செய்திகள்

டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் தொழில்நுட்பக் கோளாறு:

100க்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிப்பு புதுடெல்லி, நவ. 7– இந்த தொழில்நுட்ப கோளாறு காரணமாக டெல்லியில் இருந்து நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்படும் 100-க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். புதுடெல்லி சர்வதேச விமான நிலையத்தின் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாடு மையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 100க்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. நாட்டின் தலைநகர் புதுடெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் நாளொன்றுக்கு […]

Loading

செய்திகள்

சாலையில் நடந்த சென்ற இளம்பெண் கதற கதற காரில் கடத்தல்

4 தனிப்படை அமைத்து போலீசார் தேடுதல் வேட்டை கோவை, நவ. 7– கோவையில் இளம்பெண் கதற கதற காரில் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் 4 தனிப்படைகள் அமைத்து கடத்தல் கும்பலை தேடி வருகின்றனர். கோவையில் காரில் இருந்த காதலனை தாக்கி விட்டு கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 3 வாலிபர்களை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்து கைது செய்தனர்.பெண் பாலியல் வன்கொடுமை சம்பவத்துக்கு […]

Loading

செய்திகள்

பொதுக்கூட்டங்கள், ‘ரோடு ஷோ’ நடத்த கட்டுப்பாடுகள்

இன்று நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் அரசு முடிவு சென்னை, நவ.6– தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டங்கள், ‘ரோடு ஷோ’ நடத்த பல்வேறு கட்டுப்பாடுகள் கொண்டுவர இன்று நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் அரசு முடிவு செய்யப்பட்டது. கடந்த 27.9.2025 அன்று கரூரில் நடைபெற்ற அரசியல் பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.இச்சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில் அரசியல் கட்சி […]

Loading

செய்திகள்

பீகாரில் முதல்கட்ட சட்டசபை தேர்தல்: 121 தொகுதிகளில் விறுவிறு வாக்குப்பதிவு

பாட்னா, நவ.6– பீகார் சட்டசபை தேர்தலில் முதல் கட்டமாக 121 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு விறுவிறுப்புடன் தொடங்கி நடைபெற்று வருகின்றது. பகல் 1 மணி நிலவரப்படி 42.3% சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. வாக்குச் சாவடிகளில் வரிசையில் நின்று மக்கள் ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர். சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், இந்தியா கூட்டணி முதலமைச்சர் வேட்பாளருமான தேஜஸ்வி யாதவ் பாட்னாவில் உள்ள ஒரு வாக்குச் சாவடியில் தனது வாக்கைச் செலுத்தினார். அவருடன் அவரது மனைவி […]

Loading

செய்திகள்

எர்ணாகுளம்-பெங்களூரு வந்தே பாரத் ரெயில் சேவை: 8–ந் தேதி பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்

கோவை, நவ. 6– எர்ணாகுளம்-பெங்களூரு இடையேயான வந்தே பாரத் ரெயில் சேவையை 8–ந் தேதி பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார். கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து கோவை வழியாக கேரள மாநிலம் எர்ணாகுளத்துக்கு வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரெயில் தமிழகத்தின் கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய 4 ரெயில் நிலையங்களில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. 3 மாநிலங்களை இணைத்து இயக்கப்படும் இந்த ரெயிலுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு […]

Loading

செய்திகள்

நள்ளிரவில் பைக் ரேஸ்: கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் உயிரிழப்பு

சென்னை, நவ. 6– சென்னையில் நள்ளிரவு பைக் ரேஸின்போது வாகனங்கள் அடுத்தடுத்து மோதிக் கொண்ட சங்கிலித் தொடர் விபத்தில், ரேஸ் பைக் ஓட்டிச் சென்ற கல்லூரி மாணவன் உள்பட 2 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ராயப்பேட்டை பேகம் சாகிப் சாலையை சேர்ந்த 19 வயதான கல்லூரி மாணவர் சுகைல் மற்றும் செல்போன் கடை ஊழியர் சோயல் ஆகியோர் நேற்றிரவு ராயப்பேட்டை பீட்டர்ஸ் மேம்பாலத்தில் பைக் ரேஸில் ஈடுபட்டுள்ளனர். ராயப்பேட்டையிலிருந்து அண்ணா சாலை நோக்கி […]

Loading

செய்திகள்

தங்கம் விலை மீண்டும் உயர்வு: சவரனுக்கு ரூ.560 அதிகரிப்பு

சென்னை, நவ.6– சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.90,000-க்கு விற்பனையாகிறது. கடந்த 2 நாட்களாக தங்கம் விலை குறைந்த நிலையில் இன்று உயர்வை சந்தித்து உள்ளது. சர்வதேச நிலவரங்களால் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தங்கம் விலை ரூ.98 ஆயிரத்தை தொட்டது. அதன்பின்னர் இறக்கத்தை கண்டது. இந்த நிலையில் சென்னையில் தங்கம் விலை கடந்த 4–ந்தேதி சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.90,000-க்கு விற்பனையானது. தொடர்ந்து […]

Loading

செய்திகள்

2026 ஐபிஎல் போட்டிகளில் தோனி விளையாடுவார்:

சென்னை சூப்பர் கிங்ஸ் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் அறிவிப்பு சென்னை, நவ. 6– ஐபிஎல் 2026 தொடரில் மகேந்திர சிங் தோனி விளையாடுவார் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் அறிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான தோனி சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றாலும் தொடர்ந்து ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக விளையாடி வருகிறார். சிஎஸ்கே அணியின் கேப்டனாக இருந்த தோனி, அந்த பொறுப்பை இளம் வீரர் ருதுராஜ் […]

Loading

செய்திகள்

மண்ணடியில் மெத்தம்பெட்டமைன் பேதைப்பொருள்:

2 பெண்கள் உள்பட 8 பேர் கைது சென்னை, நவ. 6– மண்ணடி பகுதியில் மெத்தம்பெட்டமைன் பேதைப்பொருள் வைத்திருந்த 2 பெண்கள் உட்பட 8 நபர்கள் கைது செய்யப்பட்டனர். சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண் உத்தரவின்பேரில் போதை பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில் எஸ்பிளனேடு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் ஒருங்கிணைந்து மண்ணடி, மெட்ரோ இரயில் நிலையம் அருகே கண்காணித்தபோது, அங்கு நின்று கொண்டிருந்த 2 பெண்கள் […]

Loading

செய்திகள்

விழுப்புரம் அருகே தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற சிறுத்தை: வாகனம் மோதி பலி

விழுப்புரம், நவ. 5– விழுப்புரம் அருகே சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற சிறுத்தை அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலியானது. விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகில் உள்ள மேம்பாலப் பகுதியில் (சென்னை – -திருச்சி தேசிய நெடுஞ்சாலை) நேற்று நள்ளிரவில் சிறுத்தை ஒன்று சாலையைக் கடக்க முயன்றுள்ளது. அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதிச் சென்றதில் சிறுத்தை சம்பவ இடத்திலேய உயிரிழந்தது. இதைத் தொடர்ந்து அந்த வழியாகச் […]

Loading