செய்திகள்

நாட்டுக்கு பெருமை சேர்க்கும் விண்வெளித்துறை: இஸ்ரோ தலைவர் நாராயணன் பெருமிதம்

திருநெல்வேலி, டிச.11: இந்திய விண்வெளித்துறை நாட்டுக்கு பெருமை சேர்க்கும் என்று இஸ்ரோ தலைவர் நாராயணன் பெருமிதத்துடன் கூறினார். திருநெல்வேலியில் இஸ்ரோ தலைவர் நாராயணன் நிருபர்களிடம் கூறியதாவது:– ககன்யான் திட்டத்தின் முக்கிய நோக்கம், இந்திய ராக்கெட்டில் இந்திய விண்வெளி வீரர்களை விண்ணுக்கு அனுப்பி பத்திரமாக திரும்பக் கொண்டு வருவது தான். இதற்கான ராக்கெட் தயாரிப்பு இறுதிக் கட்டத்தில் உள்ளது. விண்வெளியில் ஆக்சிஜன், வெப்பநிலை, அழுத்தம் ஆகியவற்றை கட்டுப்படுத்தும் சுற்றுச்சூழல் கட்டுப்பாடு அமைப்பு (ECLSS) சிறப்பாக உருவாக்கப்பட்டு வருகிறது. அதேபோல், […]

Loading

செய்திகள்

1 மில்லியன் டாலர் ‘கோல்டு கார்டு’ விசா: அதிபர் டிரம்ப் அறிமுகப்படுத்தினார்

வாஷிங்டன், டிச. 11: 1 மில்லியன் டாலர் கோல்டு கார்டு விசாவை அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிமுகப்படுத்தினார். அமெரிக்காவுக்கு சென்று வேலை பார்ப்பதற்கென பல வகையான விசாக்கள் வழங்கப்படுகின்றன. இவற்றில் மிகவும் முக்கியமானது எச்1பி விசா. இதை அதிகம் பயன்படுத்தும் நாடுகளில் இந்தியா முன்னிலையில் உள்ளது. இவ்வாறு விசா பெற்று அங்கு சென்று வேலை பார்ப்போருக்கு, அமெரிக்காவில் நிரந்தரமாக வசிப்பதற்காக, ‘கிரீன் கார்டு’ என்ற அந்தஸ்து வழங்கப்படுகிறது. தற்போது அமெரிக்காவில் வசிக்கவும், வேலை பார்க்கவும், ‘கோல்டு கார்டு’ […]

Loading

செய்திகள்

15–ந்தேதி முதல் அண்ணா தி.மு.க. விருப்ப மனு வினியோகம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

சென்னை, டிச. 11: 2026ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் அண்ணா தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புவோர் வரும் 15–ந்தேதி முதல் 23ந் தேதி வரை விருப்ப மனு அளிக்கலாம் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. அதற்கு வாக்காளர் பட்டியல் அடிப்படை என்பதால், தீவிர சிறப்பு திருத்தப் பணி மும்முரமாக நடந்து வருகிறது. டிசம்பர் 16ல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாக உள்ளது. இச்சூழலில் அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு தயாராகி […]

Loading

செய்திகள்

4 இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர்களுக்கு பணிநியமன ஆணை: சி.வி. கணேசன் வழங்கினார்

சென்னை, டிச. 11: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட தொகுதி-–II போட்டித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 4 இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர்களுக்கு தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சி.வி. கணேசன் பணிநியமன ஆணைகளை வழங்கினார். வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, இளைஞர்களுக்கு பயன்பெறும் வகையில் தொழில்நெறி வழிகாட்டும் நிகழ்ச்சிகள் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை செயல்படுத்தி வருகிறது. 2,764 தொழில்நெறி வழிகாட்டுதல் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு 3,16,916 மாணவர்கள் மற்றும் வேலைநாடுநர்கள் பயன் அடைந்துள்ளனர். […]

Loading

செய்திகள்

பெருங்குடி, கொடுங்கையூரில் 48.41 லட்சம் டன் திடக்கழிவுகள் அகற்றப்பட்டது

சென்னை, டிச. 11: சென்னை மாநகராட்சியில் பெருங்குடி மற்றும் கொடுங்கையூரில் உள்ள குப்பை கொட்டும் வளாகங்களில் இதுவரை 48.41 லட்சம் டன் திடக்கழிவுகள் பயோ மைனிங் முறையில் அகற்றி 100.29 ஏக்கர் நிலம் மீட்டெடுக்கப்பட்டுள்ளது. பெருங்குடி குப்பை கொட்டும் வளாகத்தின் 250 ஏக்கர் ஆகும். இதில் 225 ஏக்கர் பரப்பளவில் திடக்கழிவுகள் கொட்டப்பட்டு வந்தது. இதில் 27.50 லட்சம் டன் அளவில் திடக்கழிவுகள் உள்ளது என கணக்கிடப்பட்டது. இத்திடக்கழிவுகளை பயோமைனிங் முறையில் அகற்றி நிலத்தினை மீட்டெடுக்க ரூ.350.65 […]

Loading

செய்திகள்

தி.மு.க.வில் இணைந்த விஜய்யின் முன்னாள் செயலாளர் பி.டி. செல்வகுமார்

சென்னை, டிச.11: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் முன்னாள் செயலாளர் பி.டி.செல்வகுமார், தி.மு.க.வில் இன்று இணைந்தார். சென்னையில் முதல்வரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து, அவர் நடத்தி வந்த கலப்பை மக்கள் இயக்கத்தை தி.மு.க.வில் இணைத்தார். அவருடன் அதன் நிர்வாகிகள் அனைவரும் தி.மு.க.வில் இணைந்தனர். விஜய்யின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகருடன் இணைந்து பணியாற்றிய செல்வகுமார், பின்னர் விஜய்யின் மேலாளர் ஆனார். பந்தா பரமசிவம், ஒன்பதுல குரு உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ள செல்வகுமார், புலி, ஜெயில் […]

Loading

சிறுகதை பாண்டிய கட்டபொம்மன்

கட்டபொம்மன் கைதை மறைத்த ஆங்கிலேயர்கள்

கட்டபொம்மன் – 4  செப்டம்பர் 6ல் கோட்டையை விட்டு தப்பி சென்று கோலார்ப்பட்டி பாளையத்துக்கு செல்கிறார் கட்டபொம்மன். இந்த தகவல் எதிரி பாளையக்காரர்களுக்கு தெரிந்து, கோலார்ப்பட்டி அரண்மனையை அவர்கள் சூழ்ந்து கொள்கின்றனர். அங்கிருந்தும் கட்டபொம்மன் தப்புகிறார். அங்கிருந்து மெட்ராஸ்க்கு சென்று நியாயம் கேட்க முடிவு செய்து மெட்ராஸ்க்கு பயணமாகிறார் கட்டபொம்மன். செல்லும் வழியில் திருக்களம்பூர் காடுகளில் மறைந்து இருக்கிறார்கள். அதற்குள் ஆங்கிலேயர்கள், அனைத்து பாளையக்காரர்களுக்கும், கட்டபொம்மன் கோட்டையை விட்டு வெளியேறிவிட்டார். அவருக்கு அடைக்கலமோ ஆதரவோ அளித்தால் கடுமையான […]

Loading

செய்திகள்

தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரி சுப்ரியா சாகுவுக்கு ஐ.நா.வின் உயரிய சுற்றுச்சூழல் விருது

சென்னை, டிச. 11: ஐ.நா.வின் உயரிய சுற்றுச்சூழல் விருதான ‘சாம்பியன்ஸ் ஆப் எர்த்’ (பூமியின் வெற்றியாளர்கள்) விருது தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரி சுப்ரியா சாகுவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சுப்ரியா சாகுவின் பணிகள் தொடர இவ்விருது பெரும் ஊக்கமாக அமையும் என்று அவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். சுப்ரியா சாகு தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் பருவநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளராக தற்போது பணியாற்றி வருகிறார். ஐ.நா.வின் உயரிய சுற்றுச்சூழல் விருதான ‘சாம்பியன்ஸ் ஆப் எர்த்’ […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

ஆப்கானிஸ்தான் மீது பயங்கரவாதத்தை ஏவி விடும் பாகிஸ்தான்: ஐ.நா.சபையில் இந்தியா கண்டனம்

நியூயார்க், டிச. 11– ஆப்கானிஸ்தான் மீது பயங்கரவாதத்தை ஏவி விடும் பாகிஸ்தானுக்கு, ஐநா பாதுகாப்பு சபையில் இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. நம் அண்டை நாடான பாகிஸ்தானுக்கும், தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானுக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது. பாகிஸ்தான் நடத்திய வான்வழி தாக்குதலில் ஆப்கானிஸ்தான் அணியின் இளம் கிரிக்கெட் வீரர்கள், பொதுமக்கள் என பலர் உயிரிழந்தனர். இருதரப்பு மோதலை முடிவுக்கு கொண்டு வர கத்தார், துருக்கி ஆகிய நாடுகள் மத்தியஸ்தம் செய்தன. ஆனால், அவ்வப்போது தொடர்ந்து தாக்குதல் நடத்தி […]

Loading

செய்திகள்

செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை பணி

விழுப்புரம், டிச. 11: விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் வட்டம், பொியசெவலை செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 2025 – 2026 ஆம் ஆண்டிற்கான கரும்பு அரவை பணியினை கலெக்டர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான், க.பொன்முடி எம்.எல்.ஏ. முன்னிலையில் துவக்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவ: முதலமைச்சர், விவசாயம் மற்றும் விவசாயிகளின் நலன் கருதி வேளாண்மை துறைக்கென்று தனி நிதிநிலை அறிக்கையினை வௌியிட்டதோடு, பல்வேறு சிறப்புத் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில், விவசாயத்திற்கு இலவச மின்சாரம் […]

Loading