செய்திகள்

டிட்வா சுற்றுச்சுழல் தாழ்வு மண்டலம் 6 மணி நேரமாக நகரவில்லை

சென்னையில் மழை தொடரும் எச்சரிக்கை சென்னை, டிசம்பர் 2: டிட்வா புயல் பலவீனமடைந்திருந்தாலும், அதனுடன் தொடர்பான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த நள்ளிரவிலிருந்து சென்னைக்கு கிழக்கே சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் சுமார் 6 மணி நேரத்துக்கும் மேலாக நிலைவாய்ந்த நிலையில் உள்ளது. இந்த மண்டலத்தின் மந்தமான நகர்வு காரணமாக, சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் அடுத்த 24 மணி நேரமும் மழை தீவிரமாக தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மண்டலத்தின் நிலைமாற்றமின்றி […]

Loading

செய்திகள் முழு தகவல்

கொழும்பு விமான நிலையத்தில் 300 இந்தியர்கள் தவிப்பு

புதுடெல்லி, நவ. 29: வெள்ளம் மற்றும் புயலால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு, மனிதாபிமான அடிப்படையில் உணவு, மருந்து உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை இந்தியா அனுப்பி வைத்துள்ளது. மேலும் 80 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புப் பணியாளர்கள் அங்கு விரைந்துள்ளனர். வங்கக் கடலில் உருவாகியுள்ள டிட்வா புயலால் இலங்கையில் இடியுடன் கூடிய கனமழையும், பலத்த காற்றும் வீசி வருகிறது. கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

ஆட்டோபென் பயன்படுத்தி பைடன் கையெழுத்திட்ட உத்தரவுகள் ரத்து: அதிபர் டிரம்ப் அறிவிப்பு

வாஷங்டன், நவ. 29: ஆட்டோபென் பயன்படுத்தி கையெழுத்திட்ட பைடனின் உத்தரவுகளை ரத்து செய்வதாக, அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்கா அதிபராக ஜோ பைடன் இருந்த போது, ஆட்டோபென்-ஐ பயன்படுத்தி தனது கையெழுத்தை பல ஆவணங்களில் பதிவு செய்துள்ளார். ஆட்டோபென் என்பது ஒரு இயந்திர சாதனம். இது ஒருவரின் கையெழுத்தை நகலெடுத்து பல ஆவணங்களில் விரைவாக கையெழுத்திட பயன்படுகிறது. இந்த முறையை தற்போது அதிபராக உள்ள டிரம்ப் முடிவுக்கு கொண்டு வந்துள்ளார். இது குறித்து அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

‘‘100 பிறவி எடுத்தாலும், நடிகனாகவே பிறக்க ஆசைப்படுகிறேன்’’: கோவா திரைப்பட விழாவில் ரஜினிகாந்த் பேச்சு

சென்னை, நவ.29: “100 பிறவிகள் எடுத்தாலும், நான் ரஜினிகாந்தாகவே பிறக்க விரும்புகிறேன்” என்று கோவா சர்வதேச திரைப்பட விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற நடிகர் ரஜினிகாந்த் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். கோவாவில் 56-வது சர்வதேச திரைப்பட விழா கடந்த 20-ந்தேதி தொடங்கியது. இதனை மத்திய இணை மந்திரி எல்.முருகன் தொடங்கி வைத்தார். இதில் சினிமாவில் பல்வேறு சாதனைகள் செய்த கலைஞர்கள் கவுரவிக்கப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் திரைத்துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்ததற்காக நடிகர் ரஜினிகாந்துக்கு 56-வது […]

Loading

செய்திகள்

மூளைச் சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்: 8 பேருக்கு மறுவாழ்வு

சென்னை, நவ. 29: மூளைச் சாவு ஏற்பட்ட ஒரு பெண்ணின் குடும்பத்தினர் உறுப்புத் தானத்திற்கு முன்வந்ததின் மூலம் 8 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது என்று வடபழனியில் உள்ள ‘சிம்ஸ்’ மருத்துவமனையின் துணைத்தலைவர் மற்றும் மூத்த மருத்துவரான டாக்டர் ராஜு சிவசாமி கூறினார். சென்னை வடபழனியில் உள்ள ‘சிம்ஸ்’ மருத்துவமனையில், மதுரவாயிலைச் சேர்ந்த 51 வயது பெண்ணை நவம்பர் மாதம் 25-ம் தேதி மிகவும் கவலைக்கிடமான நிலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அனைத்து துறைகளின் மூத்த மருத்துவ […]

Loading

செய்திகள்

ஆந்திராவில் 2 கார்கள் மோதி 2 குழந்தைகள் உள்பட 5 பேர் பலி

அமராவதி:  நவ. 29– ஆந்திராவில் இரண்டு கார்கள் மோதி ஏற்பட்ட விபத்தில், 2 குழந்தைகள் உள்பட 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திராவின் கர்னூல் மாவட்டத்தில் உள்ள கோடேகல் கிராமத்தில், இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், உள்ளூர் மக்கள் உதவியுடன் நீண்ட நேரம் போராடி மீட்பு பணி மேற்கொண்டனர். இந்த விபத்தில், 2 குழந்தைகள் உள்பட 5 பேர் சம்பவ […]

Loading

செய்திகள்

கோவை வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் 13 வீடுகளில் 56 பவுன் நகை, ரூ. 3 லட்சம் கொள்ளை

3 வடமாநில கொள்ளையர்களை சுட்டுப்பிடித்த போலீசார் கோவை, நவ. 29– கோவை- மேட்டுப்பாளையம் சாலை கவுண்டம்பாளையத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் கட்டப்பட்டுள்ள ஹவுசிங் யூனிட்டில் 1,800 குடும்பங்கள் குடியிருந்து வருகின்றனர். இங்கு குடியிருப்பவர்கள் பெரும்பாலும் அரசு ஊழியர்களாக உள்ளனர். 14 மாடிகளை கொண்ட இந்த குடியிருப்பில் நேற்று மர்ம நபர்கள் நுழைந்தனர். இவர்கள் இங்குள்ள குடியிருப்பில் பூட்டியிருந்த வீடுகளை குறிவைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டனர். முதலில் ஒரு வீட்டில் குடியிருப்பவர்கள் தங்களது வீட்டில் இருந்த நகை, […]

Loading

செய்திகள்

4 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மேலும் 5 நாட்கள் தாம்பரம் வரையே இயக்கப்படும்: தெற்கு ரெயில்வே அறிவிப்பு

சென்னை, நவ. 29– எழும்பூர் ரெயில் நிலையத்தில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருவதால் 4 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மேலும் 5 நாட்கள்தாம்பரம் வரையே இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருவதால், சில ரெயில்களின் சேவை தாம்பரத்தில் இருந்தே இயக்கப்பட்டு வருகிறது. தற்போது, பணிகள் முடிவடையாததால் மேலும் 5 நாட்கள் தாம்பரத்தில் இருந்தே இந்த ரெயில்கள் இயக்கப்படும். தாம்பரம் […]

Loading

செய்திகள்

தமிழகத்தை நெருங்கும் ‘டிட்வா’ புயல்.. நாளை கரையை கடக்கும்.

சென்னை, நவம்பர் 29:தமிழகத்தின் தென் மாவட்டங்களை வேகமாக நெருங்கி வரும் ‘டிட்வா’ புயல் நாளை அதிகாலை அல்லது மதியம் கரையைக் கடக்கும் வாய்ப்பு அதிகமுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) இன்று வெளியிட்ட முக்கிய அறிவிப்பில் தெரிவித்துள்ளது. புயலின் தீவிரம் காரணமாக தென் தமிழகம் முழுவதிலும் கனமழை தாழ்நிலப் பகுதிகளில் நீர்மட்ட உயர்வு கடலோர பகுதிகளில் அலைச்சலின் அதிகரிப்பு போன்ற தீவிர வானிலை மாற்றங்கள் பதிவாகின்றன. தற்போது ‘டிட்வா’ குமரி கடல்பகுதியை கடந்தபடி கன்னியாகுமரி, தூத்துக்குடி, […]

Loading

செய்திகள்

தமாகா 12ஆம் ஆண்டு விழா சட்டமன்றத்தில் எங்கள் குரல் ஒலிக்கும் ஜி.கே. வாசன்  பேட்டி

சென்னை, நவ. 28– சட்டமன்றத்தில் தமாகா குரல் நிச்சயம் ஒலிக்கும் என்று ஜி.கே. வாசன் கூறினார். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் 12ம் ஆண்டு விழாவையொட்டி ஆழ்வார்பேட்டை தலைமை அலுவலகத்தில் தலைவர் ஜி.கே.வாசன் எம்பி கொடியேற்றியனார். இந்த பொதுச் செயலாளர்கள் ஜி.ஆர். வெங்கடேஷ், ராஜம் எம்பி நாதன், ராணி கிருஷ்ணன்,துணைத் தலைவர்கள் விடியல் சேகர் சக்தி வடிவேல், முனவர் பாஷா, மாவட்டத் தலைவர்கள் பிஜு சாக்கோ, அருண்குமார், லூயிஸ் மற்றும் நிர்வாகிகள் கே ஆர் டி ரமேஷ், […]

Loading