செய்திகள்

‘நட்சத்திர கிரிக்கெட் போட்டி’ சென்னை அணி : ஐசரி கணேஷ், நடிகை ஸ்ரீபிரியா இணைந்து வாங்கினார்கள்

சென்னை, டிச. 22: நட்சத்திர கிரிக்கெட் போட்டி சென்னை அணியை தயாரிப்பாளருமான வேல்ஸ் கல்விக் குழும தலைவருமான ஐசரி கணேஷ், நடிகை ஸ்ரீபிரியா ஆகியோர் இணைந்து வாங்கினார்கள். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்பட 8 மாநில திரைப்பட துறையில் உள்ள நடிகர்கள் பங்கேற்கும் ‘செலிபிரிட்டி கிரிக்கெட் லீக்’ (சி.சி.எல்.) என்ற கிரிக்கெட் போட்டி, அடுத்த ஆண்டு (2026) ஜனவரி 16-ந்தேதி தொடங்குகிறது. சென்னை அணிக்கு ‘வேல்ஸ் சென்னை கிங்ஸ்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. நடிகர் ஆர்யாவை கேப்டனாக […]

Loading

சிறுகதை பாண்டிய கட்டபொம்மன்

கம்பெனி செல்வத்தின் வினோத திருமணம்

கட்டபொம்மன் – 15 கட்டபொம்மன், ஊமைத்துரை பிள்ளைகளை ஆங்கிலேயர்களே படிக்க வைத்துள்ளனர். அவர்கள் சிறு குழந்தைகளாக இருக்கும் போது, இவர்களிடம் வீரம் இருக்கா? இல்லையா? என்று பரிசோதிக்க ஆங்கிலேயர்கள் முடிவு செய்து, ஒரு இடத்தில் போர்கருவிகளையும், ஒரு இடத்தில் திண்பண்டங்களையும் வைத்து, இவர்களை அழைத்து உங்களுக்கு பிடித்ததை எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொன்னவுடன் இரு குழந்தைகளும் வாள்களையும், கேடயங்களையும் எடுத்துள்ளார்கள். இவர்களது ரத்தத்தில் இன்னும் வீரம் இருக்கிறது என்று வியந்து பார்த்த ஆங்கிலேயர்கள், போர்க்கலையை தவிர்த்து, அவர்களை பிஏ […]

Loading

செய்திகள்

ரூ.22 கோடியில் காவல்துறையில் கட்டிடங்கள் 9 புதிய காவல் நிலையங்கள்: ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை, டிச. 22: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், காவல் துறை சார்பில் 22 கோடியே 9 லட்சம் ரூபாய் செலவிலும், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை சார்பில் 16 கோடியே 96 லட்சம் ரூபாய் செலவிலும் மற்றும் சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை சார்பில் 68 லட்சத்து 47 ஆயிரம் ரூபாய் செலவிலும் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை திறந்து வைத்தார். மேலும், 9 புதிய காவல் நிலையங்களையும், புதிதாக உருவாக்கப்பட்ட உத்திரமேரூர், வேளாங்கண்ணி […]

Loading

செய்திகள்

ஒலிம்பிக்கில் தங்கம் வென்றால் ரூ.6 கோடி பரிசு கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா அறிவிப்பு

“கர்நாடகாவை சேர்ந்தவர்கள் ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்றால் 6 கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா அறிவித்துள்ளார். கர்நாடக ஒலிம்பிக் அசோசியேஷன் சார்பில் ‘கர்நாடக ஒலிம்பிக் – 2025’ விருது வழங்கும் விழா நேற்று பெங்களூரில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்ட முதலமைச்சர் சித்தராமையா, விளையாட்டு வீரர்களுக்கு பரிசுகளை வழங்கினார். அப்போது பேசிய சித்தராமையா, “காங்கிரஸ் அரசு விளையாட்டுக்கு அதிக முக்கியத்துவம் தருகிறது. கர்நாடகாவை சேர்ந்தவர்கள் ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்றால் 6 கோடி ரூபாயும், […]

Loading

செய்திகள்

இந்தோனேசியாவில் பஸ் விபத்து 16 பயணிகள் பலி

ஜகார்த்தா, டிச. 22: இந்தோனேசியாவில் பயணிகள் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 16 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தோனேசியாவின் ஜாவா தீவில் 34 பேர்களுடன் சுங்கச் சாலையில் நேற்று நள்ளிரவு சென்றுகொண்டிருந்த பஸ் திடீரென கட்டுப்பாட்டை இழந்து கான்கிரீட் தடுப்புச்சுவர் மீது பக்கவாட்டில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே பயணிகள் 6 பேர் உயிரிழந்தனர். காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலன் அளிக்காமல் […]

Loading

செய்திகள்

125 நாள் வேலைத்திட்ட மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல்

புதுடெல்லி, டிச. 22: 125 நாள் வேலைத்திட்ட மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். நாட்டில் கிராமப்புற வேலைவாய்ப்பிலும் மேம்பாட்டு கட்டமைப்பிலும் ஒரு தீர்க்கமான சீர்திருத்தத்தை குறிக்கும் வகையில், வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ஊரக வேலைவாய்ப்பு உறுதி மற்றும் வாழ்வாதார இயக்கம் மசோதா 2025-ஐ (‘விபி -ஜி ராம் ஜி’ மசோதா) அதாவது 125 நாள் வேலைத்திட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. இந்த சட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத சட்டம், 2005-க்கு பதிலாக கொண்டுவரப்பட்டுள்ளது. இது […]

Loading

செய்திகள்

சைபர் குற்றங்கள்: பொதுமக்களிடம் சென்னை காவல்துறை விழிப்புணர்வு பிரச்சாரம்

சென்னை, டிச. 22: சென்னை பெருநகர காவல் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் சார்பில் விருகம்பாக்கம் அடுக்குமாடி குடியிருப்பில் சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண் உத்தரவின் பேரில், மத்திய குற்றப்பிரிவு சைபர்கிரைம் துணை ஆணையாளர் டாக்டர் என்.ஸ்ரீநாதா மேற்பார்வையில் மத்திய குற்றப்பிரிவு, சைபர் கிரைம் காவல் நிலையம் சார்பில் விருகம்பாக்கம், ஆற்காடு சாலையில் உள்ள ஒய்.எஸ். என்கிளேவ் அடுக்குமாடி குடியிருப்பில் பொதுமக்களுக்கு சைபர் கிரைம் […]

Loading

செய்திகள்

வட இந்தியாவில் நீடிக்கும் கடும் பனி விமானங்கள், ரெயில்கள் சேவை பாதிப்பு

புதுடெல்லி, டிச. 22– வட இந்தியாவில் 2 நாட்களுக்கு கடும்பனி நிலவும். இதனால் விமானங்கள், ரெயில்கள் சேவை பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பஞ்சாப், ஹரியாணா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் கடும் பனி மூட்டத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் எதிரில் இருப்பது தெரியாத அளவுக்கு கடும் பனிமூட்டம் காணப்படுகிறது. இதனால் சாலை போக்குவரத்து மட்டுமல்லாது, விமான சேவைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. விமானங்கள், ரெயில்கள் ரத்து செய்யப்படுவதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். காஷ்மீரில் ‘சில்லய் […]

Loading

செய்திகள்

நடுவானில் ஏர் இந்தியா விமானத்தின் என்ஜின் செயலிழப்பு டெல்லியில் அவசரமாக தரையிறக்கம்

புதுடில்லி, டிச. 22– ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் நடுவானில் என்ஜினில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக மீண்டும் டெல்லி விமான நிலையத்தில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. டெல்லி விமான நிலையத்தில் இருந்து இன்று காலை 6.10 மணிக்கு ஏர் இந்தியா விமானம், மும்பைக்கு புறப்பட்டு சென்றது. வானத்தில் பறந்த சில நிமிடங்களில் விமானத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்பட்டது. அதாவது, இரு என்ஜின்களில் ஒன்று திடீரென செயலிழந்து விட்டது. இதனால், விமானத்தை மீண்டும் […]

Loading

செய்திகள்

‘தி நகரில் நீலகண்ட மேத்தா தெருவுக்கு நடிகை மனோரமா பெயரைச் சூட்டுங்கள்’: ஸ்டாலினுக்கு நடிகர் சங்கம் கோரிக்கை

சென்னை, டிச. 22– சென்னை தி.நகரில் உள்ள நீலகண்ட மேத்தா தெருவுக்கு மறைந்த நகைச்சுவை நடிகை ‘ஆச்சி’ மனோரமாவின் பெயரை சூட்ட வேண்டும் என்று தென்னிந்திய நடிகர் சங்கம் முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்துள்ளது. இதேபோல, மனோரமாவின் பேத்திகள்– அபிராமி பூபதி (எம்எஸ்சி பட்டதாரி), மீனாட்சி பூபதி (எம்பில் பட்டதாரி) இருவரும். இதே கோரிக்கையை முன் வைத்து முதல்வருக்கு கடிதம் அனுப்பி இருக்கிறார்கள்.’ அதில், அவர்கள் கூறியிருப்பதாவது: ‘‘திருவாரூர் மாவட்டத்தில் பிறந்த ஆச்சி என்ற மனோரமா– ஐந்து […]

Loading