செய்திகள்

உத்தரப்பிரதேசத்தில் நடந்த சோகம் தண்டவாளத்தை கடந்த 6 பேர் ரெயில் மோதி பலி

மிர்சாபூர், நவ. 5– உத்தரப்பிரதேசத்தில் ரெயில் தண்டவாளத்தை கடந்த 6 பேர் ரெயில் மோதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேசத்தின் மிர்சாபூர் மாவட்டத்தில் உள்ள சுனார் சந்திப்பில் இன்று காலை 9:15 மணியளவில் சோபன்-பிரயாக்ராஜ் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்து நின்றது. அதிலிருந்து இறங்கிய பயணிகள் சிலர் நடைமேம்பாலத்தை பயன்படுத்தாமல் தண்டவாளத்தை கடந்த செல்ல முயன்றனர். முயன்றனர். அப்போது ​​மூன்றாவது நடைமேடை வழியாக சென்ற கல்கா மெயில் மோதியதில் 6 பேர் தூக்கி வீசப்பட்ட நிலையில் உடல் […]

Loading

செய்திகள்

2026 சட்டமன்ற தேர்தலில் த.வெ.க. முதல்வர் வேட்பாளர் விஜய்

* கூட்ட நெரிசலில் பலியான 41 பேருக்கு இரங்கல் * மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் தலைவருக்கும், பொதுமக்களுக்கு பாதுகாப்பு * விவசாயிகள் விரோத ஆட்சியாளர்களுக்குக் கண்டனம் சென்னை, நவ. 5– கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் பங்கேற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து அவர் மீது அரசியல் கட்சிகள் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தன. தொடர்ந்து மவுனம் சாதித்து வந்த விஜய், கரூர் சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்து […]

Loading

செய்திகள்

பீகார் தேர்தல் கருத்துக்கணிப்பு: பா.ஜ.க. கூட்டணி ஆட்சியை பிடிக்கிறது

பாட்னா, நவ.5- பீகாரில் தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன. இதில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. 243 உறுப்பினர்களை கொண்ட பீகார் சட்டசபைக்கு நவம்பர் 6 மற்றும் 11-ந்தேதி என இரண்டு கட்டமாக தேர்தல் நடக்கிறது. இதன்படி 121 தொகுதிகளுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது. இதற்கான தேர்தல் பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது. இந்த தேர்தலில் முதல்-மந்திரி நிதிஷ்குமார் தலைமையிலான ஆளும் […]

Loading

செய்திகள்

விஜயின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன? — தவெக இன்று சிறப்பு பொதுக்குழு கூட்டம்

சென்னை, நவ. 5: கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் நடத்திய பிரச்சார கூட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த துயரச் சம்பவத்துக்குப் பிறகு கட்சியின் நிர்வாக நடவடிக்கைகள் ஒரு மாத காலம் மந்தமாக இருந்தன. இப்போது, அந்த அமைதி முறிந்து கட்சிச் செயல்பாடுகள் மீண்டும் வேகமெடுத்துள்ளன. இதன் தொடர்ச்சியாக இன்று (செவ்வாய்க்கிழமை) காலை மாமல்லபுரத்தில் உள்ள தனியார் அரங்கில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) சிறப்பு […]

Loading

செய்திகள்

அனில் அம்பானியின் ரூ.3 ஆயிரம் கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கம்

ரூ.17 ஆயிரம் கோடி பண மோசடி : புதுடெல்லி, நவ. 3– ரூ.17 ஆயிரம் கோடி பண மோசடி செய்ததாக அனில் அம்பானியின் ரூ.3 ஆயிரம் கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமத்திற்கு எதிரான வழக்கில் சுமார் ரூ.3,084 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது. இதில் மும்பையின் பாலி ஹில்லில் உள்ள வீடு, டெல்லியில் உள்ள ரிலையன்ஸ் சென்டர் மற்றும் 8 நகரங்களில் உள்ள ரியல் எஸ்டேட் சொத்துக்கள் அடங்கும். […]

Loading

செய்திகள்

கோவையில் கல்லுாரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: 3 பேருக்கு போலீஸ் வலை

கோவை, நவ. 3– கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். கோவை விமான நிலையத்தின் பின்புறம், நேற்றிரவு தனது ஆண் நண்பருடன் கல்லூரி மாணவி பேசி கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த 3 பேர் மாணவியை கடத்த முயற்சி செய்தனர். இதையடுத்து மாணவியின் ஆண் நண்பர், 3 பேரிடம் இருந்து காப்பாற்ற போராடி உள்ளார். 3 பேர் […]

Loading

செய்திகள்

தெருநாய்கள் விவகாரத்தில் 7–ந்தேதி தீர்ப்பு: சுப்ரீம் கோர்ட்

புதுடெல்லி, நவ.3– தெரு நாய்கள் விவகாரம் தொடர்பான வழக்கில் 7ம் தேதி கூடுதலாக வழிகாட்டு நெறிமுறைகளுடன் தீர்ப்பு வழங்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தெரிவித்தனர். தெரு நாய் தொல்லை விவகாரத்தை சுப்ரீம் கோர்ட் தானாக முன்வந்து வழக்காக பதிவு செய்து விசாரித்து வருகிறது. இதில் தெரு நாய்களை பிடித்து கருத்தடை செய்து பிடித்த இடத்திலேயே விடுவிக்க கடந்த ஆகஸ்ட் மாதம் உத்தரவிட்டு இருந்தது. மேலும் இந்த விவகாரத்தில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் இணக்க […]

Loading

செய்திகள்

ஜனவரி மாதம் பயன்பாட்டுக்கு வரும் வேளச்சேரி-–பரங்கிமலை பறக்கும் ரெயில் சேவை

சென்னை, நவ.3-– வேளச்சேரி–-பரங்கிமலை பறக்கும் ரெயில் சேவை பணிகள் தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. வருகிற ஜனவரி மாதம் பயன்பாட்டுக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டு உள்ளதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னையில் கடற்கரை–-வேளச்சேரி இடையே பறக்கும் ரெயில் சேவை பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்த சேவையை பரங்கிமலை வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டது. வேளச்சேரியில் இருந்து பரங்கிமலை வரை நீட்டித்தால் புழுதிவாக்கம், வேளச்சேரி, ஆதம்பாக்கம் ஆகிய பகுதி மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று கருதி இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. 5 […]

Loading

செய்திகள்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 அதிகரிப்பு

சென்னை, நவ.3– சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 அதிகரித்து ஒரு சவரன் ரூ.90,800க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச நிலவரங்களால் நம் நாட்டில் தங்கம் விலையில் கிடுகிடுவென உயர்ந்துக் கொண்டே செல்கிறது. சென்னையில் நேற்று முன் தினம் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் ரூ.90,480க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று ஞாயிறு என்பதால் தங்கம் விலையில் மாற்றமில்லை. வார தொடக்க முதல்நாளான இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 அதிகரித்து ஒரு […]

Loading

செய்திகள்

தெலுங்கானாவில் அரசுப் பேருந்து– லாரி மோதல்: 24 பேர் பலி

பிரதமர் மோடி ரூ.2 லட்சம் நிதியுதவி ஐதராபாத், நவ.3– தெலுங்கானாவில் அரசுப்பேருந்தும் லாரியும் மோதியதில் 3 மாத பெண் குழந்தை உட்பட 24 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம், தண்டூரிலிருந்து ஐதராபாத் நோக்கி 70 பயணிகளுடன் அரசுப் பேருந்து இன்று அதிகாலை காலை புறப்பட்டது. ரங்காரெட்டி மாவட்டம் மிரியால குடா அருகே ஐதராபாத் – பிஜாபூர் தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து வந்துகொண்டிருந்தபோது டிப்பர் லாரியுடன் மோதி விபத்துக்குள்ளானது. மோதிய வேகத்தில் லாரி […]

Loading