செய்திகள்

சர்தார் வல்லபாய் படேல் பிறந்த நாள்: ஜனாதிபதி, பிரதமர் மோடி மரியாதை

புதுடெல்லி, அக். 31– சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். இந்தியாவின் இரும்பு மனிதர் என அழைக்கப்படும் சர்தார் வல்லபபாய் படேல் குஜராத் மாநிலம், ஆனந்த் மாவட்டம், கரம்சாத் என்ற கிராமத்தில் 1875ம் ஆண்டு அக்டோபர் 31–ந்தேதி பிறந்தார். இந்தியாவை ஒரே குடையின் கீழ் கொண்டு வந்தவர் வல்லபாய் படேல். இவரது பிறந்த நாள் 2014ம் ஆண்டு முதல் […]

Loading

செய்திகள்

தமிழகத்தின் அவமான சின்னமாக தி.மு.க. திகழ்கிறது: அண்ணாமலை தாக்கு

சென்னை, அக். 31– தமிழகத்தின் அவமான சின்னமாக தி.மு.க. திகழ்கிறது என்று அண்ணாமலை கூறியுள்ளார். பிரதமர் மோடி பிகார் மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் செய்தபோது, ‘தமிழ்நாட்டில் வேலை செய்யும் உழைக்கும் பிகார் மக்களை தி.மு.க.வினர் துன்புறுத்துகின்றனர்’ என்று பேசியிருந்தார். பிரதமரின் இந்த பேச்சுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது: தி.மு.க.வின் ஊழலும், போலி வேடமும் மக்கள் மத்தியில் அம்பலப்படும்போதெல்லாம், […]

Loading

செய்திகள்

பா.ஜ.க. – எடப்பாடி தப்புக்கணக்கு: ஸ்டாலின் எச்சரிக்கை

சென்னை, அக்.26– மக்கள் வாக்குரிமையை பறித்து தேர்தலில் வெற்றி பெறலாம் என பா.ஜ.க. – எடப்பாடி தப்புக்கணக்கு போடுகிறார்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தி.மு.க. தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள மடலில் கூறியிருப்பதாவது:– 2018-–ம் ஆண்டு கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டபோது, அப்போது ஆட்சியிலிருந்த அண்ணா தி.மு.க.வின் முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள் ஆகியோர் சாவகாசமாகக் களத்திற்கு வந்த நிலையிலும், எதிர்க்கட்சியான தி.மு.க.தான் புயல் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில், பொழுது விடிவதற்கு முன்பாகவே களமிறங்கி […]

Loading

செய்திகள்

முழுநேர சினிமா விமர்சகராக மாறிவிட்டார் ஸ்டாலின்: எடப்பாடி கடும் தாக்கு

சென்னை, அக்.28– எதற்காக முதலமைச்சரானோம் என்பதை மறந்துவிட்டு, முழுநேர சினிமா விமர்சகராக மாறிவிட்டார் ஸ்டாலின் என்று எடப்பாடி பழனிசாமி காட்டமாக கூறினார். அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தன்னுடைய எக்ஸ் தளத்தில் தெரிவித்திருப்பதாவது:– நாற்று நட்ட கைகளில், மழையில் நனைந்து முளைத்திருந்த நெல்லைப் பிடித்த போது, விவசாயிகளின் விவரிக்க முடியாத வேதனையை உணர்ந்தேன். ஆனால், இந்த நெல்லைப் பிடித்திருக்க வேண்டிய முதல்வர் ஸ்டாலினின் கை, படக்குழுவினரின் கைகளைப் பற்றிக் கொண்டிருக்கிறது.திரைப்படங்களைப் பார்ப்பதிலோ, திறமையான திரைப்பட குழுவினரை […]

Loading

செய்திகள்

தாய்லாந்து – கம்போடியா போர் நிறுத்த ஒப்பந்தம்: டிரம்ப் முன்னிலையில் கையெழுத்து

கோலாலம்பூர், அக். 26– அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்னிலையில், தாய்லாந்து – கம்போடியா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. கடந்த ஜூலையில், தென்கிழக்கு ஆசிய நாடுகளான தாய்லாந்துக்கும், கம்போடியாவுக்கும் இடையே எல்லை பகுதிகளில் மோதல் ஏற்பட்டது. பல ஆண்டுகள் இல்லாத வகையில், இம்மோதலில் பலர் கொல்லப்பட்டனர். மேலும், 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் குடியிருப்புகளை விட்டு தற்காலிகமாக இடம்பெயர்ந்தனர். இதையடுத்து, இம்மோதலை முடிவுக்கு கொண்டு வர மலேசியா மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் […]

Loading

செய்திகள்

8 கி.மீ வேகத்தில் நகர்கிறது: இன்றே உருவாகிறது ‘மோன்தா’ புயல்

சென்னை, அக். 26– வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 8 கி.மீ வேகத்தில் வடமேற்கில் நகர்ந்து வருகிறது. இன்று மாலை 5.30 மணிக்கு புயலாக (மோன்தா) வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:– தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று காலை 5.30 மணிக்கு மேற்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக […]

Loading

செய்திகள்

அமெரிக்க வரலாற்றில் பெண் ஒருவர் நிச்சயம் அதிபராக பதவி ஏற்பார்: கமலா ஹாரிஸ்

வாஷிங்டன், அக். 26– அமெரிக்க வரலாற்றில் பெண் ஒருவர் நிச்சயம் அதிபராக பதவி ஏற்பார் என தான் எதிர்பார்ப்பதாக ஜனநாயக கட்சியின் முன்னாள் துணை அதிபர் கமலா ஹாரிஸ் கூறியுள்ளார். சமீபத்தில் சர்வதேச ஊடக நிறுவனம் ஒன்றுக்கு அவர் பேட்டி அளித்தார். அதில் இவ்வாறு கூறியுள்ளார். கடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப்பை எதிர்த்து கமலா ஹாரிஸ் போட்டியிட்டார். தேர்தலில் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அப்போதைய அதிபர் ஜோ பிடன் பாதியில் விலகிய நிலையில் […]

Loading

செய்திகள்

கோவையில் ரெயிலைக் கவிழ்க்க சதி: 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை, அக். 26– கோவையில் ரெயிலைக் கவிழ்க்க தண்டவாளத்தில் மரக்கட்டை வைத்த 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. தென் இந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் கோவையில், ஏராளமான தொழில் நிறுவனங்கள் உள்ளது. இங்கு வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் சொந்த ஊர் செல்ல பெரும்பாலும் ரெயில்களை பயன்படுத்தி வருகிறார்கள். இதற்காக கோவையில இருந்து நாள்தோறும் நூற்றுக்கணக்கான ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 22–ந்தேதி கோவையில் இருந்து இருகூர் வழியாக […]

Loading

செய்திகள்

மலேசியாவில் உற்சாக வரவேற்பு: நடனக் கலைஞர்களுடன் டிரம்ப் நடனமாடினார்

கோலாலம்பூர், அக். 26– மலேசியா சென்ற அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு ராணுவ மரியாதையுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அமெரிக்க ஜனாதிபதியாக 2-வது முறையாக டிரம்ப் கடந்த ஜனவரியில் பதவியேற்றார். இந்த நிலையில் 5 நாட்கள் பயணமாக டிரம்ப் ஆசிய நாடுகளுக்கு வருகை தந்துள்ளார். இது அவருடைய முதல் ஆசிய நாடுகள் பயணமாகும். மலேசியாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் 3 நாட்களுக்கு நடைபெற உள்ள ஆசியான் உச்சி மாநாட்டில் அதிபர் டிரம்ப் கலந்து கொள்கிறார். முன்னதாக கம்போடியா–தாய்லாந்து இடையேயான […]

Loading

செய்திகள்

தனியார் பல்கலைக்கழகங்கள் சட்டம் வாபஸ்: தி.மு.க. அரசு சமூகநீதியிடம் மண்டியிட்டிருக்கிறது

சென்னை, அக். 26– தமிழ்நாட்டில் எழுந்த கொந்தளிப்பை சமாளிக்க முடியாமல் தி.மு.க. அரசு சமூகநீதியிடம் மண்டியிட்டிருக்கிறது என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– தமிழ்நாட்டில் இயங்கி வரும் தனியார் சுயநிதி கல்லூரிகள், அரசு உதவி பெறும் தனியார் கல்லூரிகள் ஆகியவற்றை தனியார் பல்கலைக்கழகங்களாக்க அனுமதிக்கும் வகையில் நிறைவேற்றப்பட்ட சட்டத் திருத்த முன்வடிவை திரும்பப் பெறுவதாக தி.மு.க. அரசு அறிவித்திருக்கிறது. சமூகநீதியை படுகொலை செய்யும் செயலுக்கு எதிராக பா.ம.க. […]

Loading