செய்திகள்

ஈரோட்டில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் : செங்கோட்டையன் தகவல்

ஈரோடு, டிச.12: டிசம்பர் 18ம் தேதி ஈரோட்டில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பேசுகிறார். ஈரோட்டில் த.வெ.க. சார்பில் விஜய் பிரச்சார பொதுக்கூட்டம் 18-ந் தேதி விஜயமங்கலம் சரளை பகுதியில் நடைபெற உள்ளது. இதற்காக 19 ஏக்கர் பரப்பளவில் இடம் தேர்வு செய்யப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுகுறித்து தவெக நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- தவெக தலைவர் விஜய் வருகிற 18-ம் தேதி ஈரோடு […]

Loading

செய்திகள்

சபரிமலையில் மண்டல பூஜைக்கு 40 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி

சபரிமலை, டிச.12: சபரிமலையில் மண்டல பூஜைக்கு 40 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளனர். இதற்கான ஆன்லைன் முன்பதிவு நேற்று தொடங்கியது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு சீசனையொட்டி கடந்த மாதம் (நவம்பர்) 16-ந் தேதி நடை திறக்கப்பட்டது. மறுநாள் முதல் சிறப்பு பூஜை, வழிபாடு நடந்து வருகிறது. கடந்த ஆண்டை போலவே ஆன்லைன் முன்பதிவு, உடனடி தரிசன முன்பதிவு மூலம் ஐயப்பனை தரிசிக்க பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். அந்த வகையில் சீசனின் தொடக்கத்தில் ஆன்லைன் […]

Loading

செய்திகள்

‘ஜெயிலர் – 2’ படப்பிடிப்பில் ‘கேக்’ வெட்டி பிறந்தநாள் கொண்டாடினார் ரஜினிகாந்த்

சென்னை, டிச. 12: ‘ஜெயிலர்–2’ படப்பிடிப்பு தளத்தில் இன்று தனது 75–வது பிறந்த நாளை நடிகர் ரஜினிகாந்த் கேக் வெட்டி கொண்டாடினார்.வெள்ளை வேட்டி, சட்டை அணிந்து படப்பிடிப்பு தளத்துக்கு வந்தார் ரஜினிகாந்த். அவருடன் இயக்குநர் நெல்சன் உள்பட ஜெயிலர் 2 படக்குழுவினருடன் இணைந்து கேக் வெட்டினர். ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் 1999ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற படையப்பா இன்று ரீ– ரிலீஸ் ஆகியுள்ளது. இந்தப் படத்தின் முதல் காட்சி காலை […]

Loading

செய்திகள்

காங்கிரஸ் எம்.பி.க்களுடன் ராகுல்காந்தி ஆலோசனை

புதுடெல்லி, டிச. 12: காங்கிரஸ் எம்.பி.க்களுடன் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆலோசனை மேற்கொண்டார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த டிசம்பர் 1–ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. அவையில் தேர்தல் சீர்திருத்தம், எஸ்ஐஆர், இண்டிகோ விவகாரம் உள்ளிட்ட பிரச்சினைகளை எதிர்க்கட்சிகள் எழுப்பி வருகின்றன. வருகிற டிசம்பர் 19–ந்தேதியுடன் கூட்டத்தொடர் நிறைவு பெற உள்ள நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று மக்களவை காங்கிரஸ் எம்.பி.க்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். தற்போது அவையில் நடைபெற்று வரும் விவாதங்கள், இனி […]

Loading

செய்திகள்

ஒரு லட்சத்தை நெருங்கும் தங்கம் விலை

சென்னை, டிச.12: வரலாறு காணாத புதிய உச்சமாக தங்கம் விலை அசுர வேகத்தில் உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1600 அதிகரித்து ஒரு சவரன் ரூ.98 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்​வ​தேச பொருளா​தார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்​திய ரூபா​யின் மதிப்பு ஆகிய​வற்​றின் அடிப்படை​யில், தங்​கத்​தின் விலை நிர்​ண​யிக்​கப்​படுகி​றது. சர்வதேச அளவில் முதலீட்டாளர்கள் தங்கம் மற்றும் வெள்ளியில் அதிகளவில் முதலீடு செய்யத் தொடங்கி உள்ளனர். இதனால் இவற்றின் தேவை […]

Loading

செய்திகள்

38 மாவட்டங்களில் அரசுக் கல்லூரிகளுக்கான உதவிப்பேராசிரியர் தேர்வு

சென்னை, டிச.12: ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிக்கைப்படி 2025–ம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் அரசு கல்வியியல் கல்லூரிகளுக்கான உதவிப்பேராசிரியர் தேர்வு எதிர்வரும் 27–ந் தேதி அன்று (காலை மற்றும் மாலை) நடத்தப்பட உள்ளது. இத்தேர்வு 38 மாவட்டங்களிலும் 195 மையங்களில் நடைபெற உள்ளது. தேர்வர்கள் தேர்வு நடைபெறும் மையம் சார்ந்த விவரங்கள் தேர்வர்களின் நுழைவுச் சீட்டில் உள்ளது. இத்தேர்விற்கு விண்ணப்பித்த தேர்வர்களுக்கு நுழைவுச் சீட்டு ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் […]

Loading

சிறுகதை பாண்டிய கட்டபொம்மன்

கர்ப்பிணியான கட்டபொம்மன் மனைவி ஜக்கம்மா கைது

கட்டபொம்மன் – 5 ஆங்கிலேயர்களை பார்த்து, நீங்கள் என்ன நினைத்து என்னை வைத்து இருக்கிறீர்கள் என்று எனக்கு தெரியும், ஏன் காலம் கடத்துகிறீர்கள், நீங்கள் நினைத்ததை உடனே நிறைவேற்றுங்கள் என்று கட்டபொம்மன் கர்ஜித்து இருக்கிறார். கட்டபொம்மனை கைது செய்வதற்கு முன்பாக, அனைத்து பாளையக்காரர்களுக்கும் ஆங்கிலேயேர்கள் தபால் அனுப்பி, தங்களது கோட்டையை அழித்துவிட வேண்டும், ஆயுதங்களை எங்களிடம் ஒப்படைத்துவிட வேண்டும் என தெரிவித்து இருக்கின்றனர். அவர்களும் அதேபோல் செய்து விட்டு, கயத்தாறு வருகின்றனர். பாஞ்சாலங்குறிச்சியில் கோட்டை இடிக்கப்பட்டு உப்பு […]

Loading

செய்திகள் முழு தகவல்

ஆந்திராவில் பஸ் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து: 9 பேர் பலி

அமராவதி, டிச. 12: ஆந்திராவில் பஸ் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த 35 பேர் தனியார் பேருந்து ஒன்றில் பத்ராசலம் பகுதியில் உள்ள ராமர் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றுள்ளனர். அங்கு தரிசனம் முடிந்த பிறகு அன்னாவரம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது பஸ் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Loading

செய்திகள்

தமிழக பொறுப்பு டிஜிபி பதவி: அபய் குமார் சிங்கிற்கு கூடுதலாக ஒப்படைப்பு

சென்னை, டிச. 12: தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவின் இயக்குநர் அபய்குமார் சிங் பொறுப்பு டிஜிபியாக நியமிக்கப்பட்டிருக்கிறார். தமிழ்நாடு காவல்துறையின் பொறுப்பு டிஜிபியாக கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் வெங்கட்ராமன் பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் பொறுப்பு டிஜிபி​யாக உள்ள வெங்​கட​ராமனுக்கு நேற்று முன்​தினம் சுவாசிப்​ப​தில் சிரமம் இருந்​த​தாகக் கூறப்​படு​கிறது. இதையடுத்து அவர் கிண்டி கலைஞர் நூற்​றாண்டு உயர் சிறப்பு மருத்​து​வ​மனைக்​குச் சென்​றார். அங்கு சில மருத்​து​வப் பரிசோதனை​கள் மேற்​கொள்​ளப்​பட்டன. தொடர்ந்​து, அப்​போலோ மருத்​து​வ​மனை​யில் […]

Loading

செய்திகள்

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருப்பது தீபத் தூண் அல்ல : தமிழக அரசு வாதம்

மதுரை, டிச. 12: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருப்பது தீபத் தூண் அல்ல என்று தமிழக அரசு சார்பில் வாதிடப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கடந்த 1-ந்தேதி பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக திருப்பரங்குன்றம் கோவில் செயல் அலுவலர் சார்பிலும், மதுரை மாவட்ட கலெக்டர் சார்பிலும் தனித்தனியாக மதுரை ஐகோர்ட் டிவிஷன் பெஞ்சில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதில் இந்து அமைப்புகளை சேர்ந்த ராம ரவிக்குமார், […]

Loading