செய்திகள்

கடலூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர மிதிவண்டிகள்: கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் வழங்கினார்

கடலூர், நவ.24– கடலூரில் நடைபெற்ற குறைதீர்வு முகாமில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 3 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு தலா ரூ.11,500 வீதம் மொத்தம் ரூ.34,500 மதிப்பீட்டிலான மூன்று சக்கர மிதிவிண்டிகளை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் வழங்கினார். கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவிக்கையில், தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி, பொதுமக்களின் குறைகளை களைவதற்காகவும், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை […]

Loading

செய்திகள்

தமிழக வளர்ச்சியே இந்தியாவின் முன்னேற்றம்: – முதல்வர் ஸ்டாலின்

சென்னை: 22 தமிழகத்தின் முன்னேற்றமே இந்தியாவின் வளர்ச்சியாகும் எனவும், கோவை மற்றும் மதுரைக்கான மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு மத்திய அரசு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் எனவும் முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கும் ஒவ்வொரு சந்திப்பிலும், இந்த இரண்டு நகரங்களுக்கான மெட்ரோ திட்டங்களை பலமுறை கோரியிருந்தும், அவை மறுக்கப்பட்டுள்ளதால் தமிழக மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர் என்று அவர் தெரிவித்தார். மாநிலத்தின் வளர்ச்சிக்குத் தீர்மானமாக அமைவான இந்த உள்கட்டமைப்பு திட்டங்கள் தாமதமடைவது வருந்தத்தக்கது என்றும் […]

Loading

செய்திகள்

மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு தெற்கு பகுதி துணை இயக்குநர் ஜெனரலாக ஐ.ஜி. சுதாகர் பதவியேற்றார்

சென்னை, நவ. 19– மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு தெற்கு பகுதி துணை இயக்குநர் ஜெனரலாக ஐ.ஜி. சுதாகர் பதவியேற்றார். 2003-ம் ஆண்டு ஐபிஎஸ் முடித்த ஆர்.சுதாகர், ராணிப்பேட்டை மற்றும் விருதுநகரில் உதவி காவல் கண்காணிப்பாளராக (ASP) தனது பணியைத் தொடங்கி, பின்னர் காவல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்றார். சென்னை அடையாறு மற்றும் புளியந்தோப்பில் துணை ஆணையராகப் பணியாற்றுவதற்கு முன்பு தர்மபுரி, புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் பணியாற்றினார். 2007-ம் ஆண்டு, துணை காவல் […]

Loading

கதைகள் சிறுகதை

சிறுகதை .. கான்ஸ்டபிள் சாலை..! … ராஜா செல்லமுத்து

சிறுகதை .. கான்ஸ்டபிள் சாலை..! … ராஜா செல்லமுத்து … விரைந்து செல்லும் வாகனங்களைக் கட்டுப்படுத்திக் கொண்டு நின்று கொண்டிருந்தார் ஒரு போக்குவரத்துக் காவலர் அவரிடம் வந்த தென்னவன் தயங்கியபடியே, “சார் ‘கான்ஸ்டபிள் சாலை’ எங்க இருக்கு?” என்று கேட்டான். அவனை மேலும் கீழும் பார்த்த அந்தப் போக்குவரத்து காவலர் “எங்க இருந்து வாரீங்க?” என்று கேட்டார். ” வெளியூர்ல இருந்து சார். ஐசிஎப்–ல எங்க சொந்தக்காரங்க வேலை செஞ்சிட்டு இருக்காங்க. அவங்க கான்ஸ்டபிள் சாலையில் குடியிருக்கிறதா […]

Loading

செய்திகள்

நடிகை ஸ்ரேயா சரண் பெயரை பயன்படுத்தி WhatsApp மோசடி – ரசிகர்களுக்கு கடும் எச்சரிக்கை

சென்னை, நவம்பர் 19:நடிகை ஸ்ரேயா சரண் தனது பெயரை பயன்படுத்தி WhatsApp-ல் ஆள்மாறாட்டம் செய்து பிறரை தொடர்புகொள்வதாக ஒருவர் மோசடி செய்து வருவதை குறித்து ரசிகர்களையும் நண்பர்களையும் எச்சரித்துள்ளார். சமூக வலைதளங்களில் அந்த WhatsApp கணக்கின் ஸ்கிரீன்ஷாட்டை வெளியிட்டுள்ள ஸ்ரேயா, “இந்த முட்டாள் யாராக இருந்தாலும் மக்களை தொடர்புகொள்வதும் அவர்களின் நேரத்தை வீணடிப்பதும் உடனே நிறுத்த வேண்டும். இது நான் அல்ல; இது என் எண் அல்ல,” என்று கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், “இந்த போலி […]

Loading

செய்திகள்

ரவுடிகளின் அட்டகாசத்தை ஒடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

சென்னை, நவ.19- ரவுடிகளின் அட்டகாசத்தை ஒடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார். இது குறித்து அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:- சென்னை பாரிமுனை பகுதியில், கலெக்டர் அலுவலகம், கோர்ட் அருகே இரு ரவுடிக்கும்பல் கத்திகளுடன் விரட்டிச் சென்று மோதிக் கொண்டதால் பொதுமக்கள் அலறியடித்து ஓடியதாகவும், சென்டிரல் அருகே பல்லவன் சாலையில் இருவர் கத்தியுடன் மோதிக் கொண்டதாகவும் வரும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கிறது. தி.மு.க ஆட்சியில் […]

Loading

கதைகள் சிறுகதை

சிறுகதை – அறியப்படாத சமைலறை குசும்புக் – ஆர். வசந்தா

அறியப்படாத சமைலறை குசும்புகள் –––––––––––––––––––– ஆர். வசந்தா ––––––––––––––––––––– இது ஒரு அரிய குசும்பாகும். அதைப் பற்றி தெரிந்து கொள்வோம். அருப்புக்கோட்டை என்ற ஊரில் ஒரு பிரபலமான சுண்டல் வகை ஒன்று உள்ளது. அந்த சுண்டலை அனைவரும் ரசித்து உண்பார்கள். திருவிழாக் காலங்களில் ஒரு பெரிய அண்டா நிறைய குறிப்பிட்ட சுண்டலைக் கொண்டு வந்து விற்பார்கள். சிறிது நேரத்திலேயே விற்றுத் தீர்ந்துவிடும். அந்த சுண்டலை விற்பவர் பெயர் கருப்பண்ணன். பாசிப்பயறு, கொண்டைக் கடலை சுண்டல் கொண்டு வருவார். […]

Loading

செய்திகள்

ஜாக்டோ-ஜியோ தமிழகம் முழுவதும் இன்று வேலை நிறுத்தம்

சென்னை, நவ. 18– 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் இன்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை எழிலகத்தில் அரசு ஊழியர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜாக்டோ ஜியோ என்பது தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் சமூக, பொருளாதார உரிமைகளை பாதுகாப்பதற்காக உருவான ஒருங்கிணைந்த இயக்க அமைப்பாகும். இந்த அமைப்பானது ஊழியர்களின் வேலைநிலை, ஓய்வூதியம், சம்பளம் மற்றும் அரசு நலக் கோரிக்கைகள் தொடர்பாக ஒருங்கிணைந்து போராட்டங்கள் நடத்துகிறது. அந்த வகையில் […]

Loading

செய்திகள்

அரசியலை விட்டு வெளியேற மாட்டேன் பிரசாந்த் கிஷோர் பேட்டி

பாட்னா, நவ. 18– பீகார் சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு 100 சதவீதம் நானே பொறுப்பேற்கிறேன் என்று ஜன்சுராஜ் கட்சியின் நிறுவனர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். பீகார் சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 202 தொகுதிகளில் வெற்றி பெற்று பெரும் பலத்துடன் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. இந்தியா கூட்டணியில் போட்டியிட்ட ராஷ்டீரிய ஜனதா தளம் 25 தொகுதிகளிலும், காங்கிரஸ் 6 தொகுதிகளிலும் மட்டுமே வெற்றி பெற்றது. 238 தொகுதிகளில் போட்டியிட்ட ஜன்சுராஜ் கட்சி ஒரு இடத்தில்கூட வெற்றி […]

Loading

செய்திகள்

சபரிமலையில் பக்தர்களுக்கு 24 மணி நேர தகவல் மையங்கள் அமைச்சர் சேகர்பாபு

சென்னை, நவ. 18– சபரிமலை ஸ்ரீதர்ம சாஸ்தா (ஐயப்பன்) கோயிலில் மண்டல பூஜை நேற்று (17–ந் தேதி) முதல் 27–ந் தேதி வரையும், மகரவிளக்கு ஜோதி திருவிழா டிசம்பர் 30ந் தேதி முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 19ந் தேதி வரை நடைபெறுகிறது. இதை முன்னிட்டு சபரிமலை பயணம் மேற்கொள்ளும் தமிழ்நாடு ஐயப்ப பக்தர்களுக்கு உதவுவதற்காக இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்திலும், மாநில எல்லையான களியக்காவிளையிலும், கேரள மாநிலம்-சபரிமலையிலும் 24 மணி நேரமும் இயங்கும் தகவல் […]

Loading