செய்திகள்

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து அமெரிக்க செயற்கைக்கோள் நாளை மறுநாள் விண்ணில் ஏவப்படுகிறது இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்

சென்னை, டிச.13- அமெரிக்காவின் 6.5 டன் எடை கொண்ட தகவல் தொடர்பு செயற்கைக்கோளை ஸ்ரீஹரி கோட்டாவில் இருந்து நாளை மறுநாள் விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. அமெரிக்காவிலுள்ள டெக்சாஸை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஏ.எஸ்.டி. நிறுவனம் செல்போன் சேவைக்கான 6.5 டன் எடை கொண்ட ‘புளூபேர்ட்- 6′ என்ற தகவல் தொடர்பு செயற்கைக்கோளை உருவாக்கி உள்ளது. இந்த செயற்கைக்கோளை, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) கீழ் செயல்படும், ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா, […]

Loading

சிறுகதை பாண்டிய கட்டபொம்மன்

கட்டபொம்மனின் கடைசி நிமிடம்

கட்டபொம்மன் – 6 பாஞ்சாலங்குறிச்சி மீது படையெடுத்து சென்ற பானர்மேன், கயத்தாறில் நடந்த சம்பவத்தை குறிப்பிட்டு எழுதும்போது, கட்டபொம்மனை தூக்கிலிடும் அந்த கடைசி நிமிடம் ‘அன்று மலர்ந்த செந்தாமரை மலர் போல் கட்டபொம்மனின் முகம் இருந்ததாக’ வர்ணிக்கிறார். மரண பயமோ, வாட்டமோ எதுவுமே அவர் முகத்தில் தெரியவில்லை. கைகளில் கால்களில் விலங்குகள் பூட்டியிருந்தாலும், காலை நன்றாக பூமியில் பதித்து நடந்து வந்தார். அப்படி வரும்போது இருபுறமும் பாளையக்காரர்களை கம்பீரமாக பார்த்தபடியே நடந்து வந்தார். அப்போது ஆங்கிலேயர்களுக்கு உதவி […]

Loading

செய்திகள்

‘சார்’ பணிகளுக்காக 12 வாக்காளர் பட்டியல் பார்வையாளர்கள் தேர்தல் ஆணையம் நியமனம்

சென்னை, டிச.13– இந்திய தேர்தல் ஆணையம், 1.1.2026-ஐ தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்ட சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகளுக்காக 12 வாக்காளர் பட்டியல் பார்வையாளர்களை நியமித்துள்ளது. 2026–ம் ஆண்டுக்கான சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக, அனைத்து வாக்காளர் பட்டியல் பார்வையாளர்களுடன் விரிவான விளக்க கூட்டம், தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமையில் நேற்று (12–ந் தேதி) சென்னை தலைமைச் செயலகத்தில் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தின் போது, தலைமைத் தேர்தல் அதிகாரி, திருத்தக் காலம் முழுவதும் வாக்காளர் […]

Loading

செய்திகள்

வளசரவாக்கத்தில் ஆக்கிரமித்துக் கட்டியிருந்த 10 ஆயிரம் சதுர அடி கட்டிடம் இடிப்பு

சென்னை, டிச.13– உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி, வளசரவாக்கம் மண்டலம், நெற்குன்றம், பெருமாள் கோயில் தெருவில், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் இடத்தில் சுமார் 10 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் தரைத்தளம் மற்றும் இரண்டு தளங்களுடன் கட்டப்பட்டிருந்த ஆக்கிரமிப்புக் கட்டடம், மாநகராட்சியின் அலுவலர்களால், காவல் துறை, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், தமிழ்நாடு மின்சார வாரியத்தைச் சார்ந்த அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து நேற்று (12–ந் தேதி) ஜே.சி.பி. இயந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டது. இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் சென்னை மாநகராட்சி […]

Loading

செய்திகள்

கருப்பைவாய் புற்றுநோய் இலவச தடுப்பூசி திட்டம் இம்மாத இறுதியில் முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்கிறார் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை, டிச.13– இந்தியாவிலேயே முதல்முறையாக முதலமைச்சரால் இம்மாத இறுதிக்குள் தொடங்கப்படவுள்ள எச்.பி.வி. (HPV) – கருப்பைவாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டத்தின்மூலம் தமிழ்நாட்டில் 3.38 லட்சம் பெண் குழந்தைகள் பயன்பெறுவார்கள் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை கூட்டரங்கில், உலக எய்ட்ஸ் தினம் 2025 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்று, எச்ஐவி, எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு பதாகைகள் வெளியிட்டார். […]

Loading

செய்திகள்

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் அரசியல் கட்சி பிரதிநிதகளுடன் விழுப்புரம் கலெக்டர் ஆலோசனை

விழுப்புரம், டிச. 13– விழுப்புரம் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கான ஆலோசனைக்கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட தேர்தல் அலுவலரும் கலெக்டருமான ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கினார். சிறப்பு வாக்காளர் பட்டியல் மேற்பார்வையாளர் (வடக்கு மண்டலம்) ராமன்குமார் கலந்துகொண்டு, வாக்காளர் பட்டியலில் முகவரி மாற்றம், இறப்பு போன்ற விவரங்கள் குறித்தும், புதிய வாக்காளர்களை பட்டியலில் சேர்ப்பதற்கான விவரங்கள் குறித்தும் கேட்டறிந்தார். அப்போது […]

Loading

செய்திகள்

பழவேற்காடு தீவுகளில் பிளாஸ்டிக் சேகரிப்பு, மரம் நடும் விழா

பொன்னேரி டிச-13 தமிழ்நாடு வனத்துறை – பழவேற்காடு பறவைகள் சரணாலயம், பிஸ்லெரியின் முதன்மைத் திட்டம், சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, பழவேற்காடு வனத்துறை மற்றும் பறவைகள் சரணாலயம், நிலையான சுற்றுச்சூழல் மற்றும் கடலோர மீன்வள ஆராய்ச்சி அறக்கட்டளை, சமூகம் சார்ந்த கிராமப்புற மேம்பாட்டு அறக்கட்டளை ஆகியவை இணைந்து பழவேற்காடு ஏரி நடுவிலுள்ள திட்டுதீவுகளில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் மரக்கன்று நடும் நிகழ்வு நடைபெற்றது. இதில் ஒரு பகுதியாக, பறவைகள் வாழும் தீவுகளில் காணப்படும் பிளாஸ்டிக் மற்றும் பிற […]

Loading

கதைகள் சிறுகதை

சிறுகதை … அரத்தூண் சாலை…!

ராஜா செல்லமுத்து வடசென்னைக்கு வந்த தாமோதரனுக்கு ராயபுரத்தில் உள்ள அரத்தூண் சாலை என்ற பெயரைப் பார்த்ததும், அவன் படித்தது ஞாபகத்திற்கு வந்தது. ‘இந்த அரத்தூண் சாலை 18ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இது அரத்தூண் என்ற பெயர் ஆர்மீனியர்களின் கல் தூண் அல்லது அரண்மனையிலிருந்து வந்திருக்கலாம்.ஆங்கிலேயர்கள் மெட்ராஸ் நகரத்தை நிறுவிய போது, செயின்ட் ஜார்ஜ் கோட்டையைச் சுற்றியுள்ள பகுதிகள் வெள்ளையர் நகரம் என்றும் வடக்கு பகுதிகள் ஜார்ஜ் டவுன் – ராயபுரம் உட்பட கருப்பர் நகரம் என்றும் அழைக்கப்பட்டது. […]

Loading

செய்திகள்

பனகல் பூங்கா முதல் போட் கிளப் வரை சுரங்கம் அமைக்கும் பணியை தொடங்கியது ‘‘மயில்’’ இயந்திரம்

சென்னை, டிச. 13– பனகல் பூங்கா நிலையம் முதல் போட் கிளப் நிலையம் வரை சுரங்கம் அமைக்கும் பணியை “மயில்” சுரங்கம் தோண்டும் இயந்திரம் தொடங்கியது. சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், கட்டம் 2-ல் 118.9 கி.மீ. நீளத்திற்கு மேலும் 3 வழித்தடங்களை கட்டி முடிக்க திட்டமிட்டு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் கட்டம்–2 வழித்தடம் 4 கலங்கரை விளக்கத்திலிருந்து பூந்தமல்லி புறவழிச்சாலை வரை அமைக்கப்படவுள்ளது. இதில் மெரினா கடற்கரையில் உள்ள […]

Loading

செய்திகள்

567 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி: சேகர்பாபு வழங்கினார்

சென்னை, டிச.12: இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, திரு,வி.க. நகர் மண்டலத்திற்குட்பட்ட சென்னைப் பள்ளிகளில் 11–ம் வகுப்பு பயிலும் 567 மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். பந்தர்கார்டனில் உள்ள சென்னை மேல்நிலைப் பள்ளியில் 120 மாணவர்களுக்கும், மார்க்கெட் சாலையில் உள்ள சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 198 மாணவிகளுக்கும், கொளத்தூர் பள்ளி சாலையில் உள்ள சென்னை மேல்நிலைப் பள்ளியில் 249 மாணவ, மாணவிகளுக்கும் விலையில்லா மிதிவண்டிகளை அமைச்சர் பி.கே.சேகர்பாபு வழங்கினார். இந்நிகழ்வுகளில் மத்திய வட்டார துணை […]

Loading