செய்திகள்

திருச்சி காவலர் குடியிருப்பில் ஒருவர் வெட்டிக் கொலை

திருச்சி, நவ. 10– திருச்சி பீமநகர் மார்சிங் பேட்டை காவலர் குடியிருப்பு பகுதியில் பட்டப்பகதில் இளைஞரை 5 பேர் கும்பல் ஓட ஓட வெட்டி படுகொலை செய்த பயங்கர சம்பவம் நடந்துள்ளது. திருச்சி பீம நகர், கீழத்தெருவை சேர்ந்தவர் தாமரைச்செல்வன் (26). இவருக்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு தான் திருமணம் நடைபெற்றது. இவர் தனியார் கம்பெனி ஒன்றில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் வழக்கம் போல இன்று காலை வேலைக்கு செல்வதற்காக திருச்சி பீமா நகர் […]

Loading

செய்திகள்

நடிகர் அபினய் காலமானார்

சென்னை, நவ. 10– ‘துள்ளுவதோ இளமை’ படத்தில் தனுஷ் உடன் நடித்த அபினய் (வயது 44) இன்று அதிகாலை சென்னையில் உயிரிழந்தார். செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த 2002-ம் ஆண்டு வெளியான துள்ளுவதோ இளமை திரைப்படத்தில் தனுஷின் நண்பராக நடித்திருந்தவர் அபிநய். இதையடுத்து சிங்கார சென்னை, ஜங்ஷன் போன்ற திரைப்படங்களில் அவர் ஹீரோவாகவும் நடித்திருந்தார். அந்தப் படங்கள் பெரியளவில் சோபிக்கவில்லை. பின்னர் என்றென்றும் புன்னகை, ஆறுமுகம், வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் போன்ற படங்களில் குணச்சித்திர வேடங்களில் […]

Loading

செய்திகள்

பெங்களூரில் சிறையில் குற்றவாளிகளுக்கு சொகுசு வாழ்க்கை

பெங்களூரு, நவ. 9– பெங்​களூரு மத்​திய சிறை​யில் அடைக்​கப்​பட்​டுள்ள கொலை, பலாத்​கார, தீவிர​வாத குற்​ற​வாளி​கள் டிவி பார்த்​த​வாறு செல்​போனில் பேசுவது போன்ற வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்​படுத்​தி​யுள்​ளன. சொத்​துக்​கு​விப்பு வழக்​கில் தண்​டிக்​கப்​பட்ட தமிழக முன்​னாள் முதல்​வர் ஜெயலலி​தா, அவரது தோழி சசிகலா ஆகியோ​ரும் பெங்​களூருவை அடுத்​துள்ள பரப்பன அக்​ரஹா​ரா​ சிறையில் அடைக்​கப்​பட்​டிருந்​தனர். அப்​போது சசிகலா சீருடை அணி​யாமல் ஷாப்​பிங் சென்று வரு​வது போன்ற வீடியோ​வும், டிவி, தனி சமையலறை ஆகிய​வற்​றுடன் சொகு​சாக இருப்​பது போன்ற புகைப்​படங்​களும் […]

Loading

செய்திகள்

இந்தியா தேடும் குற்றவாளிகள் 2 பேர் அமெரிக்காவில் கைது

வாஷிங்டன், நவ. 9– பல்வேறு குற்றங்களுக்காக இந்தியாவில் தேடி வரும் பயங்கர குற்றவாளிகள் 2 பேர் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டனர். இந்தியாவைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட தாதாக்கள் நாட்டிற்கு வெளியே இருந்தபடி குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை வேலைக்கு அமர்த்தி, தங்கள் மாபியா கும்பல்களை இயக்கி வருகின்றனர். இந்த கும்பல்களின் தலைவர்களை மடக்கிப் பிடிப்பதற்காக இந்திய புலனாய்வுத்துறை அதிகாரிகள் சர்வதேச அளவில் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் வெளிநாட்டில் பதுங்கியிருந்த இந்தியாவை சேர்ந்த வெங்கடேஷ் கார்க் மற்றும் […]

Loading

செய்திகள்

கேரளாவில் ஆவியை விரட்டுவதாக கூறி பெண்ணுக்கு சாராயம் கொடுத்து சித்ரவதை: மந்திரவாதி உட்பட 3 பேர் கைது

கோட்டயம், நவ. 9– ஆவியை விரட்டுவதாக கூறி பெண்ணுக்கு சாராயம் கொடுத்து சித்ரவதை செய்த மந்திரவாதி உட்பட 3 பேரை போலீசார் கைது செய்யப்பட்டனர். கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு கடந்த வாரம் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அந்தப் பெண்ணின் கணவன் வீட்டார் பெண்ணுக்கு பேய் பிடித்து விட்டது என்று கூறி ஆவியை விரட்டுவதற்காக மந்திரவாதி சிவதாஸ் (54) என்பவரை அழைத்து வந்தனர். காலையில் வந்த மந்திரவாதி சிவதாஸ் பூஜையில் இறங்கியுள்ளார். மேலும் […]

Loading

செய்திகள்

11-ந் தேதி பிரதமர் மோடி பூடான் சுற்றுப்பயணம்

புதுடில்லி, நவ.9- பிரதமர் மோடி வரும் நவம்பர் 11 மற்றும் 12ம் தேதிகளில் பூடான் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் வகையில் பிரதமர் மோடி நவம்பர் 11ம் மற்றும் 12ம் தேதிகளில் பூடானுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்வார் என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்தது. அப்போது, இந்தியாவின் உதவியுடன் கட்டப்பட்ட 1,020 மெ.வா. நீர்மின் நிலையத்தை அந்நாட்டு மன்னருடன் சேர்ந்து பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். பின்னர் பூடான் மன்னர் ஜிக்மே கேசர் […]

Loading

செய்திகள்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டம் டிசம்பர் 1-ந் தேதி கூடுகிறது

புதுடெல்லி, நவ.9- நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் டிசம்பர் 1-ம் தேதி தொடங்கி 19-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் பல்வேறு மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு மும்முரமாகி வருகிறது. இந்திய நாடாளுமன்றம் ஆண்டுக்கு 3 முறை கூட்டப்படுகிறது. ஆண்டின் தொடக்கத்தில் பட்ஜெட் கூட்டத் தொடரும், இடையில் மழைக்கால கூட்டத்தொடரும், இறுதியில் குளிர்கால கூட்டத்தொடரும் நடைபெறும். பொதுவாக கூட்டத்தொடர் குறைந்தது 25 நாட்களுக்கு மேல் நடைபெறுவது வழக்கம். கடந்த குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 25-ந்தேதி முதல் […]

Loading

செய்திகள்

தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, சேலம் மாவட்டங்களில் 6 ஆயிரம் டன் கேழ்வரகு கொள்முதல் செய்ய அனுமதி

சென்னை, நவ.9- 6 ஆயிரம் டன் கேழ்வரகு கொள்முதல் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் சக்கரபாணி கூறினார். உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- பரவலாக்கப்பட்ட கொள்முதல் திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் கேழ்வரகு கொள்முதல் திட்டம், கடந்த 2022–2023 கொள்முதல் பருவத்தில் முதற்கட்டமாக தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் ஈரோடு மற்றும் சேலம் மாவட்டங்களையும் சேர்த்து 4 மாவட்டங்களில் கடந்த 3 ஆண்டுகளில் 6 ஆயிரத்து 453 […]

Loading

செய்திகள்

மாலியில் இந்தியர்கள் 5 பேர் துப்பாக்கி முனையில் கடத்தல்

பமாகோ, நவ. 8– மாலி நாட்டில் தங்கி வேலை செய்து வந்த இந்தியர்கள் 5 பேர் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு ஆப்ரிக்க நாடான மாலியில் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. வறுமையில் சிக்கித் தவிக்கும் இந்த நாட்டில் அல் கொய்தா மற்றும் முஸ்லிம் அமைப்புகளுடன் இணைக்கப்பட்ட ஜிஹாதி குழுக்கள் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றன. 2012ம் ஆண்டு முதல் ஏற்பட்டு வரும் மோதல் மற்றும் வன்முறை காரணமாக இங்கு வெளிநாட்டவர்களை […]

Loading

செய்திகள்

போலி ஆவணங்கள் மூலம் வங்கியில் ரூ. 7 கோடி மோசடி: 2 பெண்கள் கைது

சென்னை, நவ. 8– போலி ஆவணங்கள் தயார் செய்து வங்கியில் ரூ.7 கோடி வரை கடன் பெற்று மோசடி செய்த வழக்கில் 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர். சென்னை, எழும்பூர் எஸ்பிஐ ஆர்ஏசிபிசி வங்கியின் கிளை மேலாளர் சேதுமாதவன், வினிதா ராஜ்புட் ஆகியோர் சென்னை பெருநகர காவல் ஆணையாளரிடம் கொடுத்த புகார் மனுவில், தங்களது வங்கியில் போலி ஆவணங்கள் சமர்பித்து காம்போ வீட்டு கடனாக ரூ. 7 கோடி வரை கடன் பெற்று வங்கிக்கு திரும்ப செலுத்தாமல் […]

Loading