செய்திகள்

எடப்பாடி பழனிசாமியுடன் ஜி.கே.வாசன் திடீர் சந்திப்பு

சென்னை, நவ. 17– அரசியல் பரபரப்புக்கிடையே எடப்பாடி பழனிசாமியை ஜி.கே.வாசன் இன்று திடீரென சந்தித்து பேசியது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. தமிழகத்தில் வரும் 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. சட்டசபை தேர்தலை சந்திக்க பிரதான கட்சிகளான திமுக, அதி.முக, ஆகிய கட்சிகளுடன் நடிகர் விஜய்யின் தவெக மற்றும் நாம் தமிழர் கட்சியும் களம் இறங்க தயாராகி வருகின்றன. தற்போது ஆளும் திமுக கூட்டணியில் காங்கிரஸ், […]

Loading

செய்திகள்

20–ந்தேதி மீண்டும் முதல்வராக பதவி ஏற்கிறார் நிதிஷ்குமார்

பாட்னா, நவ. 17– பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தனது ராஜினாமா கடிதத்தை இன்று கவர்னர் ஆரிப் முகமது கானிடம் வழங்கினார். 20–ந்தேதி மீண்டும் முதலமைச்சராக நிதிஷ்குமார் பதவி ஏற்கிறார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பதவி ஏற்பு விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் மற்றும் பா.ஜ.க. ஆளும் மாநில முதலமைச்சர்கள் பங்கேற்கிறார்கள். நிதிஷ்குமார் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் நடந்தது. அதில் 17-வது சட்டசபையை கலைப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து முதலமைச்சர் பதவியை […]

Loading

செய்திகள்

சவூதி அரேபியாவில் பஸ் விபத்து: 42 இந்தியர்கள் பலி

மெக்கா, நவ. 17– டீசல் டேங்கர் லாரி மீது பஸ் மோதிய விபத்தில் இந்தியாவைச் சேர்ந்த 42 பேர் பலியாகி உள்ளனர்.நெஞ்சை உலுக்கும் இந்த விபத்து சவூதி அரேபியாவில் நடந்துள்ளது. இந்தியாவில் இருந்து சவூதி அரேபியாவுக்கு உம்ரா புனிதப் பயணம் மேற்கொண்ட பக்தர்கள் மெக்காவில் இருந்து மதீனாவுக்குச் சென்றுகொண்டிருந்தனர். இந்நிலையில் மதீனாவுக்கு 160 கி.மீ. தொலைவில் உள்ள முப்ரிஹாத் என்ற இடத்தில் நள்ளிரவு 1.30 (இந்திய நேரப்படி) மணியளவில் டீசல் டேங்கர் லாரியின் மீது பேருந்து மோதி […]

Loading

செய்திகள்

ஆர்.எம்.டி. பொறியியல் கல்லூரி 34ம் ஆண்டு முன்னாள் மாணவர் சந்திப்பு

சென்னை, நவ. 17: ஆர்.எம். டி. பொறியியல் கல்லூரியின் 34வது முன்னாள் மாணவர் சந்திப்பு சென்னையில் உள்ள கே.எம் ஸ்பெக்ட்ராவில் சிறப்பாக நடத்தப்பட்டது. முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் பி. பிரவீனா வரவேற்புரை நிகழ்த்தினார். கணினி பொறியியல் துறை பேராசிரியர் மற்றும் முன்னாள் மாணவர் சங்க செயலாளர் ஆர். சசிகுமாரின் வருடாந்திர அறிக்கை வாசித்தார். பல்வேறு துறைகளின் தலைவர்கள் தங்கள் துறைகளில் நடந்து வரும் முன்னேற்றங்கள் குறித்த முக்கிய நுண்ணறிவுகளைப் பகிர்ந்து கொண்டனர். நிறுவனர் தலைவர் ஆர். […]

Loading

செய்திகள்

விழுப்புரம் மாவட்டத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை: கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் ஆய்வு

விழுப்புரம், நவ. 17–- வடகிழக்கு பருவ மழையையொட்டி வானூர் தாலுகா பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளது. இதையொட்டி வானூர் அடுத்த திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் உள்ள பி.டி.ஓ., அலுவலகத்தில் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பருவமழை அதிகரிக்கும் போது திடீரென சாலைகளில் உள்ள மரம் முறிந்து போக்குவரத்து தடை ஏற்பட்டால் அதனை உடனடியாக அகற்ற வேண்டும், மழைக்காலத்தில் பொதுமக்களை பத்திரமாக பாதுகாக்க […]

Loading

செய்திகள்

30 குழந்தைகளை விமானத்தில் அழைத்துச் சென்று குஷிப்படுத்திய ‘ரெயின் டிராப்ஸ்’ அறக்கட்டளை அமைச்சர் கீதா ஜீவன், விஜிபி சந்தோஷம் உடன் பயணித்தனர்.

சென்னை, நவ.17– குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, ரெயின் டிராப்ஸ் அறக்கட்டளை அதன் வருடாந்திர சிறப்பு திட்டமான “வானமே எல்லை” எனும் அருமையான ஊக்கமளிக்கும் முயற்சியை வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் பொருளாதார ரீதியாக பின்தங்கிய 30 குழந்தைகள் தங்களது வாழ்நாளில் முதன் முறையாக சென்னை நகரிலிருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் பயணம் மேற்கொண்டுள்ளனர். அனைவரையும் உள்ளடக்கிய சமூகத்தை உருவாக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட இந்த வருடாந்திர முன்முயற்சியில், ஒரு திருநங்கை மாணவர் மற்றும் பார்வை குறைபாடுள்ள ஒரு மாணவர் […]

Loading

செய்திகள்

காஞ்சிபுரம் கூட்டுறவு வாரவிழாவில் 1111 மகளிருக்கு நல உதவிகள்: அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்

காஞ்சிபுரம் நவ. 17– காஞ்சிபுரம் செவிலிமேடு தனியார் திருமண மண்டபத்தில் கூட்டுறவு துறை சார்பில் சர்வதேச கூட்டுறவு ஆண்டை முன்னிட்டு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நடப்பு ஆண்டில் “தன்னிறைவு பெற உதவும் கருவிகளாகக் கூட்டுறவுச் சங்கங்கள்” என்ற தலைப்பில் 7 நாள் விழா நடைபெறுகிறது. இவ்விழாவில் 1111 உறுப்பினர்களுக்கு ரூ10.96 கோடி மதிப்பீட்டில் மகளிர் சுய உதவிக்குழுக் கடன், 37 பயனாளிகளுக்கு ரூ.26 லட்சம் மதிப்பீட்டில் கால்நடை […]

Loading

செய்திகள்

ஸ்ரீ சாய்ராம் வணிக மேலாண் கல்லூரி ஏற்பாட்டில் உயர் கல்வியில் செயற்கை நுண்ணறிவு கருத்தரங்கு

சென்னை, நவ. 17– நாட்டில் உயர் கல்வியை மேம்படுத்துவதில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகிக்கிறது என மேலாண் தொழில்நுட்பக் கல்வி ஆலோசகர் பி.அன்புத் தம்பி கூறினார். மேற்கு தாம்பரம் ஸ்ரீசாய்ராம் வணிக மேலாண் கல்லூரி சார்பில் நடைபெற்ற தேசியக் கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற அவர் பேசுகையில், ‘சர்வதேச அளவில் கணினி விளையாட்டில் 70 ஆண்டுகளுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், தற்போது அனைத்துத் துறைகளின் வளர்ச்சி முன்னேற்றத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது […]

Loading

செய்திகள்

வங்கதேசத்தை விட்டு வெளியேறியது வேதனை: ஷேக் ஹசீனா உருக்கம்

புதுடில்லி: மனித குலத்திற்கு எதிராக குற்றம் புரிந்ததாக வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிரான வழக்கில், இன்று (நவ.,17) தீர்ப்பு வெளியாக உள்ளது. இந்த சூழலில், வங்கதேசத்தை விட்டு வெளியேறியது வேதனை அளிக்கிறது என ஷேக் ஹசீனா உருக்கமாக தெரிவித்துள்ளார்.கடந்தாண்டு வங்கதேசத்தில் ஏற்பட்ட மாணவர் போராட்டத்தில் பெரும் வன்முறை வெடித்தது. இதில், ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த வன்முறையை தொடர்ந்து பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்ந்தது. மேலும், அவர் வங்கதேசத்தை விட்டு வெளியேறி, இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். […]

Loading

செய்திகள்

திருச்செங்கோடு அருகே கோவில் வளாகத்தில் கிடந்த வாக்காளர் பட்டியல் கணக்கெடுப்பு படிவங்கள்

நாமக்கல், நவ. 16– திருச்செங்கோடு அருகே கோவில் வளாகத்தில் வாக்காளர் பட்டியல் கணக்கெடுப்பு படிவங்கள் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிகள் நடந்து வருகிறது. இதற்காக நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் வீடு, வீடாக சென்று வாக்காளர் பட்டியல் படிவங்களை வினியோகம் செய்து அதை பூர்த்தி செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே ஒரு கோவிலில் வாக்காளர்களுக்கு வழங்க […]

Loading