செய்திகள்

நீதிமன்றம் குறித்து அவதூறு பேச்சு: சீமான் மீது போலீசார் வழக்குப்பதிவு

சென்னை, அக். 19– நீதிமன்றம் குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் மாதம் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டியொன்றில், நீதித்துறையை அவமதிக்கும் வகையில் நீதிமன்ற செயல்பாடுகளை மோசமாக விமர்சித்து ஆபாச வார்த்தைகளால் பேசியதாகக் கூறி, வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் என்பவர் போலீசில் புகார் அளித்திருந்தார். அந்த புகார் மீது போலீசார் நடவடிக்கை […]

Loading

செய்திகள்

திருச்செந்தூரில் கடல் 100 அடி உள்வாங்கியது

திருச்செந்தூர், அக். 19– திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். அவர்கள் கடலில் புனித நீராடிவிட்டு கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வது வழக்கம். பொதுவாக அமாவாசை, பவுர்ணமி, அஷ்டமி, நவமி போன்ற கனத்த நாட்களில் திருச்செந்தூரில் கடல் திடீரென உள்வாங்கும். மேலும் சீற்றத்துடனும் காணப்படும். குறிப்பாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கும், அய்யா வைகுண்டர் அவதாரபதிக்கும் இடைப்பட்ட கடல் பகுதியில் ஒவ்வொரு மாதமும் அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில், அதற்கு முந்தைய […]

Loading

செய்திகள்

தமிழ்நாட்டில் 22, 23–ந் தேதிகளில் கனமழை: ஆரஞ்ச் எச்சரிக்கை

சென்னை, அக்.19– தமிழ்நாட்டில் 22, 23–ந் தேதிகளில் கனமழை இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வடகிழக்கு பருவமழை காலத்தில் முதல் நிகழ்வு 24-ந்தேதி (வெள்ளிக்கிழமை) உருவாகும் என சொல்லப்பட்டிருந்தது. அதாவது தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலம் மற்றும் புயல் சின்னங்கள் ஆகியவற்றை நிகழ்வுகள் என்று குறிப்பிடப்படுகிறது. இது நல்ல மழையை கொடுக்கும். அந்த வகையில் 24-ந்தேதி வங்கக்கடலில் உருவாகும் என எதிர்பார்க்கப்பட்ட காற்றழுத்த தாழ்வுப் பகுதி, முன்கூட்டியே 21-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) தென்கிழக்கு வங்கக்கடலில் […]

Loading

செய்திகள்

அமெரிக்கா முழுவதும் அதிபர் டிரம்ப் கொள்கைகளுக்கு எதிராக போராட்டம்

வாஷிங்டன்: அக்.19அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மேற்கொண்ட குடியேற்றம், பாதுகாப்பு மற்றும் கல்வி தொடர்பான கொள்கைகளை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன. பல நகரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். அமெரிக்க அதிபராக டிரம்ப் கடந்த ஜனவரியில் பதவியேற்றபோது, அரசின் பொருளாதார கொள்கைகளில் பல மாற்றங்களை அறிமுகப்படுத்தினார். அரசு செலவுகளை குறைக்கும் நடவடிக்கைகளும், வெளிநாடுகள் அமெரிக்க தயாரிப்புகளுக்கு விதிக்கும் வரிக்கு இணையான வரிகளை அமெரிக்காவும் விதிப்பதையும் அவர் அறிவித்தார். அரசு ஊழியர்களை எளிதாக பணிநீக்கம் […]

Loading

செய்திகள்

ஒரு சவரன் தங்கம் ரூ.95 ஆயிரத்தை கடந்தது

சென்னை, அக்.16– சென்னையில் இன்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 அதிகரித்து ஒரு சவரன் ரூ.95,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச நிலவரங்களால், தங்கம் விலை தினமும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. நேற்று தங்கம் விலை கிராமுக்கு 35 ரூபாய் உயர்ந்து, 11,860 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு 280 ரூபாய் அதிகரித்து, 94,880 ரூபாய் என்ற புதிய உச்சத்தை எட்டியது. இந்நிலையில் இன்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 […]

Loading

செய்திகள்

பூண்டி ஏரியில் நீர்திறப்பு அதிகரிப்பு; சென்னை மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

திருவள்ளூர், அக். 16– சென்னையின் குடிநீர் ஆதாரமான பூண்டி ஏரியிலிருந்து திறக்கப்படும் உபரிநீரின் அளவு அதிகரிக்கப்பட்ட நிலையில், கொசஸ்தலை ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வரும் நிலையில், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. அந்த வகையில், திருவள்ளூரில் அமைந்துள்ள சென்னையின் குடிநீர் ஆதாரமான பூண்டி ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டியது. எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, […]

Loading

செய்திகள்

பொள்ளாச்சி என்.ஜி.எம். கல்லூரி முன்னாள் மாணவர் சங்கக் கிளை திறப்பு

சென்னன, அக். 16– பொளாச்சி என்.ஜி.எம் கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்கத்தின் சென்னை மண்டல கினள துவக்க விழா சென்னையில் நனடபெற்றது. சங்கத்தின் தலைமைப் புரவலர், முனைவர். பி.கெ. கிருஷ்ணராஜ் வானவராயர் தலைமை வகித்து, சங்கத்தின் விவரப் புத்தகத்தை வெளியிட்டு சிறப்ரையாற்றினார். இந்தக் கல்லூரியின் முன்னாள் மாணவரும், சென்னை வானிலை ஆய்வு மைய முன்னாள் தலைமை அதிகாரியுமான முனைவர் எஸ் பாலச்சந்திரன், சங்கத்தின் தொலைநோக்கு உரையை வழங்கினார். கர்னல் சண்முகம் வரவேற்புரை ஆற்றினார். சங்கத் தனலவர் மருத்துவர் […]

Loading

செய்திகள்

சட்டசபைக்கு ‘‘கிட்னிகள் ஜாக்கிரதை’’ பேட்ஜ் அணிந்து வந்த அ.தி.மு.க. எம்எம்ஏக்கள்

சென்னை, அக். 16– தமிழக சட்டசபைக்கு இன்று அண்ணா தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ‘‘கிட்னிகள் ஜாக்கிரதை’’ என்று எழுதி இருந்த பேட்ஜ் அணிந்து வந்திருந்தனர். தமிழக சட்டசபை கூட்டம் 14–ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. நேற்று 2வது நாள் கூட்டத்திற்கு வந்த அண்ணா தி.மு.க. உறுப்பினர்கள் கரூர் சம்பவம், கிட்னி திருட்டை கண்டித் கருப்பு கையில் கைப்பட்டை அணிந்து வந்திருந்தனர். 3வது நாளான இன்று சட்டசபைக்கு அண்ணா தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ‘‘கிட்னிகள் ஜாக்கிரதை’’ என்று எழுதி இருந்த […]

Loading

செய்திகள்

சென்னை கொளத்தூரில் ரூ.111 கோடியில் துணை மின் நிலையம்: ஸ்டாலின் திறந்துவைத்தார்

சென்னை, அக்.16-– சென்னை கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட கணேஷ் நகரில் ரூ.110.92 கோடி மதிப்பீட்டில் புதிதாக நிறுவப்பட்டுள்ள துணை மின் நிலையத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்துவைத்தார். தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்தின் சார்பில் கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கணேஷ் நகர் பகுதியில், வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.110.92 கோடி மதிப்பீட்டில் 230/33 கிலோ வாட் வளிம காப்பு துணைமின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த துணை மின் நிலையத்தின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. […]

Loading

செய்திகள்

ரூ.2 ஆயிரம் கோடியில் ஹிட்டாச்சி நிறுவன விரிவாக்கத்துக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம்:

சென்னை, அக்.16- தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை சார்பில் சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 5 வருடங்களில் ரூ.2 ஆயிரம் கோடி முதலீடு மற்றும் 3 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் சென்னை போரூரில் உள்ள ஹிட்டாச்சி குழுமத்தை சேர்ந்த ஹிட்டாச்சி எனர்ஜி டெக்னாலஜி சர்வீசஸ் நிறுவனத்தின் உலகளாவிய தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க மையத்தின் விரிவாக்க திட்டத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் […]

Loading