செய்திகள்

ரூ.1 லட்சத்தை நெருங்கிய தங்கம் விலை

சென்னை, டிச. 15: தங்கம் விலை சவரன் ரூ. 1 லட்சத்தை நெருங்கியது. தங்கம் விலை மீண்டும் கட்டுக்கடங்காத வகையில் உயர்ந்து வருகிறது. இந்த அதிரடி விலை உயர்வுக்கு, அமெரிக்க மத்திய பெடரல் வங்கி வட்டி விகிதத்தை குறைத்ததுதான் முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. பொதுவாக வட்டி விகிதம் குறைப்பதால், முதலீட்டாளர்கள் அரசு பத்திரங்கள், சேமிப்புகளில் முதலீடு செய்வதை குறைத்து, தங்கத்தின் மீது தங்கள் கவனத்தை அதிகம் திருப்புவார்கள். அப்படியாக முதலீட்டாளர்கள் தங்கத்தில் அதிக முதலீடு செய்வதால் அதன் […]

Loading

செய்திகள்

விஜய் பிரசார இடத்துக்கு ரூ.50 ஆயிரம் வாடகை

ஈரோடு, டிச. 15: ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே விஜயபுரி அம்மன் கோவிலுக்கு சொந்தமான 31 ஏக்கர் நிலத்தில் வரும் 18-ந்தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தில், கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்று பேச இருக்கிறார். இந்த நிலையில், கூட்டம் நடத்த அனுமதி கேட்டு ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜாதாவிடம் த.வெ.க. சார்பில் மனு அளிக்கப்பட்டது. இதற்கிடையே, கடந்த 12-ந்தேதி கோவிலின் செயல் அலுவலர் தனலட்சுமி கோவில் […]

Loading

செய்திகள்

அமமுகவை தவிர்த்து விட்டு எந்த கூட்டணியும் ஆட்சி அமைக்க முடியாது: டிடிவி தினகரன்

தஞ்சாவூர், டிச. 15: அமமுகவை தவிர்த்து விட்டு எந்த கூட்டணியும் ஆட்சி அமைக்க முடியாது என்று டிடிவி தினகரன் கூறினார். தஞ்சையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- 2026 சட்டசபை தேர்தலில் தமிழ்நாட்டில் 4 முனை போட்டி ஏற்படும். எங்கள் தலைமையில் கூட்டணி கிடையாது. ஆனால் வெற்றி கூட்டணியில் இடம்பெறுவோம். டிசம்பர் 31-ம் தேதிக்குள் கூட்டணி முடிவாகிவிடும் என எதிர்பார்த்தோம்; ஆனால் தள்ளிப்போகிறது; கூட்டணி தொடர்பாக முடிவெடுக்க அமமுகவிற்கு பிப்ரவரி மாதம் வரை அவகாசம் […]

Loading

செய்திகள் முழு தகவல்

பா.ம.க.விலிருந்து விலகத் தயார்: ஜி.கே.மணி பரபரப்பு பேட்டி

சென்னை, டிச. 15: பா.ம.க.வில் ஏற்பட்ட பிரச்சனைக்கு காரணம் அன்புமணி மட்டுமே என ஜி.கே. மணி குற்றம்சாட்டினார். பாமகவில் ராமதாஸ், அன்புமணி இடையிலான அதிகார மோதல் தொடர் கதையாகி வருகிறது. குறிப்பாக ராமதாஸ் பின்னால் இருப்பவர்கள் தவறாக வழிநடத்துகின்றனர் என்று அன்புமணி தரப்பு குற்றச்சாட்டை முன்வைக்கிறது. அதிலும் ஜி.கே.மணி மீது கடும் விமர்சனங்களை கூறி வருகின்றனர். இவரை துரோகி என்று அன்புமணி தரப்பு விமர்சித்துள்ளது. நேற்றைய தினம் முன்னாள் மத்திய இணையமைச்சர் ஏ.கே.மூர்த்தியின் இல்ல திருமண விழாவில் […]

Loading

செய்திகள்

சிதம்பரம் கிரீடு தொண்டு நிறுவனத்தில் ஆகாயத்தாமரை கைவினைப் பயிற்சி

சிதம்பரம், டிச. 15: ஆகாயத்தாமரை தண்டுகளிலிருந்து கைவினைப் பொருள்கள் தயாரிக்கும் பயிற்சியின் நிறைவு விழா சிதம்பரம் கிரீடு தொண்டு நிறுவன பயிற்சி மையத்தில் நடைபெற்றது. ஆகாயத்தாமரை தண்டுகளிலிருந்து கைவினைப் பொருள்கள் தயாரிக்கும் இரண்டு வார பயிற்சி நிறைவு பெற்றது. கிரீடு தொண்டு நிறுவனம் மற்றும் ஹோப் நிறுவனம் இணைந்து நடத்திய பயிற்சியின் நிறைவு விழாவிற்கு வந்திருந்தவர்களை கிரீடு தொண்டு நிறுவன மேலாளர் நீலகண்டன் வரவேற்றார். அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் கடல்வாழ் உயிரியல் உயராய்வு மைய இயக்குனர் பேராசிரியர் ராமநாதன் […]

Loading

செய்திகள்

3 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் புறப்பட்டார் பிரதமர் மோடி

புதுடெல்லி, டிச. 15: ஜோர்டான், எத்தியோப்பியா, ஓமன் ஆகிய நாடுகளுக்கு பிரதமர் மோடி 3 நாட்கள் சுற்றுப்பயணமாக இன்று காலை 9.40 மணக்கு டில்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு சென்றார். முதலில் பிரதமர் மோடி ஜோர்டான் நாட்டிற்கு செல்கிறார். ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லா பின் அல் ஹுசைனை சந்தித்து, இந்தியாவிற்கும் ஜோர்டானுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்துவது குறித்து பிரதமர் மோடி ஆலோசனை நடத்த இருக்கிறார். பின்னர் அவர் டிசம்பர் 16ம் தேதி எத்தியோப்பியாவிற்கு […]

Loading

செய்திகள்

ஜனவரி 13–ந் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி:

விவசாயிகளுடன் பொங்கல் பண்டிகை கொண்டாடத் திட்டம் புதுடெல்லி, டிச. 14– பிரதமர் மோடி தமிழக விவசாயிகளுடன் பொங்கல் பண்டிகை கொண்டாடுவதற்காக தமிழகம் வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. பிரசாரம், பொதுக்கூட்டம், நலத்திட்டப்பணிகள், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை, கட்சி கட்டமைப்பை மேலும் வலுப்படுத்துதல் என பல்வேறு நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் […]

Loading

செய்திகள்

பெசன்ட் நகர் கடற்கரையில் பெண்கள் உரிமை, பாதுகாப்பு விழிப்புர்ணவு நடைபயணம்

மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரன் துவக்கி வைத்தார் சென்னை, டிச. 14– பெண்கள் உரிமை மற்றும் பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வினை ஏற்படுத்திடும் வகையில், பெசன்ட் நகர் கடற்கரையில் அமைக்கப்பட்ட மணல் சிற்பம் மற்றும் விழிப்புணர்வு நடைபயணத்தை மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன் தொடங்கி வைத்தார். சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் பெண்கள், சிறுமிகள் மற்றும் அனைத்து பாலினங்களும் தன்னம்பிக்கை, மரியாதை மற்றும் பாதுகாப்புடன் நகரத்தில் வாழும் சூழலை உருவாக்குவதில் சென்னை மாநகராட்சி தொடர்ச்சியான பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது. இதன் […]

Loading

செய்திகள்

பெரியமேடு பகுதியில் செல்போன் திருடன் கைது

சென்னை, டிச. 14– பெரியமேடு பகுதியில் பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த நபரின் செல்போனை பறித்துக் கொண்டு தப்பி ஓடிய வடமாநில ஆசாமியை போலீசார் கைது செய்தனர். மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த முக்தார் ஆலம், நேற்று ரெயில் மூலம் சென்னை சென்டிரல் இரயில் நிலையம் வந்திறங்கி, புழல் செல்வதற்காக பார்க் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அருகில் வந்த ஒரு நபர் திடீரென முக்தார் ஆலம் பாக்கெட்டில் வைத்திருந்த விவோ செல்போனை திருடிக் கொண்டு தப்பிச் சென்றுவிட்டார். […]

Loading

செய்திகள்

குடும்ப தகராறு: சென்னை ஐகோர்ட் வக்கீல் தூக்குப்போட்டு தற்கொலை

விழுப்புரம், டிச. 14– குடும்ப தகராறு காரணமாக சென்னை ஐகோர்ட் வக்கீல் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் ரோஷணை வெள்ளவாரி ரோடு பகுதியை சேர்ந்த சாமிநாதன் மகன் சாமிசந்திரன் (வயது 38), சென்னை ஐகோர்ட்டில் வக்கீலாக பணி புரிந்து வந்தார். இவருக்கும் திருக்கோவிலூர் பகுதியை சேர்ந்த காமாட்சி என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு குழந்தை இல்லை. இந்த நிலையில் கணவன்- – மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப […]

Loading