செய்திகள்

சென்னையில் காணாமல் போன 65 வயது மூதாட்டியை மீட்டு குடும்பத்தினருடன் ஒப்படைத்த காவல் கரங்கள் குழுவினர்

சென்னை, டிச. 19: முத்தியால்பேட்டை பகுதியில் காணாமல் போன 65 வயது மாற்றுத்திறனாளி மூதாட்டியை காவல் கரங்கள் குழுவினர் மூலம் மீட்கப்பட்டு, காவல் ஆணையாளர் வழிகாட்டுதலின்பேரில் குடும்பத்தாருடன் ஒப்படைக்கப்பட்டனர். தாம்பரம் காவல் ஆணையரக செம்மஞ்சேரி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பேருந்து நிலையம் அருகில் வாய் பேச முடியாமல் ஆதரவற்ற நிலையில் மூதாட்டி ஒருவர் இருப்பதாக காவல் கரங்கள் உதவி எண்ணிற்கு மூதாட்டியின் புகைபடத்துடன் விவரங்கள் அனுப்பி மூதாட்டியை மீட்குமாறு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் சென்னை பெருநகர காவல் […]

Loading

செய்திகள்

திருப்பத்தூரில் சிறுபான்மையினருக்கு நலத்திட்ட உதவிகள் அமைச்சர் நாசர் வழங்கினார்

திருப்பத்தூரில் நடைபெற்ற தேசிய சிறுபான்மையினர் உரிமைகள் தின விழாவில் அமைச்சர் சா.மு.நாசர் கலந்து கொண்டு சிறுபான்மையினர் இனத்தை சார்ந்த 2,981 பயனாளிகளுக்கு ரூ.22.51 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் அமைச்சர் சா.மு.நாசர் பேசுகையில், முதலமைச்சர் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவராக சொ.ஜோ அருண்.சே.ச. நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம், 38 மாவட்டங்களின் கள ஆய்வு அறிக்கையை முதலமைச்சரிடம் சமர்ப்பித்துள்ளது. இந்த அறிக்கையில் சிறுபான்மையினர் நலன்கள் குறித்த பல்வேறு கோரிக்கைகள் மற்றும் […]

Loading

செய்திகள்

வேலூரில் சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு பேருந்து பயண அட்டை கலெக்டர் வழங்கினார்

வேலூர், டிச. 19: வேலூர் மாவட்டத்தில் சுதந்திரப் போராட்ட தியாகிகள் மற்றும் அவர்தம் வாரிசுதாரர்களுக்கான குறைத்தீர்வு நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் வே.இரா.சுப்புலெட்சுமி தலைமையில் நடைபெற்றது. வேலூர் மாவட்டத்தில் சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவர்தம் வாரிசுதாரர்களுக்கு குடியரசு மற்றும் சுதந்திர தின விழாவிற்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டு இவ்விழாக்களில் கலெக்டர் சால்வை அணிவித்தும் பரிசு பொருள் வழங்கியும் சிறப்பிக்கப்படுகிறார்கள். மேலும் இவர்களுக்கென நடத்தப்படும் சிறப்பு குறைதீர்வு கூட்டத்தில் இவர்களின் குறைகளை கேட்டறிந்து சம்பந்தப்பட்ட துறையின் மூலம் குறைகள் […]

Loading

செய்திகள்

சென்னை கடற்கரை பகுதிகளை பாதுகாக்க கடல் சார் உயரடுக்கு பாதுகாப்புப் படை அமைச்சர் ராஜகண்ணப்பன் துவக்கிவைத்தார்.

சென்னை, டிச.19– சென்னை கடற்கரை பகுதிகளை பாதுகாக்க, தமிழ்நாடு அரசால் கடல்சார் உயரடுக்கு பாதுகாப்புப் படை அமைக்கப்பட்டு, அதனை வனத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் தொடங்கி வைத்தார். சென்னை கடற்கரை முழுவதும், குறிப்பாக கரையிலிருந்து ஐந்து கடல் மைல் வரையிலான எல்லைக்குள், தொடர்ச்சியான ரோந்து பணி மேற்கொள்ளப்படும். சட்டவிரோத மீன்பிடிப்பு மற்றும் வன உயிரின குற்றங்களுக்கு எதிராக எவ்வித சமரசமும் இல்லாத அணுகுமுறை கடைப்பிடிக்கப்படும். நவம்பர் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை நடைபெறும் ஆலிவ் ரிட்லி கடல் […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் பிரதமர் மோடி முன்னிலையில் கையெழுத்து

மஸ்கட், டிச.19: பிரதமர் மோடி முன்னிலையில், இந்தியா-ஓமன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, ஓமனுக்கு ஏற்றுமதி ஆகும் 99 சதவீத இந்திய பொருட்களுக்கு ஓமன் வரி விதிக்காது. ஜோர்டான், எத்தியோப்பியா ஆகிய நாடுகளை தொடர்ந்து ஓமன் தலைநகர் மஸ்கட் சென்ற பிரதமர் மோடி முன்னிலையில் இந்தியா-–ஓமன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்தியா சார்பில், மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை மந்திரி பியூஸ் கோயலும், ஓமன் சார்பில் அந்நாட்டு வர்த்தகம் மற்றும் தொழில்துறை […]

Loading

செய்திகள்

சென்னையில் மகளிர் சுய உதவிக்குழுவினர் தயாரித்த பொருட்கள் விற்பனை கண்காட்சி உதயநிதி திறந்து வைத்தார்.

சென்னை, டிச.19– துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை, நுங்கம்பாக்கம், அன்னை தெரசா மகளிர் வளாகத்தில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் நடைபெறும் மகளிர் சுய உதவிக் குழுக்களின் தயாரிப்பு பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்ட மதி கிறிஸ்துமஸ், ஆங்கிலப் புத்தாண்டு மற்றும் பொங்கல் விற்பனைக் கண்காட்சியினை திறந்து வைத்து பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் மதி அனுபவ அங்காடியில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் தயாரிப்புப் பொருட்களை வாங்கிட வாடிக்கையாளர்களை ஊக்குவிக்கும் வகையில் வாடிக்கையாளர் அட்டைகளை அறிமுகப்படுத்தினார். இந்த வாடிக்கையாளர் […]

Loading

செய்திகள்

நடுவானில் ஏர் இந்தியா விமானம் பழுது: கொச்சியில் அவசர தரையிறக்கம்

கொச்சி, டிச. 18: நடுவானில் ஏற்பட்ட பழுது காரணமாக சவுதி அரேபியாவில் இருந்து வந்து கொண்டிருந்த ஏர் இண்டியா எக்ஸ்பிரஸ் விமானம் கொச்சி விமான நிலையத்தில் அவசர அவசரமாக தரையிறங்கியது. இதனால் 160 பயணிகள் உயிர்தப்பினர். சவுதி அரேபியாவின் ஜெட்டா விமான நிலையத்தில் இருந்து கேரளாவின் கோழிக்கோட்டுக்கு 160 பயணிகளுடன் ஏர் இண்டியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்து கொண்டிருந்தது. நடுவானில் பறந்து கொண்டிருந்த போது திடீரென விமானத்தின் லேண்டிங் கியர் மற்றும் டயரில் பழுது ஏற்பட்டிருப்பதை விமானி […]

Loading

செய்திகள் முழு தகவல்

அமெரிக்க வரிவிதிப்பு பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணுங்கள் பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்

சென்னை, டிச.18: இந்தியப் பொருட்கள் மீதான வரிவிதிப்பினால், தமிழ்நாட்டில் ஏற்றுமதி துறைகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு, இந்திய -அமெரிக்க இருதரப்பு ஒப்பந்தம் மூலம் விரைவில் தீர்வு காண்பதற்கு முன்னுரிமை அளிக்குமாறு கேட்டு, பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் இந்தியப் பொருட்களுக்கு 50 விழுக்காடு வரி விதிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், தமிழ்நாட்டின் ஏற்றுமதித் துறைகளில் அதிகரித்து வரும் நெருக்கடிகள் குறித்து அவசரமாகவும், கவலையோடும் இதனை எழுதுவதாகக் […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

அமெரிக்க படை வீரர்களுக்கு தலா ரூ.1.60 லட்சம் கிறிஸ்துமஸ் பரிசு: அதிபர் டிரம்ப் அறிவிப்பு

வாஷிங்டன், டிச. 18: அமெரிக்காவின் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு கிறிஸ்துமஸ் பரிசாக தலா ரூ.1.60 லட்சம் வழங்கப்படும் என்று அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். சேவை மற்றும் தியாகத்தைப் போற்றும் வகையில், ’வீரர்களுக்கான ஈவுத்தொகை’ வழங்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். அதிபர் டிரம்ப் அமெரிக்க மக்களுக்கு ஆற்றிய உரையில் கூறியதாவது:– “நான் பதவிக்கு வந்த முதல் நாளிலேயே, நாட்டின் தெற்கு எல்லையில் நடந்த ஊடுருவலைத் தடுக்க உடனடி நடவடிக்கை எடுத்தேன். கடந்த 7 மாதங்களாக ஒரு வெளிநாட்டினர் கூட சட்டவிரோதமாக […]

Loading

செய்திகள் முழு தகவல்

தி.மு.க. ஒரு தீயசக்தி, த.வெ.க. ஒரு தூயசக்தி என்று விஜய் ஆவேசம்

ஈரோடு பெருந்துறையில் இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் மக்கள் சந்திப்புக் கூட்டம் நடந்தது. ஏற்கெனவே கரூர் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், முன்னெச்சரிக்கையாக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. விஜய் உள்ளிட்ட தலைவர்கள் பேசுவதற்கு மேடை எதுவும் அமைக்கப்படவில்லை. மக்கள் அமருவதற்கு நாற்காலிகளும் போடப்படவில்லை. பரப்புரை பேருந்தில் நின்று விஜய் பேசுவதை, தடுப்புகளுக்குள் நின்று மக்கள் கேட்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. கூட்ட நெரிசல் எதுவும் ஏற்படாத வகையில் 20 ஏக்கர் பரப்பளவில் 72 பிரிவுகளாகப் […]

Loading