செய்திகள்

சவுதி அரேபியாவில் இந்தியர் சுட்டுக்கொலை

ரியாத், நவ. 1– சவுதி அரேபியாவில் இந்தியாவை சேர்ந்த இளைஞர் விஜய் குமார் மஹதோ போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். ஜார்க்கண்ட் மாநிலம் கிரிதி மாவட்டம் துதாபானியா கிராமத்தை சேர்ந்தவர் விஜய் குமார் மஹதோ (வயது 27) இவர் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு வேலைக்காக சவுதி அரேபியா சென்றார். ஜெட்டா நகரில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் டவர் லைன் பிட்டராக பணியாற்றி வந்தார். சவுதி அரேபியாவில் உள்ளூர் போலீசாருக்கும், மதுபானம் கடத்தல் கும்பலுக்கும் இடையே மோதல் […]

Loading

செய்திகள்

தங்கம் விலை மீண்டும் உயர்வு: ஒரு சவரன் ரூ.90,480க்கு விற்பனை

சென்னை, நவ. 1– சென்னையில் இன்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் ரூ.90,480க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச நிலவரங்களால் நம் நாட்டில் தங்கம் விலையில் உயர்ந்து வருகிறது. சென்னையில் நேற்று முன்தினம் காலை தங்கம் விலை கிராமுக்கு 225 ரூபாய் குறைந்து 11,100 ரூபாய்க்கும், சவரனுக்கு 1,800 ரூபாய் சரிவடைந்து 88,800 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. மாலை தங்கம் விலை கிராமுக்கு 200 ரூபாய் உயர்ந்து ரூ.11,300ம், சவரனுக்கு, ரூ.1,600 […]

Loading

செய்திகள்

எல்விஎம்–3 எம்5 ராக்கெட் நாளை விண்ணில் பாய்கிறது

திருப்பதி, நவ.1– விண்ணில் நாளை ஏவப்பட உள்ள எல்விஎம்–3 எம்5 ராக்கெட் திட்டம் வெற்றி அடைய, திருப்பதியில் இஸ்ரோ தலைவர் நாராயணன் உள்ளிட்ட விஞ்ஞானிகள் வழிபாடு நடத்தினர். நாட்டின் தகவல் தொடர்பு வசதிகளை மேம்படுத்த இஸ்ரோ சார்பில் இதுவரை 48 செயற்கைக்கோள்கள் விண்ணில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில் கடந்த 2013ம் ஆண்டு செலுத்தப்பட்ட ஜிசாட்–7 (ருக்மணி) செயற்கைக்கோளின் ஆயுள்காலம் விரைவில் நிறைவடைய உள்ளது. அதற்கு மாற்றாக சுமார் ரூ.1,600 கோடியில் 4,410 கிலோ எடை கொண்ட அதிநவீன […]

Loading

செய்திகள்

தமிழ்நாட்டை மீண்டும் அமைதி, வளம், வளர்ச்சி என்ற உயரிய கொள்கைப் பாதையில் வழிநடத்திட உறுதியேற்போம்

சென்னை, நவ.1– தமிழ்நாட்டை மீண்டும் அமைதி, வளம், வளர்ச்சி என்ற உயரிய கொள்கைப் பாதையில் வழிநடத்திட உறுதியேற்போம் என்று அண்ணா தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அண்ணா தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:– சுதந்திர இந்தியாவில் மொழிவழியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டு, நாடே வியக்கும் நம் உயிர்நிகர் தமிழ்நாடு நமக்கு கிடைத்த பொன்னாளான இந்நாளை, “தமிழ்நாடு நாள்” என்று எனது தலைமையிலான அண்ணா தி.மு.க. அரசு அறிவித்ததை பெருமையுடன் […]

Loading

செய்திகள்

வணிக பயன்பாட்டுக்கான கியாஸ் சிலிண்டர் விலை குறைவு

சென்னை,நவ. 1 வணிக பயன்பாட்டுக்கான கியாஸ் சிலிண்டர் விலை குறைந்துள்ளது. பாரத், இந்துஸ்தான், இந்தியன் ஆயில் ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் வீடுகளுக்கு 14.20 கிலோ எடையிலும், வணிக பயன்பாட்டுக்கு 19 கிலோ எடையிலும், சமையல் கியாஸ் சிலிண்டர்களை நாடு முழுவதும் வினியோகம் செய்து வருகின்றன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் […]

Loading

செய்திகள்

வீல்ஸ் இந்தியா 2ம் காலாண்டு நிகர லாபம் ரூ.28 கோடியாக உயர்வு

சென்னை, நவ 1– வீல்ஸ் இந்தியா நிறுவனம், செப்டம்பர் 30ந் தேதியுடன் முடிவடைந்த 2ம் காலாண்டில் நிகர லாபத்தில் 26.69% அதிகரித்து ரூ.28 கோடியாக உயர்ந்துள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் ரூ.22 கோடியாக இருந்தது. இதேபோல வருவாய் 8.63% அதிகரித்து ரூ.1179 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு ரூ.1085 கோடியாக இருந்தது. உலகளாவிய சூழ்நிலையில் நிச்சயமற்ற தன்மை இருந்தபோதிலும் நிறுவனம், ரூ.299 கோடி ஏற்றுமதி வருவாயைப் பதிவு செய்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 15.6% […]

Loading

செய்திகள்

அண்ணா தி.மு.க.வில் இருந்து செங்கோட்டையன் நீக்கம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

சென்னை, நவ.1- சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரனை சந்தித்த செங்கோட்டையனை அண்ணா தி.மு.க.வில் இருந்து அதிரடியாக நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அண்ணா தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், அண்ணா தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் இணைத்து பலப்படுத்த வேண்டும் என்று கூறியதோடு பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு காலக்கெடுவும் நிர்ணயித்தார். இதனால் அவரது கட்சிப்பதவிகள் அதிரடியாக பறிக்கப்பட்டன. இருப்பினும் கட்சி உறுப்பினராக நீடித்து வந்தார். இதற்கிடையே பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் 118-வது ஜெயந்தி விழா மற்றும் குரு […]

Loading

செய்திகள்

நத்தம் அருகே ஆட்டோ மீது அரசு பஸ் மோதி விபத்து; பெண் பலி: 8 மாணவர்கள் காயம்

திண்டுக்கல், அக். 31– நத்தம் அருகே ஆட்டோ மீது அரசுப் பஸ் மோதியதில் பெண் பலியானார். 8 மாணவர்கள் காயமடைந்தனர். திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே சமுத்திராபட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ-மாணவிகள் 8 பேர் திண்டுக்கல்லில் பள்ளியில் நடைபெறும் கணித வினாடி வினா போட்டியில் கலந்து கொள்வதற்காக சமுத்திரப்பட்டியில் இருந்து நத்தம் நோக்கி ஆட்டோவில் வந்துள்ளனர். அந்த ஆட்டோவில் 8 மாணவர்கள் உள்பட 11 பேர் பயணம் செய்தனர். ஆட்டோவை பூதகுடியைச் சேர்ந்த […]

Loading

செய்திகள்

இந்திரா காந்தி நினைவு நாள்: சோனியா, ராகுல் மரியாதை

புதுடெல்லி, அக். 31– முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவு நாளையொட்டி அவரது நினைவிடத்தில் சோனியா, ராகுல் காந்தி ஆகியோர் மரியாதை செலுத்தினார்கள். இந்தியாவின் முதல் பெண் பிரதமரான இந்திரா காந்தி, கடந்த 1984ம் ஆண்டு அக்டோபர் 31ந்தேதி தனது பாதுகாவலர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 41வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்தியா முழுவதும் உள்ள காங்கிரஸ் தொண்டர்கள் அவரது நினைவு நாளை அனுசரித்து வருகின்றனர். இந்த நிலையில் டெல்லியில் சக்தி ஸ்தலத்தில் […]

Loading

செய்திகள்

த.வெ.க. தலைமை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை, அக். 31– சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த சில மாதங்களாக அரசியல் கட்சித் தலைவர்கள், பொது இடங்கள், திரைப் பிரபலங்களின் வீடுகள், விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. ஏற்கனவே நடிகர் ரஜினிகாந்த், தனுஷ், காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் வீடுகளில் வெடிகுண்டு வைக்கப்பட்டதாக மிரட்டல் வந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் […]

Loading