செய்திகள்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு: வெள்ளி கிலோவுக்கு ரூ.8 ஆயிரம் அதிகரிப்பு

சென்னை, டிச. 10: சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு 240 ரூபாய் அதிகரித்து, ஒரு சவரன் 96 ஆயிரத்து 240 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இன்று ஒரே நாளில் கிலோவுக்கு ரூ. 8 ஆயிரம் உயர்ந்து ஒரு கிலோ வெள்ளி 2 லட்சத்து 7 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்​வ​தேச பொருளா​தார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்​திய ரூபா​யின் மதிப்பு ஆகிய​வற்​றின் அடிப்படை​யில், தங்​கத்​தின் விலை நிர்​ண​யிக்​கப்​படுகி​றது.இந்த வாரத்தின் தொடக்க […]

Loading

செய்திகள்

பொதுமக்களிடம் புகார் மனு பெற்றார் கமிஷனர் அருண்

சென்னை, டிச. 10– சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் நடைபெற்று வரும் பொதுமக்கள் குறை தீர் முகாமில், காவல் அதிகாரிகள் பொதுமக்களின் புகார் மனுக்களை பெற்று விரைந்து விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு, உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண் காவல் ஆணையரகத்தில் புகார் மனு கொடுக்க வந்த பொதுமக்களிடம் இருந்துபுகார் மனுக்களை பெற்று, விரைந்து விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட […]

Loading

கதைகள் பாண்டிய கட்டபொம்மன்

‘பாஞ்சை சிங்கம் ஜாக்சனை பந்தாடிய இடம்’

கட்டபொம்மன் –3 ‘கவுல்’ கொடுத்ததால் தான் ராமநாதபுரத்துக்கு வந்தததாக கட்டபொம்மன் தெரிவிக்கிறார். அங்கு ஆங்கிலேயருக்கும் கட்டபொம்மனுக்கும் இடையே சண்டை நடக்கிறது. படைவீரர்களுடன் வரக்கூடாது என ஆங்கிலேயர்கள் கவுலில் சொல்லி உள்ளார்கள். ஆனால் காலாட்படை, குதிரைப்படை என 4 ஆயிரம் படை வீரர்களுடன் கட்டபொம்மன் சென்றிருக்கிறார். அங்கு தான், சினிமாவில் வருவது போல், எங்களிடம் வரி கேட்க உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது, இது எங்கள் மண். நீ வியாபாரத்துக்கு வந்தவன், நீ ஏன் எங்களை ஆள நினைக்கிறாய் […]

Loading

செய்திகள்

ஈரோட்டில் விஜய் பிரச்சாரத்துக்கு 84 கட்டுப்பாடுகள்: செங்கோட்டையன் குற்றச்சாட்டு

ஈரோடு, டிச.10: ஈரோட்டில் விஜய் பிரசாரத்துக்கு 84 நிபந்தனைகள் விதிக்கப்பட்டு உள்ளதால், த.வெ.க. பொதுக்கூட்டத்தை 2 நாட்கள் ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாகவும், இதுவரை இல்லாத கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் செங்கோட்டையன் கூறினார். ஈரோட்டில் த.வெ.க. சார்பில் விஜய் பிரச்சார கூட்டம் வருகிற 16-ந் தேதி நடைபெற இருந்தது. இந்த நிலையில் பிரச்சார கூட்டம் 18-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் ஈரோடு அருகே விஜயமங்கலம் சரளை பகுதியில் நடைபெற உள்ளது. இதற்காக 19 ஏக்கர் பரப்பளவில் இடம் […]

Loading

செய்திகள்

சென்னையில் காவலர் குறைத்தீர்க்கும் முகாம்

சென்னை, டிச. 10: சென்னை பெருநகர காவல்துறையினரின் பணி சிறக்க அவர்தம் குறைகளை போக்கி, காவலர் குடும்ப நலனுக்கு அதிகாரிகள் உதவிடும் வகையில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண் உத்தரவின்பேரில் காவலர் குறைதீர் சிறப்பு முகாம் நடைபெற்றது. வேப்பேரி, காவல் ஆணையாளர் அலுவலக கலந்தாய்வு கூடத்தில் நடைபெற்ற ‘‘காவலர்கள் குறை தீர்க்கும் சிறப்பு முகாமில்‘‘ சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண் உத்தரவின்பேரில், கூடுதல் காவல் ஆணையாளர் (தலைமையிடம்) விஜயேந்திர பிதாரி, சென்னை பெருநகர காவல், […]

Loading

செய்திகள்

அண்ணா தி.மு.க. தற்காலிக அவைத் தலைவர் கே.பி. முனுசாமி

சென்னை, டிச.10: அண்ணா தி.மு.க. தற்காலிக அவைத் தலைவராக கே.பி.முனுசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி திருமண மண்டபத்தில் நடைபெறும் அண்ணா தி.மு.க. பொதுக்குழுக் கூட்டத்தில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 2,500-க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என 4 ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளனர். கூட்டத்திற்கு கட்சியின் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமை தாங்க வேண்டும். ஆனால், செயற்குழு கூட்டம் தொடங்கியதும் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு […]

Loading

செய்திகள்

9வது நாளாக இன்றும் விமானங்கள் ரத்து இண்டிகோ விமான சேவை 10 சதவீதம் குறைப்பு மத்திய அரசு நடவடிக்கை

சென்னை, டிச. 10– நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவை 9வது நாளாக இன்றும் பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இன்று 14 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தனியார் விமான நிறுவனமான இண்டிகோ விமான நிறுவனம் இந்தியாவின் விமான போக்குவரத்தில் அசைக்க முடியாத பெரும்சக்தியாக உருப்பெற்றது. அந்த நிறுவனத்திடம் 134 விமானங்கள் உள்ளன. இதன் மூலம் உள்நாட்டு சேவைகள் 1,840-ம், சர்வதேச சேவைகள் 460-ம் என அந்த நிறுவனம் இயக்கி வருகிறது. அதன்படி இந்தியாவின் மொத்த உள்நாட்டு விமான சேவையில் […]

Loading

செய்திகள்

பி.எஸ்.பி.பி. பள்ளியில் 3 நாள் இசை நாட்டிய விழா

சென்னை, டிச. 9: சென்னையில் பிரபலமான பத்மசேஷாத்ரி பால பவன் பள்ளி குழுமத்தின் நிறுவனர், திருமதி ஒய்ஜிபியின் நுாற்றாண்டு இசை நாட்டிய துவக்க விழா, கே.கே., நகரில் உள்ள பள்ளி வளாகத்தில் கோலாகலமாக ஆரம்பமானது. தொழில் அதிபர் நல்லி குப்புசாமி துவக்கி வைத்து உரையாற்றினார். ‘‘ஜனாதிபதியாக இருந்த அப்துல் கலாம்,திருமதி ஒய்ஜிபியின் 80வது பிறந்த நாள் விழாவிற்கு பள்ளிக்கு வந்தார். பின், அவரது வீட்டிற்கும் சென்றார். பள்ளியில் நடக்கும் நிகழ்ச்சிக்கு தான் அவர் அழைக்கப்பட்டிருந்தார். ஆனால், வீட்டிற்கு […]

Loading

செய்திகள்

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை 2-ம் கட்ட விரிவாக்கம் முதலமைச்சர் ஸ்டாலின் 12-ம் தேதி தொடங்கி வைக்கிறார்

சென்னை, டிச.10: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் 2-வது கட்டமாக வரும் 12-ந்தேதி முதல் கூடுதல் பயனாளிகளுக்கு உரிமை தொகை வழங்கப்பட உள்ளது. இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- தமிழ்நாடு அரசு பெண்களுக்காக செயல்படுத்தும் முன்னோடி திட்டங்களின் சாதனைகள், பயனடைந்த மகளிரின் வாழ்ந்த அனுபவங்கள் மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் முக்கிய பெண் சாதனையாளர்களை ஒன்றிணைத்து, பெண்களின் முன்னேற்றத்திற்காக மேற்கொண்டுள்ள அரசின் முன்னெடுப்புகளை […]

Loading

செய்திகள்

திருபுவனம் பா.ம.க. பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கு: 6 ஆண்டுகளாக தேடப்பட்ட 4 பேர் கைது

சென்னை, டிச. 10: இந்துக்களை முஸ்லிம் மதத்திற்கு மாற்ற முயன்றதை கண்டித்ததால், கொலை செய்யப்பட்ட பா.ம.க. பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கில் 6 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த 4 பேரை, தேசிய புலனாய்வு அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அடுத்த திருபுவனத்தை சேர்ந்தவர் ராமலிங்கம் (45). பா.ம.க., பிரமுகரான இவர் திருபுவனம் மற்றும் சுற்றுப்பகுதியில், ஹிந்துக்கள் முஸ்லிம்களாக மத மாற்றம் செய்யப்படுவதை கண்டித்தார். இந்நிலையில் ராமலிங்கம், கடந்த 2019 பிப்ரவரி மாதம் […]

Loading