்கம், வெள்ளி விலை தொடர்ந்து அதிகரித்து வருவது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பில் சரிவு, போர் உள்ளிட்ட காரணங்களால் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு நாள்தோறும் உயர்ந்து வருகிறது. கடந்த சில நாள்களாக காலை, மாலை என இரு நேரங்களில் […]

Loading

செய்திகள்

தமிழகத்தில் ரூ.15,000 கோடி முதலீடு: 14 ஆயிரம் புதிய வேலைவாய்ப்பு

சென்னை, அக்.14– தைவான் நாட்டை சேர்ந்த, ‘பாக்ஸ்கான்’ நிறுவனம், 15 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய, தமிழக அரசிடம் நேற்று உறுதி அளித்துள்ளது. இந்நிறுவனம் தமிழகத்தில், அதிகளவில் முதலீடு செய்வதால், விரைவாக ஒப்புதல் அளிக்க, வழிகாட்டி நிறுவனத்தில் தனி அமர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகில் சுங்குவார்சத்திரத்தில், பாக்ஸ்கான் நிறுவனத்துக்கு தொழிற்சாலை உள்ளது. அங்கு, அமெரிக்காவின், ‘ஆப்பிள்’ நிறுவனத்தின், ‘ஐபோன்’ பாகங்களை ஒருங்கிணைத்து, பல நாடுகளுக்கு போன்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தற்போது, பாக்ஸ்கான் […]

Loading

செய்திகள்

சென்னையில் மு.க.ஸ்டாலின் தலைமையில் நவம்பர் 5, 6-ந் தேதிகளில் கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகள் மாநாடு

சென்னை, அக்.14-– முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் உயர் அதிகாரிகள் மாநாடு சென்னையில் அடுத்த மாதம் 5, 6 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. தமிழக அரசு பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை கொண்டு வந்து நிறைவேற்றி வருகிறது. இந்த திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து அவ்வப்போது உயர்மட்ட அதிகாரிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைத்து ஆய்வு கூட்டங்களை நடத்தி வருகிறார். அதில் அவர், அனைத்து துறைகளும் செயல்படுத்தி வரும் திட்டங்கள் மற்றும் அதன் செயல்பாட்டு நிலை போன்றவற்றை அறிந்து […]

Loading

செய்திகள்

ரவுடி நாகேந்திரன் உடல் முன் திருமணம் செய்து கொண்ட 2வது மகன் அஜித்

சென்னை, அக். 12– ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு உயிரிழந்த உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் உயிரிழந்தார். அவரது மரணம் தொடர்பாக ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் மாதவரம் கோர்ட்டு மாஜிஸ்திரேட்டு தீபா விசாரணை நடத்தினார். இதைத் தொடர்ந்து நேற்று சென்னை அரசு ஸ்டாலின் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிக்கப்பட்டு, ரவுடி நாகேந்திரன் இன்று காலை உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனையடுத்து அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்து வியாசர்பாடி உள்ள அவரது வீட்டிற்கு அவரது […]

Loading

செய்திகள்

முதலமைச்சர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: மாற்றுத்திறனாளி கைது

சென்னை, அக். 12– முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மாற்றுத்திறனாளி கைது செய்யப்பட்டார். சென்னை காவல் கட்டுப்பாட்டறைக்கு நேற்று செல்போன் எண்ணிலிருந்து தொடர்பு கொண்டு பேசிய ஒருவர், சென்னை, சித்தரஞ்சன் சாலையிலுள்ள முதலமைச்சர் வீட்டில் வெடிகுண்டு வைத்துள்ளதாக கூறி இணைப்பை துண்டித்துள்ளார். இது குறித்து உடனடியாக தேனாம்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர், சென்னை காவல் பாதுகாப்பு பிரிவு வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயலிழத்தல் பிரிவு காவல் ஆய்வாளர் தலைமையிலான குழுவினர், […]

Loading

செய்திகள்

அபிராமபுரம் பகுதியில் 2 வீடுகளின் பூட்டை உடைத்து 22 பவுன் நகைகள் திருடிய ஆசாமி கைது

சென்னை, அக். 12– அபிராமபுரம் பகுதியில் இருவேறு வீடுகளில் பூட்டை உடைத்து 22 பவுன் தங்கநகைகள் மற்றும் பணத்தை திருடிய நபரை போலீசார் கைது செய்தனர். சென்னை, ஆர்.எ புரம், வள்ளீஸ்வரன் தோட்டம், பி பிளாக் பகுதியில் வசித்து வரும் ராஜா என்பவர் பழைய பொருட்கள் வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். இவரது தாயார் உஷா வீட்டை பூட்டிவிட்டு, மாலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் வைத்திருந்த சுமார் 20 சவரன் […]

Loading

செய்திகள்

தீபாவளி பண்டிகை விற்பனை: தி.நகரில் அலைமோதிய கூட்டம்

சென்னை, அக். 12– தீபாவளி பண்டிகையையொட்டி பொதுமக்கள் புத்தாடை வாங்குவதற்கான சென்னை தி.நகரில் குவிந்தனர். தீபாவளி பண்டிகை 20–ந் தேதி (திங்கள் கிழமை) கொண்டாடப்படுகிறது. தீபாவளியை பொதுமக்கள் புத்தாடை உடுத்தியும், பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடுவது வழக்கம். இந்த நிலையில் இந்தாண்டு தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 8 நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ளது. அது மட்டுமல்லாமல் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம். இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் தமிழகம் முழுவதும் பொதுமக்கள் தீபாவளி பொருட்கள் வாங்க இன்று காலை […]

Loading

செய்திகள்

பள்ளிகளில் யு.பி.ஐ. மூலம் கல்வி கட்டணம் வசூல்

புதுடெல்லி, அக்.12- பள்ளிகளில் மாணவர்களுக்கான பல்வேறு கட்டணங்களை வசூலிப்பதில் நவீனத்தை புகுத்துமாறு மாநிலங்களை மத்திய அரசு கடிதம் மூலம் அறிவுறுத்தி உள்ளது. குறிப்பாக கல்வி கட்டணம், சேர்க்கை மற்றும் தேர்வு கட்டணங்களை பணமாக வசூலிக்காமல் யு.பி.ஐ., செல்போன் வாலட்டுகள் மற்றும் நெட்பேங்கிங் போன்ற டிஜிட்டல் முறையில் வசூலிக்க அறிவுறுத்துமாறு மாநிலங்களுக்கு மத்திய கல்வி அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. இதன் மூலம் வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்படுவதுடன், பெற்றோருக்கு பணம் செலுத்தும் வசதியும் எளிமையாகும், அதாவது பள்ளிக்கு செல்லாமலேயே வீட்டில் […]

Loading